<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>bigg-boss-tamil</title><atom:link href="https://tamil.abplive.com/bigg-boss-tamil/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 07:35:38 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/power-cut-implement-frequently-in-tamilnadu-due-to-electricity-demand-increases-day-by-day-258113</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/power-cut-implement-frequently-in-tamilnadu-due-to-electricity-demand-increases-day-by-day-258113#respond</comments><pubDate>Sat, 2 May 2026 07:13:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/power-cut-implement-frequently-in-tamilnadu-due-to-electricity-demand-increases-day-by-day-258113</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கொளுத்தும் கோடை வெயில்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வீட்டில் இருக்கும் ஃபேன், ஏசி போன்ற மின்சாதங்கள் 24 மணி நேரம் இடைவெளி இல்லாமல் ஓடும் அளவுக்கு வெப்பமான சூழல் நிலவுகிறது. அதேசமயம் சில நேரங்களில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டால் அவ்வளவு தான் நாம் கோபத்தின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு வெப்பம் நம்மை வாட்டி வதைக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தடையில்லா மின்சாரம் மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் மின் நுகர்வு தேவை புதிய உச்சத்தை எட்டியிருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Sengottaiyan on Vijay | &amp;rdquo;200 இடங்களில் வெல்வோம்! &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; ஆளப்போறாரு&amp;rdquo; செங்கோட்டையன் உறுதி | TVK&quot; src=&quot;https://www.youtube.com/embed/PzJqk6yv_6o&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மாநில மின் தேவை விநியோக மையத்தின் தரவுகளின்படி, &lt;a title=&quot;தேர்தல் &quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/nainar-nagendran-answered-if-vijay-wins-will-the-bjp-seek-support-for-nda-alliance-258112&quot; target=&quot;_self&quot;&gt;தேர்தல் &lt;/a&gt;மற்றும் தேர்வுகள் காரணமாக தேவை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் ஏப்ரல் மாதம் முழுவதும் மாநிலத்தில் மின்சாரப் பயன்பாடு சீராக அதிகரித்தது. மின் வெட்டு, மின்சார பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் மாநில அரசும் கவனமுடன் நிலைமையை கையாண்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியான நிலையில் வாக்குப்பதிவு முடிந்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தப்பட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. எனினும் இது தற்காலிகமானது எனவும், விரைவில் நிலைமை சீரடையும் எனவும் சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&amp;nbsp;மீண்டும் மின்தடைக்கு வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில் அதிகரித்து வரும் கோடை வெப்பநிலை மற்றும் ஏசி, ஃபேன் போன்ற மின்சாதனங்கள் அதிகளவில் பயன்படுவதால் அவ்வப்போது மின்தடை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அதீத தேவை இருக்கும்பட்சத்தின் மின் உற்பத்தி பெருக்கும் பொருட்டு மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக மின்வாரிய தரப்பில் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகம்(TANGEDCO) மின்சாரத் தேவையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை மூன்று வகையான ஒப்பந்தங்கள் மூலம் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதேசமயம் அதிக மின் அழுத்தம், டிரான்ஸ்ஃபார்மர் பிரச்னை போன்ற காரணங்களால் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும் களத்தில் ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர் சேவை எண் மூலம் உங்கள் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் அது எப்போது சரி செய்யப்படும் என்ற தகவலும் வழங்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/02/b79e00de1f4f28613954d14ac2a77ab417776859588121322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nainar-nagendran-answered-if-vijay-wins-will-the-bjp-seek-support-for-nda-alliance-258112</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nainar-nagendran-answered-if-vijay-wins-will-the-bjp-seek-support-for-nda-alliance-258112#respond</comments><pubDate>Sat, 2 May 2026 06:43:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nainar-nagendran-answered-if-vijay-wins-will-the-bjp-seek-support-for-nda-alliance-258112</guid><description><![CDATA[&lt;p&gt;கருத்துக்கணிப்புகள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை எனவும், மக்களின் உண்மையான எண்ணம் மே 4ம் தேதி தெரிய வரும் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்து நாளை மறுநாள் (மே 4) எண்ணப்படுகிறது. அதோடு சேர்த்து தேர்தல் நடந்த புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. சில கருத்துக்கணிப்பு அதிமுக கூட்டணிக்கும் சாதகமாக அமைந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் இந்த தேர்தலை உற்றுநோக்கியுள்ளது. கடந்த முறை 4 எம்.