<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>bigg-boss-tamil</title><atom:link href="https://tamil.abplive.com/bigg-boss-tamil/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 20:41:55 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[ஹர ஹர சிவா... மகாதேவா... விண்ணை பிளந்த பக்தி கோஷம்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் கும்பாபிஷேகம்]]></title><link>https://tamil.abplive.com/spiritual/hara-hara-shiva-mahadeva-devotional-chants-rend-the-air-consecration-of-a-thousand-year-old-temple-tnn-274842</link><comments>https://tamil.abplive.com/spiritual/hara-hara-shiva-mahadeva-devotional-chants-rend-the-air-consecration-of-a-thousand-year-old-temple-tnn-274842#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 20:09:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/hara-hara-shiva-mahadeva-devotional-chants-rend-the-air-consecration-of-a-thousand-year-old-temple-tnn-274842</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரியலூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான தாமரைப்பூண்டி தர்மலிங்கேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் &amp;ldquo;ஹர ஹர சிவா... மகாதேவா&amp;rdquo; என்ற பக்தி கோஷம் முழங்க விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பாக நடந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தாமரைப்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மாம்பிகை அம்பாள் உடனுறை ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருத்தலத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/6176942ea1758f81e65c671c8ce3b87e1789655659843733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மூவர் தேவாரம் பாடிய பெருமை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாமரைப்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள தர்மாம்பிகை உடனுறை தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் பழமை வாய்ந்த சிவாலயமாக விளங்கி வருகிறது. சமயக் குரவர்கள் மூவராலும் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட பெருமையை பெற்ற சிவத்தலமாக இக்கோவில் பக்தர்களால் போற்றப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரலாற்றுச் சான்றுகளின்படி, மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்துடன் இக்கோவிலின் கட்டுமான வரலாறு தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. கி.பி. 1191-ம் ஆண்டில், மூன்றாம் குலோத்துங்க சோழன் தனது பதவியேற்ற 13-ம் ஆண்டில் இச்சிவாலயம் கட்டப்பட்டதாக கோவில் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பல நூற்றாண்டுகளை கடந்து இன்றளவும் வழிபாட்டுத் தலமாக விளங்கி வரும் இக்கோவில், தாமரைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் ஆன்மிக வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஐந்தாவது முறையாக கும்பாபிஷேகம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலப்போக்கில் கோவிலின் கட்டிடப் பகுதிகள் மற்றும் சன்னதிகளில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை கருத்தில் கொண்டு, ஆன்மிகப் பெருமக்கள், கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் நிதியுதவியுடன் கோவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுவரை நான்கு முறை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தற்போது மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலையில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க வழிபாடுகள் நடைபெற்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/347e07b936fb8e74fd3e8f9c4a1fc30e1789655637640733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கடம் புறப்பட்டு விமான கும்பாபிஷேகம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மூன்று நாட்கள் நடைபெற்ற யாகசாலை பூஜைகளின் நிறைவாக இன்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க கோவில் விமானங்களை நோக்கி புறப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து ஸ்ரீ தர்மாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் சுவாமி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலய விமானங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க, விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;ldquo;ஹர ஹர சிவா... மகாதேவா&amp;rdquo; கோஷம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட தருணத்தில் கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;ldquo;ஹர ஹர சிவா... மகாதேவா&amp;rdquo;, &amp;ldquo;தென்னாடுடைய சிவனே போற்றி&amp;rdquo;, &amp;ldquo;எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி&amp;rdquo; என பக்தர்கள் எழுப்பிய கோஷம் கோவில் சுற்றுப்புறம் முழுவதும் எதிரொலித்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நூற்றாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சிவாலயத்தின் கும்பாபிஷேகத்தை