இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


பைனான்ஸ் நிறுவனமான பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதர சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பிண்ணனி என்ன? 


2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கடனாக பெற்றுள்ளார். அப்போது கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைக்கு லிங்குசாமி வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால் பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.





அந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த 3வது விரைவு நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமி தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனந்தம் திரைப்படம் மூலமாக சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளியான சண்டைக்கோழி இன்றளவும் பலருக்கும் பிடித்தமான திரைப்படம். ஆனால் அடுத்தடுத்த படங்கள் லிங்குசாமிக்கு கைகொடுக்கவில்லை. சூர்யா நடிப்பில் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அடிவாங்கியது. அதேபோல் சண்டைக்கோழி 2 திரைப்படமும் லிங்குசாமிக்கு சறுக்கியது. அதன்பின்னர் லிங்குசாமி சிறிது கேப் விட்ட நிலையில் வெற்றிப்படம் ஒன்றை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். 


 






இந்நிலையில்தான் தி வாரியர் படத்தை அவர் இயக்கினார். தெலுங்கின் ராம் பொத்தனேனி, கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகி படுதோல்வி அடைந்தது.