<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>bigg-boss-tamil</title><atom:link href="https://tamil.abplive.com/bigg-boss-tamil/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 08:41:10 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தொடர்ந்து சவால்களைச் சந்திக்கும் அதிமுக! வெளியேறும் முக்கிய நிர்வாகிகள்! மீட்டெடுப்பாரா இபிஎஸ்?]]></title><link>https://tamil.abplive.com/news/politics/admk-challenges-eps-general-secretary-party-revival-southern-districts-and-across-tamil-nadu-tnn-265821</link><comments>https://tamil.abplive.com/news/politics/admk-challenges-eps-general-secretary-party-revival-southern-districts-and-across-tamil-nadu-tnn-265821#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 08:02:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/admk-challenges-eps-general-secretary-party-revival-southern-districts-and-across-tamil-nadu-tnn-265821</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுகளாக ஆட்சிக்கட்டிலிலும், வலிமையான எதிர்க்கட்சியாகவும் கோலோச்சிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக). மறைந்த ஆளுமைகள் &lt;strong&gt;எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா&lt;/strong&gt; ஆகியோரின் மறைவுக்குப் பிறகு, பல்வேறு அரசியல் சூறாவளிகளையும் உட்கட்சிப் பூசல்களையும் இக்கட்சி எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில தேர்தல் களங்களில் அதிமுக சந்தித்த பின்னடைவுகள், அக்கட்சியின் எதிர்காலம் குறித்த விவாதங்களை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தீவிரப்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சூழலில், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் எனப் பலமுனைப் போட்டிகளையும் சட்டப் போராட்டங்களையும் கடந்து, கட்சியின் ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலாளராக உருவெடுத்துள்ளார் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்). சவால்கள் நிறைந்த இந்த அரசியல் பாதையில் அதிமுகவை அவர் எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறார் என்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் மிக முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இபிஎஸ்-இன் அசைக்க முடியாத பலமும் ஒற்றைத் தலைமையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய பலம், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் அவர் பெற்றிருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கு ஆகும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி சிதறிவிடும் என்று கணிக்கப்பட்ட வேளையில், நான்காண்டுகள் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியதோடு மட்டுமல்லாமல், தற்போதும் கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட கடுமையான அழுத்தங்களுக்குப் பணியாமல், கட்சியின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்கு வங்கியும் தென்மாவட்ட சவால்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிமுகவின் தற்போதைய முக்கிய சவால்களில் ஒன்று, இழந்த வாக்கு சதவீதத்தை மீண்டும் மீட்டெடுப்பதே ஆகும். குறிப்பாக, கட்சியின் பாரம்பரிய கோட்டையாகக் கருதப்பட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில தேர்தல்களாக ஏற்பட்ட தொய்வு, கட்சிக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் ஏற்பட்ட சிதறல்களும் தென் மண்டலத்தில் அதிமுகவின் பலத்தைக் குறைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்திலும் அதிமுகவில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியவில்லை.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியும், அதிமுக எம்எல்ஏக்களின் போர்க்கொடியும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;​2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதிமுகவிற்கு எதிர்பாராத பேரடியாகவும், அக்கட்சியின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதொரு சோதனைக் காலமாகவும் மாறியுள்ளது. இத்தேர்தலில் வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்த அதிமுகவிற்கு, தேர்தல் தோல்வியைக் காட்டிலும் அதன் பிறகு கட்சிக்குள் வெடித்துள்ள உள்விவகாரங்களே பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையின் கீழ் தேர்தலைச் சந்தித்த நிலையில், இந்த படுதோல்விக்குத் தலைமைத்துவத்தின் தவறான வியூகங்களும், கூட்டணிக் குழப்பங்களுமே காரணம் என்று கூறி கட்சியின் முக்கிய எம்எல்ஏக்கள் தற்போது போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, &lt;strong&gt;சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்&lt;/strong&gt; உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்களும், சிட்டிங் எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) நோக்கித் தங்களது