<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>bigg-boss-tamil</title><atom:link href="https://tamil.abplive.com/bigg-boss-tamil/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 19:06:27 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/annamalai-questions-bjp-government-on-delhi-neet-protests-and-asks-students-to-be-careful-know-details-268632</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/annamalai-questions-bjp-government-on-delhi-neet-protests-and-asks-students-to-be-careful-know-details-268632#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 18:52:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/annamalai-questions-bjp-government-on-delhi-neet-protests-and-asks-students-to-be-careful-know-details-268632</guid><description><![CDATA[&lt;p&gt;நீட் தேர்வு மற்றும் அதில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் தற்போது அரசியல் கட்சிகளும் இணைந்துள்ள நிலையில், டெல்லி பரபரப்பாக காணப்படுகிறது. ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியும், மாணவர்களை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியும், வீ தி லீடர்ஸின் தலைவர் அண்ணாமலை பெரிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அண்ணாமலையின் பதிவு&lt;/h2&gt;
&lt;p&gt;இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, &amp;ldquo;கடந்த பல ஆண்டுகளாக, நான் நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறேன். அது நாடு முழுவதும் மாணவர் தேர்வில் ஒரு சீரான தன்மையை கொண்டுவந்தது என்றும், நலிந்த பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் தங்கள் கனவைத் தொடர ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கியது என்றும் நான் வாதிட்டு வருகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலைத் தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. சீரான தன்மையை கொண்டுவர வேண்டிய அமைப்பு தோல்வியடைந்து கொண்டிருந்தபோது, ​​மீண்டும் ஒருமுறை தேர்வு செயல்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்த மாணவர்கள் மீது அது எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனாலும், எந்தப் பொறுப்புக்கூறலும் இருக்கவில்லை. அந்தத் தருணம்தான், மாணவர்கள் தங்கள் மனமுருகக் கதறி அழுவதற்காக வீதிகளில் இறங்குவதற்கு அவர்களின் மனங்களில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&amp;ldquo; என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;பாஜக அரசுக்கு கேள்வி&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், &amp;ldquo;ஒரு ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. இருப்பினும், பொருத்தமான கேள்வி இதுதான்: பாஜக தலைமையிலான மத்திய அரசு, போராட்டக்காரர்களுடன் ஒரு பேச்சுவார்த்தையைத் தொடங்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது.? போராட்டம் ஒரு உச்சகட்டத்தை அடையும் வரை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது.? உங்களை காத்திருக்க வைத்தது எது.?&amp;ldquo; என்று அண்ணாமலை கேள்வி எழுப்புயுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;மாணவர்களுக்கு எச்சரிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;தொடர்ந்து, &amp;ldquo;மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் மக்களுக்கும் இதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. ஒரு போராட்டம் வாரக் கணக்கில் நீடிக்கும்போது, ​​சுயநலவாதிகள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்ப கோரிக்கைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கருத்துக்களை பரப்புவதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காக போராட்டத்தை முழுமையாக திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பானதுதான். நீங்கள் மௌனமாக இருந்து, இந்த சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்தால், உங்கள் அடிப்படை குறிக்கோள்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். தயவுசெய்து அதை நடக்க விடாதீர்கள்!&amp;ldquo; என்று மாணவர்களுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;மத்திய அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள்&lt;/h2&gt;
&lt;p&gt;அதோடு, &amp;ldquo;பாஜக தலைமையிலான மத்திய அரசு, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவும், தற்போதைய பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, விரைவான, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு தேசத்தின் வலிமையும், அதன் இளைஞர்கள், அதன் கல்வி நிறுவனங்கள் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது மாணவர்கள் நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது நம்பிக்கையை இழந்தால், நாம் நமது தேசத்தின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம்.&amp;ldquo; என்றும் &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt; தனது பதிவில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In&amp;hellip;&lt;/p&gt;