எல்.ஏ.,க்கள் வென்ற நிலையில் இம்முறையில் இரட்டை இலக்க வெற்றியைப் பெறுவோம் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கருத்துக்கணிப்புகள் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Vijay Panaiyur Sketch|விஜய் உத்தரவின் ரகசியம்!பனையூரில் தொடங்கும் ஆட்டம்?தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி?&quot; src=&quot;https://www.youtube.com/embed/e0uG-HRaoMs&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அதற்கு, &amp;ldquo;கருத்துக்கணிப்புகள் முறையாக இருந்தால் அதன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கும். நிறைய இடங்களில் கருத்து திணிப்பு தான் இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் அது இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. மே 4ம் தேதி மக்களுடைய உண்மையான கருத்துக்கணிப்பு என்ன என்பது தெரிய வரும். மக்களின் எண்ணங்கள், கடந்த 5 ஆண்டு காலமாக என்ன மாதிரியான ஆட்சி நடந்தது என்பதெல்லாம் அன்று தெரிய வரும் என கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து அவரிடம், வாக்குப்பதிவுக்குப் பின்னர் &lt;a title=&quot;விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-vaiko-asked-tvk-performance-in-tamil-nadu-elections-2026-258100&quot; target=&quot;_self&quot;&gt;விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்&lt;/a&gt; என கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, &amp;ldquo;வாக்குப்பதிவுக்கு முன்னர் அந்த மாதிரி இருந்தால் அதை பேசலாம். வாக்குப்பதிவுக்குப் பின்னர் அப்படியான நிலைக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும் மக்கள் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்ததாக தான் நானும் கேள்விப்படுகிறேன். அரசு ஊழியர்கள் தொடங்கி வியாபாரிகள், பெண்கள், நடுத்தர மக்கள் என அனைவரும் இந்த அரசு மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அதேசமயம் என்னைப் பொறுத்தவரை விஜய் எந்த தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை&amp;rdquo; என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஒருவேளை விஜய் அதிகப்படியான தொகுதி ஜெயித்து தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அவரின் ஆதரவை கோருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, &amp;ldquo;நிச்சயமாக &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அதிகப்படியான தொகுதியில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதற்கான பேச்சும் இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/02/0bd1b818382853e8b387111b56ad347c17776843949901322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Anbumani Ramadoss: வெற்றி நமதே.. விழிப்புடன் இருங்கள்.. அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!]]></title><link>https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103</link><comments>https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103#respond</comments><pubDate>Fri, 1 May 2026 20:39:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103</guid><description><![CDATA[&lt;p&gt;வாக்கு எண்ணிக்கை நாளில் அதிமுக, பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் நிலையில் பதிவான வாக்குகள் அனைத்து மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியான நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்களாக செயல்படுபவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி பாமக தலைவர் &lt;a title=&quot;அன்புமணி ராமதாஸ் &quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/chief-minister-deprived-tamil-nadu-s-20-women-mps-of-the-opportunity-anbumani-alleges-256747&quot; target=&quot;_self&quot;&gt;அன்புமணி ராமதாஸ் &lt;/a&gt;வெளியிட்டுள்ள பதிவில், &amp;ldquo;தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக - பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;EPS Family Tiruchendur Darshan| பக்தி பரவசத்தில் EPS மனைவி முருகன் கோயிலில்மகன் மருமகளுடன் தரிசனம்&quot; src=&quot;https://www.youtube.com/embed/eZrUhvlDU-E&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு - பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பா.ம.க. பா.ஜ.க. அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும்&amp;rdquo; என அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/1cadf91bdaf113e601dc02aaddc5253b17776480947871322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/tn-election-2026-result-day-may-4-sweets-crackers-flowers-sale-heavy-258101</link><comments>https://tamil.abplive.com/news/politics/tn-election-2026-result-day-may-4-sweets-crackers-flowers-sale-heavy-258101#respond</comments><pubDate>Fri, 1 May 2026 19:56:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/tn-election-2026-result-day-may-4-sweets-crackers-flowers-sale-heavy-258101</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆட்சி யாருக்கு?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பட்டாசு விற்பனை படுஜோர்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு ஆதரவாக முடிவுகள் வெளியாகும் என்று ஆவலுடன் உள்ளனர். இதற்காக, அந்தந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாட்டத்திற்காக பட்டாசுகளும் தயாராக வாங்கி வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சிவகாசியில் உள்ள பல்வேறு பட்டாசு விற்பனை நிலையங்களில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, பட்டாசு தயாரிப்பும் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் பட்டாசுகளை ஆர்டர் அளித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பூ, இனிப்பு, பொன்னாடைகள் விற்பனை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்துவதற்கு பலரும் மாலை வாங்கிச் செல்வது வழக்கம். இதனால், மாலைகள் விற்பனையும் நாளை மறுநாள் சூடுபிடிக்கும். பூக்களும் வழக்கத்தைவிட அதிகளவு இறக்குமதி செய்ய பூ வியாபாரிகள் தயாராக உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுமட்டுமின்றி வெற்றியைக் கொண்டாட இனிப்புகளும் மிகப்பெரிய அளவில் வழங்கப்படும் என்பதால் இனிப்புகள் விற்பனையும் அதிகளவு இருக்கும். இதுதவிர, பொன்னாடைகள், பூங்கொத்துக்கள் விற்பனையும் அடுத்த சில தினங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுக்காகவும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி போஸ்டர் அடிப்பது வழக்கம் என்பதால், போஸ்டர்கள் அடிக்கும் அச்சு நிறுவனங்களிலும் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மிகப்பெரிய எதிர்பார்ப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த தேர்தலில் நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, பெரும்பாலான நிறுவனங்கள் திமுக-வே வெற்றி பெறும் என்று கணித்துள்ளனர். இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, தவெக தமிழ்நாட்டில் அதிகளவு இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாத சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;TVK Vijay: 'பொது அறிவு இருக்காது&amp;rsquo; - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!&quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/actress-vinodhini-vaivaidynathan-slams-tamilnadu-women-who-cast-their-vote-for-tvk-vijay-258075&quot; target=&quot;_self&quot;&gt;TVK Vijay: 'பொது அறிவு இருக்காது&amp;rsquo; - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-to-check-watermelon-is-sweet-or-not-know-tips-in-tamil-258099&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/d0bfed2e5688723b969122af6c0b78541777645287597102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-vaiko-asked-tvk-performance-in-tamil-nadu-elections-2026-258100</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-vaiko-asked-tvk-performance-in-tamil-nadu-elections-2026-258100#respond</comments><pubDate>Fri, 1 May 2026 19:31:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-vaiko-asked-tvk-performance-in-tamil-nadu-elections-2026-258100</guid><description><![CDATA[&lt;p&gt;தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தவெக ஆச்சரியம் அளிக்கும்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வைகோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பேசினார். அதில், &quot;தேர்தல் முடிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நான்கு கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. ஒரு கருத்துக் கணிப்பு அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக உள்ளது. மற்றொரு கருத்துக் கணிப்பு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறது. இப்படியாக&amp;nbsp; &amp;nbsp;தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னுடைய நம்பிக்கை திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Karunas Slams Vijay | &amp;quot;&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; முதலமைச்சரா? இது என்ன காமெடி&amp;rdquo; வச்சுசெய்த கருணாஸ் | TVK Vijay&quot; src=&quot;https://www.youtube.com/embed/6nqw_YswSvk&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;தமிழக