நடிகர் விக்ரம்  ‘கோப்ரா; படத்தை பிரோமோட் செய்யும் விதமாக இன்று திருச்சி மற்றும் மதுரைக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக இன்று காலை திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் உரையாடினார். அந்த உரையாடல் கீழே: 


நடிகர் விக்ரம் போது, “ அந்நியன் மற்றும் 2.O, இருமுகன் ஆகிய படங்களின் கலவையாக  ‘கோப்ரா’ படம் இருக்கும். உங்களுக்கு ரொம்ப ஃப்ரஷ்ஷான படமாவும் இந்தப்படம் இருக்கும் என்ற விக்ரம்  ‘உயிர் உருகுதே’ பாடலை பாடினார். தொடர்ந்து அவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


சினிமாதான் உயிர்


அப்போது பேசிய அவர், “ எனக்கு நடிப்பு, சினிமாதான் உயிர். டென்ஷனாக இருக்கும் போது ரசிகர்கள் தொல்லை செய்யும் போது எப்படி சமாளிக்கிறீர்கள் என்ற கேட்ட போது, “ நிச்சயமாக இல்லை. இதற்காகத்தான் நாங்கள் ஏங்குகிறோம். ரசிகர்கள் எங்கள் மீது காட்டும் அன்பு கடவுள் கொடுத்த வரம். என்னைப்பொறுத்த வரை அவர்கள்தான் எனக்கு கடவுள்.” என்றார்.


நீங்கள் நிறைய கஷ்டங்களை சந்தித்து உள்ளீர்கள்.. அதையெல்லாம் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள்.. ஆனால் இப்போதைய இளைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்களே? 




இந்தத்தலைமுறை அப்படி ஆகிவிட்டது. படிப்பில் தயசு செய்து ஃப்ரஷ்ஷரை ஏற்றிக்கொள்ளாதீர்கள். கண்டிப்பாக ஒரு டிகிரி வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு ஒரு கனவு இருக்கும். அதை துரத்துங்கள். ஒவ்வொரு விழும் போதும் நாம் எழுந்திருக்க வேண்டும். என்னால் நடக்கவே முடியாது. ஆனால் நான் நடக்க ஆரம்பித்து நடிக்க ஆரம்பித்தேன். 


பொன்னியின் செல்வன் அப்டேட் ஏதாவது?




படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்தப்படம் நிச்சயம் நாம் எல்லோருக்கும் பெரிய பெருமை. அந்தப்படத்தில் நானும் இருப்பது பெரிய பெருமை.” என்று பேசினார். 


தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி வெளியாக உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் ஏராளமான கெட்டப்புகளுடன் இந்த படத்தில் அசத்த உள்ளார்.


அவரது பல்வேறு கெட்டப்புகளுடன் வெளியான அதிரா பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கே.ஜி.எப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிர்ணாளினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மியா ஜார்ஜ் மற்றும் கனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார்.


விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் படம் வெளியானது. கோப்ரா படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்ரா படம் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால் தற்போது விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.