நேரில் தரிசித்த பக்தர்கள், புனிதநீர் தங்கள் மீதும் விழ வேண்டும் என்ற பக்தி உணர்வுடன் கைகளை உயர்த்தி வணங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீ தர்மாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் சுவாமி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து மூலவர்களுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகள் மற்றும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகா தீபாராதனையை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நீண்ட காலத்துக்குப் பிறகு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் தாமரைப்பூண்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கும்பாபிஷேக விழாவில் தாமரைப்பூண்டி மட்டுமின்றி செந்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பழமை வாய்ந்த சிவத்தலத்தின் வரலாற்றுச் சிறப்பை அறிந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை தன்னகத்தே சுமந்து நிற்கும் தாமரைப்பூண்டி தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பது, பக்தர்கள் மத்தியில் ஆன்மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/8a8fb1bb629e697e1f6ccb5e85c19ab71789655648691733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[MK Stalin: "தவெக அரசு படிக்கவைக்காவிட்டால் திமுக படிக்க வைக்கும்.." மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-leader-mk-stalin-said-tvk-government-not-pay-fees-dmk-pay-fees-for-student-bharathidasan-274840</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-leader-mk-stalin-said-tvk-government-not-pay-fees-dmk-pay-fees-for-student-bharathidasan-274840#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 20:06:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-leader-mk-stalin-said-tvk-government-not-pay-fees-dmk-pay-fees-for-student-bharathidasan-274840</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் படித்து வருகிறார். அவரது கல்வி உதவித்தொகையை தமிழக அரசு கவனித்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்தது முதலே அவருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என்று அந்த மாணவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், தான் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் தன்னை கல்லூரியில் இருந்து நீக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாணவர் வேதனையாக வீடியோ வெளியிட்டிருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விவகாரத்தில் மாணவருக்கு உரிய உதவியை அரசு செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.&lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நெஞ்சம் கனக்கிறது:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;ldquo;எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்&amp;rdquo; என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;&amp;ldquo;எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்&amp;rdquo; என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு&amp;hellip;&lt;/p&gt;
&amp;mdash; M.K.Stalin (@mkstalin) &lt;a href=&quot;https://x.com/mkstalin/status/2100579609364591066?ref_src=twsrc%5Etfw&quot;&gt;September 17, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அவப்பெயர் வேண்டாம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.&lt;/p&gt;
&lt;p&gt;மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாணவருக்கு உரிய உதவியை அரசு செய்ய வேண்டும் என்று தவெக அரசுக்கு பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், விரைவில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசுக்கு பின்னடைவை உண்டாக்கும் சூழலும் உருவாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/what-happens-if-you-drink-too-much-soda-274797&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/1c20c71e48715041a0983c0c5641d78c1789655771159102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தஞ்சாவூரில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு "கொலு விற்பனை" கண்காட்சி தொடக்க விழா]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/nauguration-of-a-special-golu-sale-exhibition-in-thanjavur-ahead-of-the-navaratri-festival-tnn-274838</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/nauguration-of-a-special-golu-sale-exhibition-in-thanjavur-ahead-of-the-navaratri-festival-tnn-274838#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 19:55:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/nauguration-of-a-special-golu-sale-exhibition-in-thanjavur-ahead-of-the-navaratri-festival-tnn-274838</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இயங்கி