வெற்றிக் கழகம்&quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/actress-vinodhini-vaivaidynathan-slams-tamilnadu-women-who-cast-their-vote-for-tvk-vijay-258075&quot; target=&quot;_self&quot;&gt;தமிழக வெற்றிக் கழகம்&lt;/a&gt; இந்த தேர்தலில் ஒரு வலுவான சக்தியாக திகழும். மேலும் அது ஆச்சரியங்களை அளிக்கக்கூடும். முடிவுகள் அறிவிக்கப்படும்போது ​​மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவாக ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது&amp;rsquo; எனவும் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எனது மிகப்பெரிய சாதனை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மே தினம் பற்றி வைகோ பேசுகையில், &amp;ldquo;1886 ஆம் ஆண்டு மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு என்ற தங்களது உரிமைகளைக் கோரி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது தொழிலாள வர்க்கத்தின் இந்த மாபெரும் எழுச்சியை அடக்க காவல்துறையும் இராணுவமும் தங்கள் பலத்தைப் பயன்படுத்தின. இதில் பலர் கொல்லப்பட்டனர். 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானபோது, ​​அவர் மே 1 ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்து அதைக் கொண்டாடினார். 1990 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ​​நான் இந்தப் பிரச்சினையை எழுப்பி, மே தினத்தை மத்திய அரசு விடுமுறையாக அறிவிக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் அதற்கு இணங்கி, அதே நாளில் அதை அறிவித்தார். எனது பொது வாழ்வில், மே 1 ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது எனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்&quot; என தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாஜக ஊடுருவ முயற்சி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026 ஆம் ஆண்டு கேரளா மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் குறித்த கேள்விக்கு,&amp;nbsp; &quot; இரு மாநிலங்களிலும் பாஜக ஊடுருவ முயற்சிக்கிறது. கேரளாவில் அது மிகவும் கடினமாக இருக்கும். அவர்களால் முடியாது. ஆனால் மேற்கு வங்கத்தில் நிலைமை வேறுவிதமாக இருக்கலாம். இருந்தாலும் நாம் பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும்&amp;rdquo; என்றும் வைகோ கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/5af9d6324c05327a10ddad4a4822642117776439780541322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தர திமுக தவறிவிட்டது: விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் பகிரங்கக் குற்றச்சாட்டு!]]></title><link>https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094</link><comments>https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:22:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : தேர்தலில் குறைந்த இடங்களை அளித்து, இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது. அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. கடந்த காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்கிற செய்தியை தான் எல்லா கருத்துக்கணிப்புகளும் தெளிவாக கூறியுள்ளனர். பாஜக எத்தனை பகல் வேடம் போட்டாலும். மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடம் அளிக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தலில் மீண்டும் உறுதியாகியுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வருகின்ற காலத்தில் திமுக எப்படி ஆட்சி நடத்தப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பல்வேறு துறைகளில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக அரசாங்கம் செய்ய தவறிவிட்டது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இரட்டை இலக்கு பொருளாதாரம் வளர்ச்சி என அமைச்சர்கள் பெருமை பேசுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் உழைப்பாளர் தான். இரட்டை இலக்க வளர்ச்சியை கொடுக்கும் தொழிலாளர்களுக்கு அரசு என்ன கொடுக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிதல் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வணிக சிலிண்டரின் விலை இன்றைக்கு மட்டுமே 900 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சாலையோர கடைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள யுத்தம் தான். தமிழ்நாட்டிற்கு பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பாஜக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும், திமுக ஆட்சி கடைப்பிடிக்ககூடிய கொள்கையில் மக்கள் நலன் பாதிக்கப்படும் போது குறிப்பாக பணி நிரந்தரம், தொழிலாளிகள் மீதான அடக்குமுறை, வழக்கு ரத்து இப்படிப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டங்களை முன்னெடுக்கும். என தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/0814ade7d66d5901fba8354d1ab580301777639855013194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கருத்துக்கணிப்புகளை முறியடித்து அதிமுக 200 இடங்களில் வெல்லும்: கடம்பூர் ராஜு!