&amp;mdash; K.Annamalai (@annamalai_k) &lt;a href=&quot;https://x.com/annamalai_k/status/2079881793067725100?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 22, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/if-your-mobile-phone-is-lost-or-stolen-what-to-do-first-important-steps-268601&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/17/5a2587af83e29511fab4bdbdbedf85ae17816950866851431_original.png" width="220"/></item><item><title><![CDATA[Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/karnataka-refuses-to-release-cauvery-water-to-tamil-nadu-due-to-inadequate-rainfall-268627</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/karnataka-refuses-to-release-cauvery-water-to-tamil-nadu-due-to-inadequate-rainfall-268627#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 18:06:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/karnataka-refuses-to-release-cauvery-water-to-tamil-nadu-due-to-inadequate-rainfall-268627</guid><description><![CDATA[&lt;p&gt;டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதற்கு வாய்ப்பில்லை என கர்நாடகா கூறியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;கர்நாடக அதிகாரிகள் கூறியது என்ன.?&lt;/h2&gt;
&lt;p&gt;டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தரப்பில் இருந்து நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, காவிரி தொழில் நுட்ப குழுத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், கர்நாடக அதிகாரிகள் நேரில் பங்கேற்வில்லை. அதற்கு மாறாக, கர்நாடக அரசு தரப்பிலிருந்து, காணொலி வாயிலாக கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா பங்கேற்றார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், கூட்டத்தின் போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய நிலவை நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு சார்பாக பங்கேற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால், தமிழ்நாட்டிற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;கர்நாடகா கூறிய காரணம் என்ன.?&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், கர்நாடகா தரப்பில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படடது.&lt;/p&gt;
&lt;p&gt;அதோடு, தற்போது இருக்கும் தண்ணீர், தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால்,&amp;nbsp; பாசனத்திற்காக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வாய்ப்புகள் இல்லை என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நிலவை நீரின் அளவு அதிகரிப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். அதில், மாதம் தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவுப்படி, ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 2.19 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா அரசு விடுவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், நடப்பு ஜூலை மாதம், 31.2 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். அதில், 19-ம் தேதி வரை 19.4 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 0.52 டிஎம்சி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால், கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு, 24.8 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது. நிலுவை நீரின் அளவு கூடிக்கொண்டே வருவதால், தமிழ்நாட்டில் பாசனம், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிப்பதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. இதுவரை 52 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 53-வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் புது டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஜூன் 23-ம் தேதி கடைசியாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூடியது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/these-are-the-best-fruits-for-constipation-268599&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/5f1ddbd760da9892b4ce9d9cd4c8b97c17847236923841179_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tamil Nadu Top  News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-top-5-news-today-july-22-2026-evening-breaking-news-politics-latest-headlines-268617</link><comments>https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-top-5-news-today-july-22-2026-evening-breaking-news-politics-latest-headlines-268617#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:59:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/tamil-nadu-top-5-news-today-july-22-2026-evening-breaking-news-politics-latest-headlines-268617</guid><description><![CDATA[&lt;p&gt;இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.&lt;/p&gt;
&lt;h2&gt;ஜூலை 21,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;h3&gt;1. புதுச்சேரியில் நாளை 'ஜனநாயகன்&quot; சிறப்புக் காட்சிக்கு அனுமதி&lt;/h3&gt;
&lt;p&gt;முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான &amp;lsquo;ஜனநாயகன்&amp;rsquo; Jananayagan&amp;nbsp; நாளை (23.07.2026) புதுச்சேரியில் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் திருக்கனூர் சுதா, வில்லியனூர் அசோக், ஜீவா திரையரங்குகளில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3&gt;2. US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?&lt;/h3&gt;
&lt;p&gt;அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் தயார்நிலை குறித்து தற்போது புதிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவத்தின் இலக்குகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், மோதல் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பற்றாக்குறை அமெரிக்காவிற்கு ஒரு பெரும் சவாலாக மாறக்கூடும் என்று அமெரிக்க ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், அதிபர் ட்ரம்பின் அனைத்து மூலோபாய இலக்குகளையும் நிறைவேற்றுவதற்கு அமெரிக்க ராணுவத்திடம் போதுமான ஆயுதங்கள் உள்ளன என்று கூறி, வெள்ளை மாளிகை இந்த கூற்றுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;3. ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை விமர்சித்த திமுக&lt;/h3&gt;