வரும் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில், நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு &quot;கொலு விற்பனை&quot; கண்காட்சி தொடக்க விழா நடந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மாடியில் கடந்த 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கூட்டுறவு சங்கத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கைவினை கலைஞர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/c84db9daffb85c6997e826bf1d4dc1501789653704849733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் காமாட்சி விளக்கு, பூஜை செட், விநாயகர் செட், அஷ்டலட்சுமி செட், சப்தமாதா செட், கருடசேவை செட், கர்ணன் செட், குற்றால அருவி செட், முப்பத்து முக்கோடி தேவர்கள் செட், நளவெண்பா செட், நரசிம்மர் செட், 18 சித்தர்கள் செட், நவதானிய செட், மாயா பஜார் செட், கொல்கத்தா பொம்மைகள் போன்ற ஏராளமான பொம்மைகள் மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு தோறும் நவராத்திரியை ஒட்டி கொலு விற்பனை மற்றும் கண்காட்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கொலு விற்பனை கண்காட்சியை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி. பிரபு ஜெயக்குமார் மோசஸ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். உதவி இயக்குனர் ஜி. விஜயகுமார், கணக்காளர் புஷ்பலதா, காசாளர் ஹேமலதா, உதவியாளர் செந்தில் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த கண்காட்சியில் கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி நேற்று 17ம் தேதி முதல் வரும் அக். 20ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்தாண்டு ரூ.23 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.22 லட்சம் விற்பனை நடந்தது. அதேபோல் இந்தாண்டு ரூ.26 லட்சத்திற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு புது வரவாக பஞ்சபூத செட், பூரி ஜெகன்நாதர் செட், வரலட்சுமி விரதம் செட், நிச்சயதார்த்தம் செட், பழங்கால விளையாட்டுக்கள் செட், முத்தாரம்மன் பொம்மை, டாக்டர், நர்ஸ், போலீஸ், வக்கீல் பொம்மைகள், துலாபார செட், கிருஷ்ணன் விளையாட்டுகள் செட், துளசி கல்யாணம் செட் போன்றவை வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு கொலு கண்காட்சியினை நேரில் கண்டு, பொம்மைகளை வாங்கிப் பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாக விளங்கக்கூடியது கொலு வைக்கும் வழிபாடாகும். இது வெறும் ஆன்மீகச் சடங்கு மட்டுமல்லாமல், படைப்புத் தொழில், மனித பரிணாம வளர்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வை உணர்த்தும் மிகச் சிறந்த பாரம்பரியக் கலைப் வடிவமாக திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. பரிணாம வளர்ச்சியை உணர்த்தும் படிகள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொலுவில் அமைக்கப்படும் ஒற்றைப்படை (3, 5, 7, 9) படிகள், ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை, அதைக் கடந்து இறை நிலையை அடையும் ஆத்மார்த்தமான பரிணாம வளர்ச்சியைத் தத்துவார்த்தமாக விளக்குகின்றன:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1, 2, 3-ஆம் படிகள்: மரம், செடி, கொடி, நீர்வாழ் உயிரினங்கள், ஊர்வன மற்றும் பூச்சிகள் போன்ற ஓரறிவு முதல் மூவறிவு உயிரினங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4, 5, 6-ஆம் படிகள்: பறவைகள், விலங்குகள் மற்றும் ஆறறிவு படைத்த மனிதர்கள், மகான்கள், சித்தர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;7, 8, 9-ஆம் படிகள்: நவதானிய முளைப்பாரி, மனிதனுக்கு மேலான தெய்வப் பிறவிகள், அஷ்டலட்சுமிகள், தசாவதாரம் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மண், மரம் மற்றும் சுதை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களால் செய்யப்பட்ட பொம்மைகளையே கொலுவில் வைப்பது வழக்கம். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கொல்கத்தா பொம்மைகள் மற்றும் செட்டிநாடு மரப் பொம்மைகள் போன்றவை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு, உள்ளூர் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் கலை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/175b75f9586a8a3958607befffe379441789653685102733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் நகரில் வரப்போகும் 5 புதிய ரவுண்டானாக்கள்! எந்தெந்த இடங்களில் தெரியுமா? திட்டம் இதோ!]]