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/former-minister-kadambur-raju-has-said-in-kanchipuram-that-the-aiadmk-will-win-defying-opinion-polls-tnn-258095</link><comments>https://tamil.abplive.com/news/politics/former-minister-kadambur-raju-has-said-in-kanchipuram-that-the-aiadmk-will-win-defying-opinion-polls-tnn-258095#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:21:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/former-minister-kadambur-raju-has-said-in-kanchipuram-that-the-aiadmk-will-win-defying-opinion-polls-tnn-258095</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதுபவராகக் கருதப்படும் சித்ரகுப்த சுவாமிக்கு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் தனிச்சன்னதியுடன் கூடிய பழமையான கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பைப் பெற்ற இக்கோவிலில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கர்ணகி அம்மாள் உடனுறை சித்திரகுப்தர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வரலாறு திரும்பும் என நம்பிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து அதிமுக எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெற்றி பெறும் என்றே பல கருத்துக்கணிப்புகள் கூறின, ஆனால் முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூடப் பெற முடியாமல் போனதும், அதிமுக 203 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதுமே வரலாறு என்று அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எடப்பாடி IN - ஸ்டாலின் OUT&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போதைய தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே தமிழக மக்கள் தங்களின் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டதாகக் கூறினார். அந்தத் தீர்ப்பு என்பது 'எடப்பாடி பழனிசாமி IN, மு.க. ஸ்டாலின் OUT' என்பதாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இம்முறை அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இமாலய வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வாக்கு எண்ணும் நாளில் அதிமுகவின் பலம் என்ன என்பது தெரியவரும் என்றும், கட்சியின் வாக்கு சதவீதத்தை எவராலும் சரி செய்யவோ அல்லது பாதிக்கவோ முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திரையுலகினர் வருகையும் அரசியல் தாக்கமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடிகர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அரசியல் கட்சித் தொடங்கி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது இது போன்ற ஒரு தற்காலிகத் தாக்கம் ஏற்படுவது சகஜம்தான் என்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு விஜயகாந்த் அவர்கள் கட்சித் தொடங்கி முதன்முதலில் தேர்தலைச் சந்தித்தபோது, அவருக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியதையும் கருத்துக்கணிப்புகள் அவருக்குச் சாதகமாக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 50 ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் மட்டுமே கட்சித் தொடங்கி வெற்றி கண்ட ஒரே நடிகர் என்று குறிப்பிட்டார். மற்ற நடிகர்கள் யாராலும் அதிமுகவைப் போன்ற ஒரு மாபெரும் வெற்றியைப் பெற முடியாது என்பதே நிதர்சனம் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/d41063c5a1b6a6c60c8cceca0dc0d58517776398277371319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பட்டதாரிகளுக்குப் புதுச்சேரி ஜிப்மரில் வேலை: மாதம் ரூ.22,000 சம்பளம் - விண்ணப்பிக்கத் தயாரா?]]></title><link>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090</link><comments>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:09:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி&amp;nbsp; ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:&lt;/p&gt;
&lt;h3&gt;பணி விவரம்:&lt;/h3&gt;
&lt;p&gt;ஜிப்மர் நிறுவனத்தில் தற்போது நடைபெற்று வரும் மருத்துவ ஆராய்ச்சித் திட்டத்திற்காக 'கிளினிக்கல் ட்ரையல் கோஆர்டினேட்டர்' (Clinical Trial Coordinator) பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;கல்வித் தகுதி:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் (Life Sciences) சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3&gt;வயது வரம்பு:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்களின் வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3&gt;சம்பளம்:&lt;/h3&gt;
&lt;p&gt;தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ. 22,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3&gt;தேர்வு செய்யப்படும் முறை:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) நடத்தப்படும். இதில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;விண்ணப்பிக்கும் முறை:&lt;/h3&gt;
