பாலிவுட் திரைப்படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியவர் ஸ்ரேயா கோஷல். இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இவர் பல பாடல்கள் பாடியிருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'முன்பே வா' பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் .  இவர் சிறந்த பிண்ணனி பாடகிக்கான தேசிய விருதை 4 முறை வென்றுள்ளார்.




அத்துடன் சிறந்த பாடகிக்கான ஃபிளிம்பேர் விருதை 6 முறை வென்றுள்ளார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிலாத்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஸ்ரேயா கோஷல் தனது சமூகவலைதள பக்கத்தில் தான் கர்ப்பிணியாக இருக்கும் நிழற்படத்தை பதிவிட்டிருந்தார். அது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 


 






இந்நிலையில் இன்று இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரேயா கோஷல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "இன்று மதியம் கடவுளின் அருளால் எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நானும் என்னுடைய கணவர் ஷிலாத்தியாவும் மற்றும் என்னுடைய குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம். எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் எங்களது நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.