></title><link>https://tamil.abplive.com/news/kanchipuram/kanchipuram-city-beautification-roundabouts-planned-at-5-major-junctions-traffic-island-tnn-274836</link><comments>https://tamil.abplive.com/news/kanchipuram/kanchipuram-city-beautification-roundabouts-planned-at-5-major-junctions-traffic-island-tnn-274836#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 19:27:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ காஞ்சிபுரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/kanchipuram/kanchipuram-city-beautification-roundabouts-planned-at-5-major-junctions-traffic-island-tnn-274836</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவில் நகரம் மற்றும் பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் நகரை மேலும் அழகுப்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சந்திப்புகளில் சிறு பூங்காவுடன் கூடிய ரவுண்டானா மற்றும் போக்குவரத்து தீவு (Traffic Island) அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நகரின் அழகை மேம்படுத்துவதுடன், முக்கிய சந்திப்புகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாகவும் இது அமைய உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;11 இடங்களில் ரவுண்டானா மற்றும் போக்குவரத்து தீவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 11 முக்கிய இடங்கள் ரவுண்டானா மற்றும் போக்குவரத்து தீவு அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. பொன்னேரிகரை மேம்பாலம் ஏறுமிடம், அன்னை இந்திரா காந்தி சாலை, ஏகாம்பரநாதர் கோவில் சந்திப்பு, ஒலிமுகமதுபேட்டை சந்திப்பு, செவிலிமேடு சந்திப்பு, ஓரிக்கை மிலிட்டரி ரோடு சந்திப்பு, இரங்கசாமி குளம் சந்திப்பு, பெரியார் நகர் சந்திப்பு, சங்கரமடம் சந்திப்பு, பூக்கடை சத்திரம் சந்திப்பு மற்றும் இரயில்வே ரோடு மீன்மார்க்கெட் அருகே உள்ள பகுதி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;5 இடங்களுக்கு அனுமதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த 11 இடங்களில், ஐந்து இடங்களில் ரவுண்டானா அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பொன்னேரிகரை புதிய ரயில்வே நிலையம் ஜங்ஷன், அன்னை இந்திரா காந்தி சாலை, ஒலிமுகமதுபேட்டை ஜங்ஷன், இரங்கசாமி குளம் ஜங்ஷன் மற்றும் சங்கரமடம் ஜங்ஷன் ஆகிய ஐந்து முக்கிய இடங்களில் ரவுண்டானா அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் நகரின் போக்குவரத்து நிலை, சாலை அமைப்பு மற்றும் பொதுமக்களின் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரவுண்டானா மற்றும் அதனுடன் இணைந்த சிறு பூங்கா அல்லது பசுமைப் பகுதி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நகரின் முக்கிய சந்திப்புகள் புதிய தோற்றம் பெறும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரவுண்டானாக்களின் மையப்பகுதியில் சிறு பூங்கா அமைப்பது, காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளுக்கு பசுமையான தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். மேலும், போக்குவரத்து தீவுகள் முறையாக அமைக்கப்படுவதன் மூலம் சந்திப்புகளில் வாகனங்கள் செல்லும் பாதைகளை ஒழுங்குபடுத்தவும், சாலையின் மையப்பகுதிகளை முறையாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, நகரின் முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது. அதே நேரத்தில், நகரின் வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு ஏற்ற வகையில் சாலைகள் மற்றும் சந்திப்புகளின் தோற்றத்தையும் மேம்படுத்தும் முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சுற்றுலா பயணிகளை கவரும் காஞ்சிபுரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏராளமான பழமையான கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் பாரம்பரிய பட்டு நெசவு ஆகியவற்றால் நகரம் தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கிய ஆன்மீகத் தலங்களை காணவும், வழிபடவும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரம் வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல், உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை வாங்குவதற்காகவும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நகருக்கு வருகை தருகின்றனர். திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கான பட்டுப்புடவைகள் வாங்குவதில் காஞ்சிபுரம் முக்கியமான வணிக மையமாக திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாநகராட்சியின் அழகுப்படுத்தும் முயற்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், நகரின் அடிப்படை வசதிகள், சாலை மேம்பாடு, தூய்மை, பசுமை மற்றும் நகரின் தோற்றத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா மற்றும் சிறு பூங்காக்கள் அமைக்கும் இந்த முயற்சி நகரின் ஒட்டுமொத்த தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைய உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவில் நகரம், பட்டு நகரம் என்ற பெருமையை கொண்ட காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் சந்திப்புகளை அழகுபடுத்துவதன் மூலம், காஞ்சிபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையிலும் நகரின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த திட்டம் அமைய உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/a42aa2fa75100f02f08ef151b354f98617896534583141319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[200 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்றை சுமந்து நிற்கும் மராட்டிய கட்டிடக்கலை பொக்கிஷம் எங்குள்ளது தெரியுங்களா?