&lt;p&gt;திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்தைப் பலியிடும் நீட் அநீதிக்கு எதிராக இன்று இந்திய இளைஞர்களே வீதியில் இறங்கித் துணிச்சலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசத் துணியாமல், தன் டெல்லி எஜமானர்களுக்குப் பயந்து பதுங்கித் திரிகிறார் இந்த கோழை முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;! காவல் துறையின் அடக்குமுறைகளையும் மீறி, மாணவர்கள் நெஞ்சழுத்தத்தோடு ஊடகங்களைச் சந்தித்துத் தங்கள் உரிமைகளைத் தைரியமாக முழங்குகிறார்கள். ஆனால், நடுத்தெருவில் நின்று போராடும் அந்த சாதாரண மாணவர்களுக்கு இருக்கும் ஒரு துளித் துணிச்சல் கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பதுதான் வெட்கக்கேடு! என திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3&gt;4. கேரளாவுக்குக் கனிமவளக் கடத்தல் - சி.பி.ஐ. விசாரணை கோரி அன்புமணி அதிரடி!&lt;/h3&gt;
&lt;p&gt;சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;5. கட்சி தொடர்பான நீதிமன்ற மனு வாபஸ்: ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு!&lt;/h3&gt;
&lt;p&gt;சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ் திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸே தொடர்வது உறுதியாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;6. தமிழகத்தை குப்பை தொட்டியாக்கும் கேரளா; தினகரன் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்&lt;/h3&gt;
&lt;p&gt;தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் &amp;nbsp;தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;7. Weather Update: தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை? வானிலை கொடுத்த வார்னிங்&lt;/h3&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி வரை இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலை மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 22-07-2026 முதல் 24-07-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/a137bec52aae684d726ce310e30299141784717961199194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Jananayagan Special Show : கடைசி ஆட்டம்... உச்சகட்ட எதிர்பார்ப்பு! புதுச்சேரியில் நாளை 'ஜனநாயகன்" சிறப்புக் காட்சிக்கு அனுமதி...]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/jananayagan-vijay-last-film-puducherry-special-show-ticket-booking-tnn-268616</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/jananayagan-vijay-last-film-puducherry-special-show-ticket-booking-tnn-268616#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:25:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/jananayagan-vijay-last-film-puducherry-special-show-ticket-booking-tnn-268616</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான &amp;lsquo;ஜனநாயகன்&amp;rsquo; Jananayagan&amp;nbsp; நாளை (23.07.2026) புதுச்சேரியில் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் திருக்கனூர் சுதா, வில்லியனூர் அசோக், ஜீவா திரையரங்குகளில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;புதுச்சேரியில் 13 திரையரங்குகளில் வெளியீடு &amp;amp; சிறப்பு காட்சிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் முதலமைச்சர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனை முன்னிட்டு, புதுச்சேரியில் மட்டும் சுமார் 13 திரையரங்குகளில் இத்திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;காலை 7 மணி சிறப்பு காட்சிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;ரசிகர்கள் தங்களது தலைவனின் கடைசித் திரைப்படத்தைக் கொண்டாட ஏதுவாக, புதுச்சேரியின் முக்கிய திரையரங்குகளுக்கு அரசு சிறப்பு காட்சி அனுமதியை வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;திருக்கனூர் சுதா திரையரங்கம்&lt;/li&gt;
&lt;li&gt;வில்லியனூர் அசோக் திரையரங்கம்&lt;/li&gt;
&lt;li&gt;ஜீவா திரையரங்கம்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;ராக்கெட் வேகத்தில் முன்பதிவு:&lt;/h2&gt;
&lt;p&gt;திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இணையத்திலும் திரையரங்கின் நேரடி மையங்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் ராக்கெட் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;'ஜனநாயகன்'&lt;/h2&gt;
&lt;p&gt;விஜய் &amp;lsquo;ஜனநாயகன்&amp;rsquo; படத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே என இயக்குனர் எச் வினோத் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய &amp;lsquo;ஜனநாயகன்&amp;rsquo; திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,&lt;/p&gt;
&lt;p&gt;தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு நாளை 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கேவிஎன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் எச்.வினோத் பேட்டி அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் எச். வினோத்,&amp;ldquo; பல தடைகளைத் தாண்டி வெளியாகிறது &amp;lsquo;ஜனநாயகன்&amp;rsquo; திரைப்படம். விஜய் அவர்களுக்கு தனது கடைசி படம் இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் இருந்திருக்கலாம். பல கதைகளை கேட்ட பிறகு விஜய் இந்த படத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே. படம் இணையத்தில் கசிந்தாலும் முன்பதிவு நன்றாக இருக்கிறது. படத்துக்கு &amp;lsquo;ஏ&amp;rsquo; சான்றிதழ் கிடைத்ததில் வருத்தம். &amp;lsquo;ஜனநாயகன்&amp;rsquo; வெறுப்புக்கு எதிரான படம்.. ஒற்றுமையை பேசும் படம்.. வெறுப்புக்கு எதிரான படத்தின் மீது வெறுப்பை திணிப்பது சரியில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;lsquo;ஜனநாயகன்&amp;rsquo; படம் லீக் ஆனபோது எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இரண்டு மூன்று முறை அழுதேன்.. எனினும், தயாரிப்பாளர் கே.