&lt;p&gt;தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jipmer.edu.in) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;முக்கியத் தேதிகள்:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 05.05.2026&lt;/p&gt;
&lt;p&gt;மருத்துவத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலதிக விவரங்களுக்கு ஜிப்மர் இணையதளத்தைப் பார்க்கவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/c8c3fb5ae531a4aa0eda3e1fd278c1291726647659469856_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமி விழா: பக்தர்களின் எழுச்சிமிகு வழிபாடு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/special-worship-service-was-held-at-the-chitragupta-temple-in-kanchipuram-on-the-occasion-of-chitra-pournami-and-thousands-of-devotees-participated-and-had-a-special-darshan-tnn-258087</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/special-worship-service-was-held-at-the-chitragupta-temple-in-kanchipuram-on-the-occasion-of-chitra-pournami-and-thousands-of-devotees-participated-and-had-a-special-darshan-tnn-258087#respond</comments><pubDate>Fri, 1 May 2026 17:54:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/special-worship-service-was-held-at-the-chitragupta-temple-in-kanchipuram-on-the-occasion-of-chitra-pournami-and-thousands-of-devotees-participated-and-had-a-special-darshan-tnn-258087</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சித்திரை மாதத்தின் முழு நிலவு தினமான சித்ரா பௌர்ணமி, மனிதர்களின் பாவ-புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்த சுவாமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கென்று தனிச் சந்நிதி அமைந்துள்ள மிக முக்கிய தலமான காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள சித்ரகுப்த சுவாமி கோயிலில், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திருக்கல்யாண வைபவம் மற்றும் வீதியுலா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவின் தொடக்கமாக, வியாழக்கிழமை இரவு சித்ரகுப்த சுவாமிக்கும் கர்ணகி அம்பாளுக்கும் ஆகம விதிகளின்படி மிக விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் காட்சியளித்த சுவாமியும் அம்பாளும், சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தனர். வீதியுலாவின் போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து தரிசனம் பெற்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு அபிஷேகம் மற்றும் தடையற்ற தரிசனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சித்ரா பௌர்ணமி தினமான வெள்ளிக்கிழமை அதிகாலை, மூலவர் சித்ரகுப்த சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. பொதுவாக மதிய வேளையில் நடை சாற்றப்படுவது வழக்கம், ஆனால் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்த காரணத்தால், அதிகாலையிலிருந்து இரவு வரை கோயில் நடை திறக்கப்பட்டு தடையற்ற தரிசனத்திற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. சித்ரகுப்தரை வழிபடுவதன் மூலம் தங்கள் பாவங்கள் நீங்கி, புண்ணிய கணக்குகள் கூடும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்களின் நீண்ட வரிசையும் கட்டண தரிசனமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் 20 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயிலை ஒட்டியுள்ள நெல்லுக்காரத் தெருவில் மட்டும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், கூட்ட நெரிசல் காரணமாக வரிசை உலகளந்த பெருமாள் கோயில் அருகில் உள்ள சங்குபாணி விநாயகர் கோயில் வரை நீண்டிருந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெயிலின் தாக்கம் மற்றும் நிலவிய சிரமங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். பந்தல் வசதி இல்லாத இடங்களில் நின்றிருந்த பக்தர்கள் குடை பிடித்தும், தலையில் துணிகளைப் போர்த்திக் கொண்டும் வெயிலைச் சமாளித்தனர். பல தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினாலும், குடிநீர் மற்றும் முறையான கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும், மிகுந்த பக்தியுடன் சித்ரகுப்த சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/fa44693b7eaf650e87bec8a27575c22617776382307531319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அக்னி ஸ்தலத்தில் இப்படி ஒரு இடமா? திருவண்ணாமலையில் ஒளிந்திருக்கும் 'ஜில்' ரகசியம் - மிஸ் பண்ணிடாதீங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/travel-with-abp-best-waterfalls-near-tiruvannamalai-summer-guide-2026-tnn-258081</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/travel-with-abp-best-waterfalls-near-tiruvannamalai-summer-guide-2026-tnn-258081#respond</comments><pubDate>Fri, 1 May 2026 