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/do-you-know-where-the-architectural-treasure-of-the-marathas-bearing-a-history-spanning-over-200-years-is-located-tnn-274835</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/do-you-know-where-the-architectural-treasure-of-the-marathas-bearing-a-history-spanning-over-200-years-is-located-tnn-274835#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 19:26:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/do-you-know-where-the-architectural-treasure-of-the-marathas-bearing-a-history-spanning-over-200-years-is-located-tnn-274835</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை உலகையே வியக்க வைக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில் கட்டப்பட்ட கோயில்கள், அரண்மனைகள், மாளிகைகள், சத்திரங்கள் என ஒவ்வொரு கட்டிடமும் அக்கால மக்களின் கட்டிட அறிவுக்கும், நுணுக்கமான கலைத்திறனுக்கும் இன்றளவும் சாட்சியாக நிற்கின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றை சுமந்து நிற்கும் முத்தம்மாள் சத்திரம், பழமையான கட்டிடக்கலையின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சை முதல் தனுஷ்கோடி வரை சத்திரங்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலகட்டமான கி.பி.1743 முதல் 1837 வரையிலான ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் சத்திரங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான யாத்திரை வழித்தடத்தில் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் வகையில் ஏராளமான சத்திரங்கள் உருவாக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமாரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரௌபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேசுவரம் சத்திரம், தனுஷ்கோடி சேதுக்கரை சத்திரம் உள்ளிட்ட பல்வேறு சத்திரங்கள் இந்த வரலாற்று பாதையின் முக்கிய அடையாளங்களாக இருந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முத்தம்மாள் யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரத்தநாட்டின் முத்தம்மாள் சத்திரத்தின் பின்னணியில் ஒரு சோகமான வரலாறும் இருப்பதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டாம் சரபோஜி மன்னரின் முதல் மனைவியான முத்தம்மாள், இளம் வயதிலேயே உயிரிழந்ததாகவும், அதற்கு முன்பு யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பயன்படும் வகையில் சத்திரம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவரது நினைவாக கி.பி.1800-ம் ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் முத்தம்மாள் சத்திரம் கட்டப்பட்டதாக இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் இது வெறும் தங்கும் விடுதியாக மட்டுமல்லாமல், ஒரு மன்னரின் குடும்ப நினைவையும், அக்கால சமூக சேவை முறையையும், மராட்டிய கட்டிடக்கலையையும் ஒரே நேரத்தில் எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;யானை... குதிரை... தேர் சக்கரம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முத்தம்மாள் சத்திரத்தின் கட்டிட அமைப்பே பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அழகிய தோரண அமைப்புடன் காணப்படும் நுழைவாயில், யானை மற்றும் குதிரைகள் பூட்டிய தேர் சக்கரத்தை நினைவூட்டும் கலை வேலைப்பாடுகள், பிரமாண்டமான முற்றங்கள், அவற்றை தாங்கி நிற்கும் தூண்கள் என ஒவ்வொரு பகுதியிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சத்திரத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சிவலிங்கங்கள், மேல்தளத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட அலங்காரத் தூண்கள், பழமையான கிணறு உள்ளிட்டவை அக்கால வாழ்க்கை முறையையும் கட்டிட வடிவமைப்பையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கருங்கல், செங்கல், சுண்ணாம்பு, காரை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் பல ஆண்டுகளைக் கடந்தும் தனது பழமையை இழக்காமல் இருப்பது கட்டிடக்கலை நுட்பத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சத்திரம் முதல் பள்ளிக்கூடம் வரை!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு காலத்தில் யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உணவு மற்றும் உறைவிடம் வழங்கிய இந்தக் கட்டிடம், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்பிறகு விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் இந்தக் கட்டிடம் பயன்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கட்டிடம் காலத்துக்கு ஏற்ப எவ்வாறு தனது பயன்பாட்டை மாற்றிக்கொண்டது என்பதற்கும் முத்தம்மாள் சத்திரம் சாட்சியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஒரத்தநாட்டின் &amp;lsquo;தாஜ்மஹால்&amp;rsquo;!