வி.என் மற்றும் நடிகர் விஜய் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள். படம் வெளியீட்டுக்கு முன்பே லீக் ஆன போதிலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு அளிப்பது பாராட்டுக்குரியது.. &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; மீதான மரியாதையாலும் நேர்மையாலும் தியேட்டரைத் தேடிவரும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய சல்யூட். &amp;rdquo; என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;கரூர் சம்பவம் தொடர்பாக படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு &amp;ldquo;ஜனநாயகன் படத்தில் கரூர் சம்பவம் குறித்த காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.. அது வதந்தி.. இதுபோன்ற பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் செயல் அறமற்றது&amp;rdquo; என்றார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/28346b9e8c0ef128b78965f15f98f8741784717517525194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Weather Update: தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை? வானிலை கொடுத்த வார்னிங்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-puducherry-karaikal-weather-update-22-7-26-heavy-rain-thunderstorms-likely-over-western-ghats-268612</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-puducherry-karaikal-weather-update-22-7-26-heavy-rain-thunderstorms-likely-over-western-ghats-268612#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:06:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-puducherry-karaikal-weather-update-22-7-26-heavy-rain-thunderstorms-likely-over-western-ghats-268612</guid><description><![CDATA[&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி வரை இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலை மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;22-07-2026 முதல் 24-07-2026 வரை:&lt;/strong&gt; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;25-07-2026:&lt;/strong&gt; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ahRaO6f5iEo?si=8b6ciyO-XUUTG-Gw&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;26-07-2026:&lt;/strong&gt; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;27-07-2026 மற்றும் 28-07-2026:&lt;/strong&gt; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/div&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:&amp;nbsp;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:&amp;nbsp;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;22-07-2026 முதல் 26-07-2026 வரை:&lt;/strong&gt; தமிழகம், புதுவை&amp;nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.&lt;/div&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:&amp;nbsp;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;22-07-2026 முதல் 26-07-2026 வரை:&lt;/strong&gt; உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3&amp;deg; செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை&amp;nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.&lt;/div&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;இன்று (22-07-2026):&lt;/strong&gt; வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு&amp;nbsp; நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38&amp;deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28&amp;deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;நாளை (23-07-2026):&lt;/strong&gt; வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு&amp;nbsp; நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37&amp;deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28&amp;deg; செல்சியஸை ஒட்டியும்&amp;nbsp; இருக்கக்கூடும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/is-charging-an-ev-at-home-cheaper-than-using-a-public-charger-268129&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/16/38dace4547af2fb7102a1f7393c3c1ef178418072186277_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/is-it-advisable-to-move-into-a-new-house-or-perform-the-housewarming-ceremony-boiling-milk-during-the-tamil-months-of-aani-and-aadi-what-is-the-actual-reason-tnn-268608</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/is-it-advisable-to-move-into-a-new-house-or-perform-the-housewarming-ceremony-boiling-milk-during-the-tamil-months-of-aani-and-aadi-what-is-the-actual-reason-tnn-268608#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:56:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/is-it-advisable-to-move-into-a-new-house-or-perform-the-housewarming-ceremony-boiling-milk-during-the-tamil-months-of-aani-and-aadi-what-is-the-actual-reason-tnn-268608</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; புதிய வீட்டிற்கு பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல் உள்ளிட்ட மங்கல நிகழ்வுகளை நல்ல நாள் மற்றும் சுப நேரம் பார்த்து செய்வது தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கமாகும். அவ்வாறு செய்யும் போதுதான் நாம் குடி