அரசியல் பயணத்தைத் திருப்பியிருப்பது இபிஎஸ்-இன் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டது முதல், தங்களின் அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது வரை இந்த எம்எல்ஏக்களின் அதிரடி நகர்வுகள், அதிமுகவின் வாக்கு வங்கியையும் சட்டமன்ற பலத்தையும் ஒரே நேரத்தில் சரித்து வருகின்றன. தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே தலைமைக்கு எதிராகத் திரண்டு போர்க்கொடி உயர்த்துவது, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் ஆளுமைக்கும், அதிமுகவின் எதிர்காலக் கட்டமைப்புக்கும் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முடிசூடுமா எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிமுக என்ற பேரியக்கத்தின் எதிர்காலம் என்பது எடப்பாடி பழனிசாமி இனிவரும் காலங்களில் எடுக்கப்போகும் அதிரடி மற்றும் ராஜதந்திர முடிவுகளில்தான் அடங்கியிருக்கிறது. உட்கட்சிக் கட்டமைப்பை இன்னும் பலப்படுத்துவது, தொண்டர்களிடையே சோர்வை நீக்கி உத்வேகத்தை ஏற்படுத்துவது, உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுத்தேர்தல் வரை தொய்வில்லாத களப்பணியை ஆற்றுவது என அவர் முன் பல பொறுப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. விமர்சனங்களையும் சவால்களையும் தாண்டி, அதிமுகவை மீண்டும் ஒரு வெற்றிப் பாதைக்கு இபிஎஸ் அழைத்துச் செல்வாரா, தமிழக அரசியல் களத்தில் தனது ஆளுமையை முழுமையாக நிரூபிப்பாரா என்பதை அவரது அடுத்தகட்ட &lt;strong&gt;'மாஸ்டர் பிளான்'&lt;/strong&gt;களும், காலமும் தான் தீர்மானிக்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/234128a9cf3bd28d30b182d918fc2a2017829594080181319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே தீபம்… பல விதமான பலன்கள்! எந்த திரி என்ன அதிசயம் செய்கிறது? அதிர விடும் ஆன்மிக ரகசியங்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/a-single-lamp-diverse-benefits-which-wick-creates-what-miracle-spiritual-secrets-that-will-leave-you-amazed-tnn-265811</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/a-single-lamp-diverse-benefits-which-wick-creates-what-miracle-spiritual-secrets-that-will-leave-you-amazed-tnn-265811#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 08:02:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/a-single-lamp-diverse-benefits-which-wick-creates-what-miracle-spiritual-secrets-that-will-leave-you-amazed-tnn-265811</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; பஞ்சுத் திரி முதல் தாமரைத் தண்டு வரை&amp;hellip; மறைந்திருக்கும் ஆன்மிக சக்தி என்ன? எந்த திரியில் தீபம் ஏற்றினால் அதிர்ஷ்டம் திறக்கும்? நம்பிக்கைகள் சொல்வது என்ன? விளக்கு ஏற்றும் விதமே விதி மாற்றுமா? அதிர வைக்கும் ஆன்மிக தகவல்கள்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இறைவழிபாட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இறைவன் ஜோதி வடிவமாக விளங்குவதை உணர்த்தும் அடையாளமாக தீப வழிபாடு பார்க்கப்படுகிறது. வீட்டிலும், கோவில்களிலும் தினமும் தீபம் ஏற்றுவது மங்களகரமானதாகவும், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் வழிபாடாகவும் ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விளக்கு ஏற்றும்போது பயன்படுத்தப்படும் விளக்கின் வகை மட்டுமல்லாமல், அதில் பயன்படுத்தப்படும் திரி, அதன் நிறம், எண்ணெய், தீபம் ஏற்றும் திசை மற்றும் நேரம் ஆகியவற்றுக்கும் ஆன்மிக முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு திரிக்கும் தனித்தனி பலன்கள் இருப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பஞ்சுத் திரி &amp;ndash; மங்களமும் மன அமைதியும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூய்மையான இலவம் பஞ்சால் தயாரிக்கப்படும் பஞ்சுத் திரி, வழக்கமாக அதிகம் பயன்படுத்தப்படும் திரியாகும். இந்தத் திரியில் தீபம் ஏற்றினால் இல்லத்தில் மங்களம் நிலைக்கும், மன அமைதி அதிகரிக்கும், குடும்ப ஒற்றுமை மேம்படும், தெய்வ அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பதால், தினசரி பூஜைக்கு மிகவும் ஏற்றதாக இது கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாமரைத் தண்டு திரி &amp;ndash; மகாலட்சுமியின் அருள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகாலட்சுமியின் அடையாளமாக தாமரை கருதப்படுவதால், தாமரைத் தண்டு திரியில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானதாக கூறப்படுகிறது. இதனால் செல்வ வளம் பெருகும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும், குலதெய்வ அருள் கிடைக்கும், தெய்வக் குற்றங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இந்தத் திரியில் தீபம் ஏற்றுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வெள்ளை