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆக்ராவுக்கு தாஜ்மஹால் என்றால், ஒரத்தநாட்டுக்கு முத்தம்மாள் சத்திரம் என்று உள்ளூர் மக்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். தாஜ்மஹால் ஒரு காதல் நினைவுச் சின்னமாக உலகப் புகழ் பெற்றிருந்தால், முத்தம்மாள் சத்திரம் ஒருபுறம் மன்னர் குடும்பத்தின் நினைவையும், மறுபுறம் மக்களுக்கான சேவை நோக்கில் உருவாக்கப்பட்ட சத்திர மரபையும் தன்னகத்தே கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தஞ்சை மாவட்டத்துக்கு வரும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் இந்தப் பழமையான கட்டிடம் ஈர்த்து வருகிறது. நவீன கட்டிடங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக நின்று கொண்டு ஒரு காலத்தின் வரலாற்றை சொல்லிக்கொண்டிருக்கும் முத்தம்மாள் சத்திரம், ஒரத்தநாட்டின் அடையாளமாக மட்டுமின்றி, தஞ்சை மண்ணின் கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கும் பெருமை சேர்க்கும் பொக்கிஷமாக திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரலாற்றை புத்தகத்தில் மட்டும் படிப்பதல்ல... நம்மைச் சுற்றி நிற்கும் கட்டிடங்களிலும் அதை வாசிக்கலாம் என்பதற்கு முத்தம்மாள் சத்திரமே ஒரு வாழும் சாட்சி!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/a524de91bcc2391e9354506fc0c5b2411789653352007733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (18-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-power-cut-details-18-09-2026-tn-power-shutdown-schedule-274832</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-power-cut-details-18-09-2026-tn-power-shutdown-schedule-274832#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 18:16:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-power-cut-details-18-09-2026-tn-power-shutdown-schedule-274832</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Power Shutdown:&lt;/strong&gt; தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 18 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ib-d8KcdVvI?si=Q3-Mg3JJZ1ngwT4Z&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்&lt;/h2&gt;
&lt;h2&gt;உடுமலைப்பேட்டை பகுதிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எஸ்.எஸ்.கிழவன்கட்டூர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி சோதனைச் சாவடி, பேரம்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள்.&lt;/p&gt;
&lt;h2&gt;தஞ்சாவூர் மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுலை.&lt;/p&gt;
&lt;h2&gt;பெரம்பலூர் மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கூத்தூர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கீழப்பாலூர் துணை மின் நிலையம்,&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கீழப்பலூர், பொய்யூர் நீர்நிலைகள், கொக்குடி&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வெண்மணி துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கூடலூர் எஸ்.எஸ் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;குளத்தூர், சிலக்குடி, திம்மூர்&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/which-country-is-known-as-the-land-of-the-rising-sun-274783&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/12/17/8a8c7e1191d5b969273328f9b3059f991765951240557113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Udhayanithi:"மாணவர் பாரதிதாசனை பழிவாங்குவதை ஏற்க முடியாது.. கேவலத்தின் உச்சம்" - தவெக அரசை எச்சரித்த உதயநிதி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-leader-udhayanithi-condemn-tvk-government-for-student-bharathidasan-scholorship-issue-274831</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-leader-udhayanithi-condemn-tvk-government-for-student-bharathidasan-scholorship-issue-274831#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 18:06:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-leader-udhayanithi-condemn-tvk-government-for-student-bharathidasan-scholorship-issue-274831</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் நிதி உதவியுடன் வெளிநாடுகளின் பல்வேறு கல்வி நிலையங்களில் தமிழக மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதுபோல, மலேசியாவில் படித்து வரும் மாணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதிதாசன். &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சி அமைந்த பிறகு தனக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது மறுக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கண்ணீர்மல்க வீடியோ:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், தமிழக அரசிடம் இருந்து தனக்கு உதவித்தொகை தற்போது வரை கிடைக்காததால் தன்னுடைய கல்வியே பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என்றும், கல்லூரியில் இருந்து நீக்கப்படும் அபாயம் உருவாகியிருப்பதாகவும் அவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது,&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மலேசியாவில் படிக்கும் மாணவர்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே&amp;hellip;&lt;/p&gt;