புகும் வீட்டில் பொருளாதார வளர்ச்சியும், குடும்ப சுபிக்ஷமும் பெருகும் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், குறிப்பிட்ட தமிழ் மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற ஆன்மீக நியதியும் உள்ளது. குறிப்பாக ஆனி மற்றும் ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா, பால் காய்ச்சலாமா என்ற சந்தேகங்கள் பலருக்கு எழுவது உண்டு. அதற்கான முழுமையான ஜோதிட விளக்கத்தை இங்கு காண்போம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனி மாதம் என்பது முழுக்க முழுக்க இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகப் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சொந்த வீடு: ஆனி மாதத்தில் சொந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வதையோ அல்லது புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதையோ தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காரணம்: மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து பாதாளத்திற்குச் சென்றது ஆனி மாதத்தில்தான் என்று கூறப்படுவதே இதற்கு முதன்மை காரணமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாடகை வீடு: பணி மாறுதல் (Transfer), வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு வருவது போன்ற தவிர்க்க முடியாத அவசரக் காரணங்களால் வேறு வாடகை வீட்டிற்கு குடிபோக வேண்டிய சூழல் ஏற்பட்டால், நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்து பால் காய்ச்சி குடியேறலாம். இருப்பினும், கூடுமானவரை ஆனி மாதத்தில் வீடு மாறுவதைத் தவிர்ப்பதே நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆடி மாதத்தில் புது வீட்டிற்குச் செல்லலாமா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுவது &amp;lsquo;தட்சிணாயன காலம்&amp;rsquo; என அழைக்கப்படுகிறது. பொதுவான ஆன்மீக விதிகளின்படி இந்த தட்சிணாயன காலத்தில் சுப நிகழ்ச்சிகளைப் பெரும்பாலோர் செய்வதில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடி 18 (ஆடிப்பெருக்கு) விதிவிலக்கு: ஆடி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்குரிய மாதமாக இருந்தாலும், அதில் வரும் &amp;lsquo;ஆடி 18&amp;rsquo; (ஆடிப்பெருக்கு) அதிர்ஷ்டகரமான விதிவிலக்காகும். இந்த நன்னாளில் நல்ல நேரம் பார்த்து புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யலாம்; பால் காய்ச்சியும் குடியேறலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆன்மீக வழிபாட்டிற்குரிய பிற தமிழ் மாதங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி மற்றும் மார்கழி ஆகியவை இறை வழிபாட்டிற்கு மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட மாதங்களாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடி மாதம்: அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம். இக்காலத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புரட்டாசி மாதம்: ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு (பெருமாள்) உரிய மாதமாகும். மேலும், இக்காலகட்டத்தில் சக்திவாய்ந்த நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மார்கழி மாதம்: &amp;lsquo;தனுர் மாதம்&amp;rsquo; என்று அழைக்கப்படும் இம்மாறுகாலம் முற்றிலும் இறைவனை வழிபடுவதற்கே உரிய சிறப்புமிக்க மாதமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வேறு எந்த மாதங்களில் வீடு மாறக் கூடாது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனி மற்றும் ஆடி மாதங்கள் மட்டுமின்றி, மேலும் சில மாதங்களிலும் புது வீட்டிற்கு குடியேறுவதைத் தவிர்க்க வேண்டும்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பங்குனி மாதம்: பங்குனி மாதத்திலும் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யக் கூடாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சித்திரை மாதம்: சித்திரையில் வீசும் கடுமையான கத்தரி வெயிலின் போது வீடு மாறுவதையோ அல்லது குடியேறுவதையோ தவிர்க்க வேண்டும் என்று &amp;nbsp;அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/ac3360ee3cfdd8958fa22125033afdb41784715881429733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[500 பணியிடங்கள்:  உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! எங்கே தெரியுங்களா?]]></title><link>https://tamil.abplive.com/jobs/500-vacancies-priority-for-those-who-know-the-local-language-do-you-know-where-tnn-268605</link><comments>https://tamil.abplive.com/jobs/500-vacancies-priority-for-those-who-know-the-local-language-do-you-know-where-tnn-268605#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:33:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/500-vacancies-priority-for-those-who-know-the-local-language-do-you-know-where-tnn-268605</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (National Insurance Company Limited - NICL), காலியாக உள்ள 500 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மற்றும் உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவர்களுக்கு இது ஒரு அருமையான வேலைவாய்ப்பாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முன்னணி பொதுத்துறை நிறுவனத்தில் பணி வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நாட்டின் மிகவும் லாபகரமாக இயங்கும் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் சேர விரும்பும் தேர்வர்களுக்கு இந்த 500 காலியிடங்கள் அறிவிப்பு பெரும் நற்செய்தியாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாநில வாரியாகக் காலியிடங்களின் விவரங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு: 49 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதுச்சேரி: 02 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகாராஷ்டிரா: 