எருக்கு மற்றும் வாழைத்தண்டு திரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளை எருக்கச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் திரி சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் தீபம் ஏற்றினால் விநாயகரின் அருள் கிடைக்கும், எதிர்மறை சக்திகள் விலகும், வீட்டில் செல்வம் நிலைக்கும், கெட்ட கனவுகள் குறையும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாழைத்தண்டு திரியில் தீபம் ஏற்றினால் இல்லத்தில் அமைதி நிலைக்கும், முன்னோர் அருள் கிடைக்கும், குழந்தைப்பேறு கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திரியின் நிறத்திற்கேற்ப கிடைக்கும் பலன்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிவப்பு நிறத் திரி சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. இதில் தீபம் ஏற்றினால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மஞ்சள் நிறத் திரி மங்களத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதில் தீபம் ஏற்றுவது இல்லற வாழ்க்கை செழிக்கவும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும், குருபகவானின் அருள் கிடைக்கவும் உதவும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளை நிறத் திரியில் தீபம் ஏற்றினால் மன அமைதி, வீட்டில் சுபிட்சம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பச்சை நிறத் திரி புதன் பகவானுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லைகள் குறையும், வியாபாரம் வளர்ச்சி அடையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், சமூகத்தில் மதிப்பு உயரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கிழமைகளுக்கு ஏற்ற திரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வொரு கிழமையிலும் அதற்குரிய கிரகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நிறத் திரியில் தீபம் ஏற்றுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஞாயிற்றுக்கிழமை &amp;ndash; சிவப்பு திரி (சூரிய பகவான்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திங்கட்கிழமை &amp;ndash; வெள்ளை திரி (சந்திர பகவான்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செவ்வாய்க்கிழமை &amp;ndash; சிவப்பு திரி (செவ்வாய் பகவான்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதன்கிழமை &amp;ndash; பச்சை திரி (புதன் பகவான்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வியாழக்கிழமை &amp;ndash; மஞ்சள் திரி (குரு பகவான்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெள்ளிக்கிழமை &amp;ndash; பஞ்சுத் திரி அல்லது வெள்ளை நூல் திரி (மகாலட்சுமி வழிபாடு)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சனிக்கிழமை &amp;ndash; சாதாரண பஞ்சுத் திரி (சனி பகவான்)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்மிக நம்பிக்கைகளின்படி தீப வழிபாடு மன அமைதி, நேர்மறை எண்ணங்கள் மற்றும் இறைநம்பிக்கையை வளர்க்கும் வழிபாடாக கருதப்படுகிறது. இருப்பினும், மேற்கண்ட பலன்கள் ஆன்மிக மரபுகள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுபவையாகும். நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாகவும், தெளிவாகவும் உணர்ந்த பின்னர்தான் அதை செயலுக்கு கொண்டு வந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/cf5e8b9b0fbed15edf9c0ddfe9c1be8a1782958555265733_original.png" width="220"/></item><item><title><![CDATA[சினிமா பாணியில் சேசிங்! விபத்தில் முடிந்த குட்கா கடத்தல்.. கைதான தவெக நிர்வாகி]]></title><link>https://tamil.abplive.com/short-videos/news/tamil-nadu-tvk-cadre-gudka-265818</link><comments>https://tamil.abplive.com/short-videos/news/tamil-nadu-tvk-cadre-gudka-265818#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 07:33:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/short-videos/news/tamil-nadu-tvk-cadre-gudka-265818</guid><description><![CDATA[&lt;p&gt;சினிமா பாணியில் சேசிங்! விபத்தில் முடிந்த குட்கா கடத்தல்.. கைதான தவெக நிர்வாகி&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/cdb9ae1c5f8b59ac7db8ae7ea2ebc74117829577700321345_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/list-of-former-ministers-and-mlas-joining-tvk-at-the-grand-event-taking-place-in-mamallapuram-today-tnn-265806</link><comments>https://tamil.abplive.com/news/politics/list-of-former-ministers-and-mlas-joining-tvk-at-the-grand-event-taking-place-in-mamallapuram-today-tnn-265806#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 07:07:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/list-of-former-ministers-and-mlas-joining-tvk-at-the-grand-event-taking-place-in-mamallapuram-today-tnn-265806</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) பிற கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் இணையும் பிரம்மாண்ட விழா இன்று மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, த.