&amp;mdash; Udhay (@Udhaystalin) &lt;a href=&quot;https://x.com/Udhaystalin/status/2100540424498856363?ref_src=twsrc%5Etfw&quot;&gt;September 17, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கேவலத்தின் உச்சம்:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பெரியார் பிறந்த #சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி &amp;nbsp;தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஏற்க முடியாது:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த ரீல்ஸ் அரசு துணை நிற்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/what-happens-if-you-drink-too-much-soda-274797&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/098b30c6a40a11a4d29d2320ca02a22e1789648557947102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[யுபிஐ வரியால் பண மதிப்பிழப்பு ஆபத்து: சசிகாந்த் செந்தில் கடும் எச்சரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/thiruvallur-congress-mp-sasikant-senthil-upi-transaction-tax-demonetization-274830</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/thiruvallur-congress-mp-sasikant-senthil-upi-transaction-tax-demonetization-274830#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 17:47:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/thiruvallur-congress-mp-sasikant-senthil-upi-transaction-tax-demonetization-274830</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;யுபிஐ பரிவர்த்தனையால் மீண்டும் பண மதிப்பிழப்பு வரும் நிலை உருவாகும் என்றும் மீண்டும் மக்கள் பண பரிமாற்றத்திற்கு செல்வார்கள் எனவும் காங்கிரஸ் எம்பி சசிகாந்த செந்தில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யுபிஐ பரிவர்த்தனை குறித்து வரும் செய்தி, மோசமான செய்தி எனவும், மக்களை யுபிஐ பரிவர்த்ததனை ஊக்குவித்தது இந்த அரசு தான், ஆனால், இப்போது வரி போடுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது எனவும், அடுத்த ஒரு மாதத்தில் வரி அனைத்துக்கும் வரி போடுவார்கள், பெட்டிக்கடை முதல் அனைத்து கடைகளிலும் யுபிஐ இருக்கு என மார்தட்டி கொள்ளும் அரசு, ஒருவேளை இதற்காக தான் யுபிஐ-ஐ செய்ய சொன்னார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ib-d8KcdVvI?si=Q3-Mg3JJZ1ngwT4Z&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தொடர்ந்து பேசிய அவர், இது ஆரம்பம், வரி போடும் முறையை தலைகீழாக போடுகின்றனர் எனவும், சாதாரண மக்களிடம் பணம் பிடுங்குகின்றனர், பணம் படைத்தவர்களுக்கு வரி விலக்கு கொடுப்பது எந்தவித்த்தில் நியாயம்? எனவும், இது &amp;nbsp;பொருளாதாரத்திற்கு நல்லது அல்ல எனவும், ஏழைகளை ஒன்னுமில்லாமல் செய்வது அவர்களின் எண்ணம் எனவும், மீண்டும் மக்கள் பண பரிமாற்றத்திற்கு செல்வார்கள் எனவும், மீண்டும் &amp;nbsp;பண மதிப்பிழப்பு வரும் நிலை உருவாகும் எனவும் எம்பி சசிகாந்த் செந்தில் எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/business/how-much-facebook-pays-for-100k-views-monetization-earnings-tips-274665&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/72663ef339cee7788f8db7de47d134f41789647256081113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["பயப்புடாதீங்க முதல்வர் விஜயே சொல்லிட்டாரு" ரிப்போர்ட் பண்ணுங்க : Gem Veeramani]]></title><link>https://tamil.abplive.com/short-videos/news/politics-explainer-r-veeramani-cm-vijay-274828</link><comments>https://tamil.abplive.com/short-videos/news/politics-explainer-r-veeramani-cm-vijay-274828#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 17:45:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/short-videos/news/politics-explainer-r-veeramani-cm-vijay-274828</guid><description><![CDATA[&lt;p&gt;&quot;பயப்புடாதீங்க முதல்வர் விஜயே சொல்லிட்டாரு&quot; ரிப்போர்ட் பண்ணுங்க : Gem Veeramani&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/fded6e00aeca71ac49a3ac02882fefc617896473367911384_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["நீயெல்லாம் ஒரு பெண்ணா"ஆவேசமான Anchor : Gem Veeramani]]></title><link>https://tamil.abplive.com/short-videos/news/politics-explainer-r-veeramani-274827</link><comments>https://tamil.abplive.com/short-videos/news/politics-explainer-r-veeramani-274827#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 17:41:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/short-videos/news/politics-explainer-r-veeramani-274827</guid><description><![CDATA[&lt;p&gt;&quot;நீயெல்லாம் ஒரு பெண்ணா&quot;ஆவேசமான Anchor : Gem Veeramani&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/fd068ca2861e1f1ac27648c7c8136a9217896470100411384_original.jpg" width="220"/></item></channel></rss>