57 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கு வங்கம்: 46 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ராஜஸ்தான்: 36 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கேரளா: 35 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குஜராத்: 34 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கர்நாடகா: 30 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உத்தரப் பிரதேசம்: 24 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;டெல்லி: 20 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அசாம் / சத்தீஸ்கர் / மத்தியப் பிரதேசம்: தலா 18 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒடிசா: 16 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தெலுங்கானா: 15 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆந்திரப் பிரதேசம்: 14 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பீகார்: 12 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஜார்க்கண்ட் / பஞ்சாப்: தலா 10 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உத்தராகண்ட்: 08 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அருணாச்சலப் பிரதேசம்: 05 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சண்டிகர் / ஜம்மு &amp;amp; காஷ்மீர்: தலா 04 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஹரியானா: 03 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவா / இமாச்சலப் பிரதேசம் / மேகாலயா / மிசோரம் / திரிபுரா: தலா 02 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகாலாந்து / சிக்கிம்: தலா 01 பணியிடம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி மற்றும் உள்ளூர் மொழி அறிவு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (Degree) முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொழித் தகுதி: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியைச் சிறப்பாக எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, தமிழகப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு மற்றும் தளர்வுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு: 01.07.2026 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அதாவது 02.07.1996-க்கு முன்பாகவோ அல்லது 01.07.2005-க்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயதுத் தளர்வு:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் தளர்வு உண்டு (35 வயது வரை விண்ணப்பிக்கலாம்).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;OBC பிரிவினர்: 3 ஆண்டுகள் தளர்வு உண்டு (33 வயது வரை விண்ணப்பிக்கலாம்).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஊதிய விவரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.63,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு முறை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்லைன் முதல் கட்ட எழுத்துத் தேர்வு (Phase-1 Online Exam)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்லைன் இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு (Phase-2 Online Exam)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேர்முகத் தேர்வு (Interview)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம் &amp;amp; முக்கிய தேதிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850/- (ஆன்லைனில் செலுத்த வேண்டும்). SC / ST பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நாள்: 18.07.2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதல் கட்டத் தேர்வு நாள் (தோராயமாக): 27.08.2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டாம் கட்டத் தேர்வு நாள் (தோராயமாக): 30.10.2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியுள்ள தேர்வர்கள் காலக்கெடு முடிவதற்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/58daa246fe53f1c47e527f75195bc02b1784714398008733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/excellent-job-opportunity-announcement-for-the-position-of-medical-assistant-in-the-air-force-tnn-268600</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/excellent-job-opportunity-announcement-for-the-position-of-medical-assistant-in-the-air-force-tnn-268600#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:57:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/excellent-job-opportunity-announcement-for-the-position-of-medical-assistant-in-the-air-force-tnn-268600</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் மற்றும் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு. கால தாமதம் இல்லாமல் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க. என்ன வேலை என்பது குறித்து முழு விபரமும் உங்களுக்காக.