வெ.க தொண்டர்களின் வருகையால் அந்த பகுதியே ஸ்தம்பித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு த.வெ.க தனது அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி வரும் வேளையில், இந்த மாற்று கட்சியினர் இணையும் விழா ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் உற்றுநோக்கலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;களம் மாறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பிரம்மாண்ட விழாவின் முக்கிய அம்சமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அதிமுக) சேர்ந்த நான்கு முன்னணி முன்னாள் அமைச்சர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் த.வெ.க-வில் இணைகின்றனர். நீண்ட காலமாக அதிமுக-வில் முக்கிய பொறுப்புகளையும், அமைச்சரவையில் செல்வாக்குமிக்க துறைகளையும் கையாண்ட இந்த மூத்த தலைவர்களின் இந்த திடீர் அரசியல் மாற்றம், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிக்கு ஒரு பலத்த பின்னடைவாகவும், த.வெ.க-விற்கு மிகப்பெரிய பலமாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின்&amp;nbsp;அணிவகுப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி, பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க-வில் தங்களை இணைத்துக் கொள்ள இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ மான்ராஜ், பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ ஆ.ராம்குமார், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ சதன் பிரபாகர், பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ ஞானசம்பந்தம், புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ பி.கே. வைரமுத்து மற்றும் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் ஆகிய ஏழு முக்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய விழாவில் முறைப்படி கட்சியில் இணைகின்றனர். தத்தமது தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியையும், மக்கள் செல்வாக்கையும் கொண்டுள்ள இந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் வருகை, த.வெ.க-வின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த பெரிதும் உதவும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுக்குழு உறுப்பினர்களின் பலம் மற்றும் த.வெ.க-வின் எதிர்காலம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தவிர, அதிமுக-வின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு இன்றைய விழாவில் த.வெ.க தலைவர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர். ஒரே மேடையில் இத்தனை முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைவது, கட்சியின் மீதான நம்பிக்கையையும் அதன் அரசியல் எதிர்காலத்தையும் காட்டுவதாக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட அரசியல் நகர்வு, வரும் தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவதோடு, த.வெ.க-வை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஏராளமான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிக் கொண்டிருப்பது, அதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/39a0e962beaf089c52b0df551e8f231e17829562111001319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூர் கந்தூரி விழா.. சிலம்பம் சுற்றி அசத்திய அனிதா ராதாகிருஷ்ணன்!]]></title><link>https://tamil.abplive.com/short-videos/news/tamil-nadu-anitha-radhakrishnan-silambam-265809</link><comments>https://tamil.abplive.com/short-videos/news/tamil-nadu-anitha-radhakrishnan-silambam-265809#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 07:07:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/short-videos/news/tamil-nadu-anitha-radhakrishnan-silambam-265809</guid><description><![CDATA[&lt;p&gt;திருச்செந்தூர் கந்தூரி விழா.. சிலம்பம் சுற்றி அசத்திய அனிதா ராதாகிருஷ்ணன்!