17:25:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/travel-with-abp-best-waterfalls-near-tiruvannamalai-summer-guide-2026-tnn-258081</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;Waterfalls near Tiruvannamalai:&lt;/strong&gt;&lt;/span&gt; திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது விண்ணை முட்டும் கோபுரங்களும், அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலும் தான். கோடை காலங்களில் வெப்பம் சற்றே அதிகமாகக் காணப்படும் இந்த ஆன்மிக நகரத்திற்கு அருகிலேயே, மனதைக் குளிரவைக்கும் பல இயற்கை நீர்வீழ்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன என்பது பலரும் அறியாத உண்மை. குறிப்பாக ஜவ்வாது மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள இந்த அருவிகள், கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த புகலிடமாக விளங்குகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஜவ்வாது மலையின் ரத்தினம் - பீமன் அருவி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவண்ணாமலை மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலம் பீமன் அருவி ஆகும். திருவண்ணாமலை நகரிலிருந்து சுமார் 84 கி.மீ. தொலைவில் இது அமைந்திருந்தாலும், அங்கு செல்லும் மலைப்பாதை பயணம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. அடர்ந்த காடுகளுக்கு இடையே பாறைகளில் மோதி விழும் நீரின் ஓசை, நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்டு அமைதியைத் தேடுபவர்களுக்குப் பெரிய மருந்தாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இந்த அருவியை அடையலாம் என்றாலும், வழியெங்கும் காணப்படும் பசுமையான தாவரங்களும் மூலிகை வாசனையும் பயணக் களைப்பைத் தெரியாமல் பார்த்துக்கொள்கின்றன. குடும்பத்துடன் ஒரு நாள் பொழுதைக் கழிக்கவும், இயற்கை எழிலை ரசிக்கவும் இது ஒரு மிகச்சிறந்த இடமாகும்.&lt;/p&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;அமைதி தேடுபவர்களுக்கு ஏற்ற வெட்டவலம் அருவி&lt;/h4&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெரிய ஆரவாரம் இல்லாமல், அமைதியான சூழலில் ஒரு மாலைப் பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு வெட்டவலம் அருவி ஒரு வரப்பிரசாதம். திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் சுமார் 23 கி.மீ. தொலைவிலேயே இது அமைந்துள்ளது. இது மற்ற பெரிய நீர்வீழ்ச்சிகளைப் போல பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், ஒரு சிறிய குன்றின் மீது இருந்து பாறைகளின் வழியாக மென்மையாக வழிந்தோடும் நீர் ஒருவித இதமான குளிர்ச்சியைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலை வசதிகள் நன்றாக இருப்பதால் கார் அல்லது பேருந்து மூலம் எளிதாகச் சென்றடையலாம். அருவிக்குச் செல்லும் குறுகிய மலைப்பாதை நடைப்பயணத்திற்கு இனிமையாக இருக்கும் என்பதால், உள்ளூர் மக்கள் வார இறுதிகளில் இங்கு அதிக அளவில் திரள்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வனமும் அருவியும் இணைந்த அமிர்தி நீர்வீழ்ச்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள ஜவ்வாது மலைப்பகுதியில், அமிர்தி வனவிலங்கு பூங்காவிற்குள் இந்த அருவி அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கும், குழந்தைகளுக்கும் இது ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம். அருவிக்குச் செல்லும் வழியில் மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் பல அரிய வகை பறவைகளைக் காணும் வாய்ப்பு இருப்பதால், இது ஒரு சாகசப் பயணமாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இங்குள்ள சிறிய மிருகக்காட்சி சாலை குழந்தைகளுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். ஜூன் முதல் நவம்பர் வரை இங்குச் செல்ல உகந்த காலம் என்றாலும், கோடை காலத்திலும் இப்பகுதி குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், வனத்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகப் பயணிப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோடை சுற்றுலாவுக்கான கூடுதல் தகவல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள இந்த அருவிகள் ஆன்மிகப் பயணத்தோடு இயற்கையையும் இணைக்கின்றன. ஜவ்வாது மலையில் பீமன் அருவி தவிர கிளியூர் அருவி போன்ற சிறிய நீர்வீழ்ச்சிகளும் ஆங்காங்கே உள்ளன. இந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது, ஏனெனில் வனப்பகுதிகளில் கடைகள் குறைவாகவே இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், அக்னி ஸ்தலத்தின் வெப்பத்தைத் தணிக்கச் செல்லும் போது இயற்கையை மாசுபடுத்தாமல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து இந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும். ஆன்மிகத் தேடலில் வருபவர்கள் ஒரு நாள் ஒதுக்கி இந்த அருவிகளுக்குச் சென்றால், மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பது நிச்சயம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/fdd3ccf567393f4016d9e4f69919b81817776364941241319_original.jpg" width="220"/></item></channel></rss>