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையில் (Indian Air Force) மருத்துவ உதவியாளர் (Medical Assistant) மற்றும் 'அக்னிவீர் வாயு' (Agniveervayu 02/2027) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் மற்றும் தகுதியும் திறமையும் வாய்ந்த இந்திய இளைஞர்கள் ஆன்லைன் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அக்னிபத் திட்டம்: ஒரு பார்வை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளிலும் இளைஞர்களைத் தற்காலிகமாக இணைக்கும் பொருட்டு மத்திய அரசால் 'அக்னிபத்' (Agnipath Scheme) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் இளைஞர்கள் 'அக்னிவீரர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு: 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பணிக் காலம்: தேர்வு செய்யப்படும் நபர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிரந்தரப் பணி &amp;amp; சேவா நிதி: 4 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவடைந்த பிறகு, அவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய 'சேவா நிதி' (Seva Nidhi) தொகுப்பு வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆட்சேர்ப்பு முகாம் மற்றும் தேர்வு முறைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முப்படைகளின் அதிகாரப்பூர்வ விதிகளின்படி, உடற்தகுதித் தேர்வு (Physical Fitness Test) மற்றும் பிற தகுதித் தேர்வுகள் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு குறித்த விவரங்கள் தாம்பரத்தில் உள்ள 8 Airmen Selection Centre வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2026&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணையவழித் தேர்வு நடைபெறும் நாட்கள்: 22.09.2026 மற்றும் 23.09.2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் பாடத்திட்டம் (Syllabus) மற்றும் மாதிரி வினாத்தாள்களை (Model Question Papers) அறிந்து கொள்ள www.iafrecruitment.edcil.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உதவி எண்கள் (Helpline Numbers)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இணையவழி விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதில் தொழில்நுட்பச் சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால், தேர்வர்கள் தொடர்பு கொள்வதற்காக உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொலைபேசி எண்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;9513253233&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;011-25694209&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;011-25699606&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்: அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் கௌரவமிக்க இந்திய விமானப்படையில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலதாமதம் இன்றி உடனே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறலாம். அருமையான வாய்ப்பை இழந்து விட்டோமே என்று எண்ணாமல் இப்பவே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/d515a14442f6ac1c4fe573811d092d3c1784712308849733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பெண்கள் வளையல் அணிவதில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன? பாரம்பரிய நம்பிக்கைகளும் மருத்துவ விளக்கங்களும்]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/what-are-the-scientific-facts-behind-women-wearing-bangles-traditional-beliefs-and-medical-explanations-tnn-268594</link><comments>https://tamil.abplive.com/lifestyle/what-are-the-scientific-facts-behind-women-wearing-bangles-traditional-beliefs-and-medical-explanations-tnn-268594#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:49:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/what-are-the-scientific-facts-behind-women-wearing-bangles-traditional-beliefs-and-medical-explanations-tnn-268594</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; இந்திய பெண்களின் பாரம்பரிய அணிகலன்களில் முக்கிய இடம் வகிப்பது வளையல். அழகை மேம்படுத்தும் அலங்காரப் பொருளாக மட்டுமல்லாமல், திருமணம், மங்களம், குடும்ப மரபு மற்றும் கலாசார அடையாளமாகவும் வளையல்கள் கருதப்படுகின்றன. தங்கம், வெள்ளி, செம்பு, கண்ணாடி, மண், சங்கு, லாக், மரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் திருமண மரபுகளுக்கு ஏற்ப வெவ்வேறு வகை வளையல்களை அணியும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பஞ்சாபில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பாரம்பரிய வளையல்கள், மேற்கு வங்கத்தில் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள், உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தின் போது சிவப்பு நிற வளையல்கள், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பச்சை நிற வளையல்கள் ஆகியவை அந்தந்த மாநிலங்களின் கலாசார அடையாளங்களாக உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அறிவியல் ரீதியாக என்ன கூறப்படுகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்கள் வளையல் அணிவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பரவலாக நம்பப்பட்டாலும், அவற்றில் அனைத்திற்கும் உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூற முடியாது. இருப்பினும், சில அம்சங்களுக்கு மருத்துவ ரீதியாக விளக்கங்கள் உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மணிக்கட்டு பகுதியில் வளையல்கள் தொடர்ந்து அசைவதால் தோலில் லேசான உராய்வு மற்றும் அழுத்தம் ஏற்படுகிறது. இது அப்பகுதியில் உள்ள தசைகள் மற்றும் மென்மையான திசுக்களுக்கு தூண்டுதலை வழங்குகிறது. கை அசைவுகளின் போது இரத்த ஓட்டம் இயல்பாகவே அதிகரிக்க உதவலாம். இருப்பினும், வளையல் அணிவதாலேயே உடல் முழுவதும் இரத்த ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் தற்போது இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதால் கை மூட்டுகளின் இயல்பான அசைவுகளை நினைவூட்டும் ஒரு உணர்வு ஏற்படலாம். இதன் மூலம் சிலருக்கு மன அமைதி அல்லது பழக்கத்தின் காரணமாக உளவியல் ரீதியான நிம்மதி கிடைக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கர்ப்பிணிகளின் வளைகாப்பு மரபு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெறும் வளைகாப்பு விழா சமூக மற்றும் குடும்ப ஆதரவை வெளிப்படுத்தும் பாரம்பரிய நிகழ்வாகும். இந்த விழாவில் அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் அணிவிக்கப்படுகின்றன. வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது எழும் மென்மையான ஒலி தாய்க்கு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க உதவலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கர்ப்பகாலத்தின் இறுதிக்கட்டத்தில் கருவில் வளரும் குழந்தையின் செவித்திறன் வளர்ச்சியடைந்திருப்பதால், வெளிப்புற ஒலிகளை அது உணர முடியும் என்பது மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், வளையல் ஒலி குழந்தையின் செவித்திறனை மேம்படுத்துகிறது அல்லது அறிவுத்திறனை அதிகரிக்கிறது என்ற கருத்திற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கண்ணாடி வளையல்கள் குறித்து பரவும் நம்பிக்கைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கண்ணாடி வளையல்களின் ஒலி எதிர்மறை ஆற்றல்களை அகற்றும், உடலைச் சுற்றி பாதுகாப்பு வளையம் உருவாக்கும், சூரிய நாடியைத் தூண்டும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் போன்ற கருத்துகள் இந்து சமய மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளில் இடம்பெறுகின்றன. ஆனால் இவை மருத்துவ அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. அதேபோல், கண்ணாடி வளையல்கள் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்கின்றன என்பதற்கும் தற்போதைய மருத்துவ ஆய்வுகளில் உறுதியான ஆதாரம் இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாரம்பரியமும் நடைமுறையும் இணையும் இடம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வளையல்கள் பெண்களின் உடல் மொழி, கலாசாரம் மற்றும் குடும்ப மரபுகளை வெளிப்படுத்தும் முக்கிய அணிகலனாக இன்றளவும் திகழ்கின்றன. கண்ணாடி வளையல்களின் இனிமையான ஒலி பலருக்கு மகிழ்ச்சியையும் நேர்மறை உணர்வையும் அளிக்கக்கூடும். உளவியல் ரீதியாக மனநிலையை மேம்படுத்தும் சிறிய தாக்கம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் எந்தவொரு உடல்நலப் பிரச்சினைக்கும் வளையலை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக் கூடாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொத்தத்தில், வளையல் அணிவது இந்திய பெண்களின் கலாசார அடையாளமாகவும், சமூக மரபுகளின் தொடர்ச்சியாகவும் விளங்குகிறது. அதனுடன் தொடர்புடைய பல நம்பிக்கைகள் தலைமுறைகள் கடந்து பரவி வந்தாலும், மருத்துவ அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளையும் பாரம்பரிய நம்பிக்கைகளையும் தனித்தனியாக புரிந்துகொள்வதே சரியான அணுகுமுறையாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/a8d22b5296c8601231d0b210f5071e1e1784711572910733_original.png" width="220"/></item><item><title><![CDATA[ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல..  'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக]]></title><link>https://tamil.abplive.com/news/politics/dmk-has-criticized-vijay-for-failing-to-condemn-the-bjp-government-over-the-incident-in-which-students-were-attacked-268596</link><comments>https://tamil.abplive.com/news/politics/dmk-has-criticized-vijay-for-failing-to-condemn-the-bjp-government-over-the-incident-in-which-students-were-attacked-268596#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:44:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/dmk-has-criticized-vijay-for-failing-to-condemn-the-bjp-government-over-the-incident-in-which-students-were-attacked-268596</guid><description><![CDATA[&lt;h2&gt;நீட் தேர்வு மாணவர்கள் போராட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் காயம் அடைந்திருந்தனர். போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய அரசின் இந்த செயலுக்கு எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;டெல்லி எஜமானர்களுக்குப் பயந்து பதுங்கித் திரிகிறார்&lt;/h2&gt;
&lt;p&gt;இது தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்தைப் பலியிடும் நீட் அநீதிக்கு எதிராக இன்று இந்திய இளைஞர்களே வீதியில் இறங்கித் துணிச்சலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசத் துணியாமல், தன் டெல்லி எஜமானர்களுக்குப் பயந்து பதுங்கித் திரிகிறார் இந்த கோழை முதல்வர் விஜய்!&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;மாணவர்களுக்கு இருக்கும் ஒரு துளித் துணிச்சல் கூட இல்லாத 'டம்மி' முதல்வர்!&lt;br /&gt;&lt;br /&gt;​ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்தைப் பலியிடும் நீட் அநீதிக்கு எதிராக இன்று இந்திய இளைஞர்களே வீதியில் இறங்கித் துணிச்சலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;​ஆனால்,&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/5sKyQ4IlX0&quot;&gt;pic.twitter.com/5sKyQ4IlX0&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; DMK IT WING (@DMKITwing) &lt;a href=&quot;https://x.com/DMKITwing/status/2079809927217127837?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 22, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h3&gt;டம்மி முதல்வராக &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;​காவல் துறையின் அடக்குமுறைகளையும் மீறி, மாணவர்கள் நெஞ்சழுத்தத்தோடு ஊடகங்களைச் சந்தித்துத் தங்கள் உரிமைகளைத் தைரியமாக முழங்குகிறார்கள். ஆனால், நடுத்தெருவில் நின்று போராடும் அந்த சாதாரண மாணவர்களுக்கு இருக்கும் ஒரு துளித் துணிச்சல் கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பதுதான் வெட்கக்கேடு! என திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-prevent-paint-from-peeling-off-walls-due-to-moisture-268538&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/10/fa54c7342209ba2f4abba72dad66511f17836703184641321_original.jpg" width="220"/></item></channel></rss>