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/696d7b33291b8c372bf90cba30b800a417829562376721345_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-high-wind-july-2nd-latest-rain-warning-265798</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-high-wind-july-2nd-latest-rain-warning-265798#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 06:14:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-high-wind-july-2nd-latest-rain-warning-265798</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TN weather Rain Update (02-07-2026):&lt;/strong&gt; சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, &amp;ldquo;சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 03 ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று&amp;nbsp;தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-is-baby-born-after-9-months-details-in-pics-265693&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடுத்த 2 நாட்களுக்கான வானிலை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;03-07-2026:&lt;/strong&gt; கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;04-07-2026:&lt;/strong&gt; கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37&amp;deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/sWpXZ12pE3o?si=UkhvDrB0EYF2BG8T&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மீனவர்களுக்கான எச்சரிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தமிழக கடலோரப்பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;05-07-2026: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;வங்கக்கடல் பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;02-07-2026:&lt;/strong&gt; மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்&amp;rdquo; எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/30/61527e0455562e4ce7b4f93b28b62c951730272189757102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/krishnagiri-rajasekar-kills-girlfriend-commits-suicide-with-mother-tnn-265797</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/krishnagiri-rajasekar-kills-girlfriend-commits-suicide-with-mother-tnn-265797#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 23:40:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/krishnagiri-rajasekar-kills-girlfriend-commits-suicide-with-mother-tnn-265797</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;என்னையும் என் தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் என்பவர் மகன் 30 வயதுடைய ராஜசேகர். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் தாயுடன் தங்கி கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கடையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அப்போது ராஜசேகருக்கு பெங்களூர் ஆடுகோடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நளினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து போன் மற்றும் நேரில் சந்தித்து பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி இருவரும் தொடர்ந்து வெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இதற்கிடையில் ராஜசேகர் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரூத்ரப்பா என்பருக்கும், ராஜசேகருக்கும் பொது வழியில் செல்வது குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த (ஜூன் 28) நள்ளிரவில் ராஜசேகர் மற்றும் அவருடைய அம்மா மஞ்சுளா ஆகிய இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய மெசேஜ்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராஜசேகர் &quot;நானும் , எனது தாய் மஞ்சுளா தற்கொலை செய்து கொள்ள போகிறோம், அதற்கு காரணம் பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்தரப்பா, அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் தான், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். &quot; என்னையும் என் தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும் &quot; என கடிதம் எழுதி கன கடை உரிமையாளர் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;செல்போனில் வந்த கடித்தை பார்த்து அதிர்ந்த அவரது நண்பர்கள் நள்ளிரவில் கொலமங்கலம் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக போலீசார் இருவரையும் செல்போன் டவர் லொகேஷன் வைத்து தேடிய போது தேன்கனிக்கோட்டை தண்டரை ஏரி பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் போலீசார் சென்று ஏரியில் தேடிய போது ராஜசேகர், தாய் மஞ்சுளா ஆகிய இருவரின் உடல் துணியால் கட்டப்பட்ட நிலையில் மிதந்து உள்ளது. இருவரின் சடலங்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;எரிக்கப்பட்ட நிலையில் பெண் உடல்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இது குறித்து வழக்குப் பதிவு செய்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ராஜசேகரின் காதலி நளினா பெங்களூர் ஆடுகோடி பகுதியில் ஹாஸ்டலில் தங்கி பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். அவருக்கு தாய் , தந்தை யாரும் இல்லை என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ராஜசேகர் நளினியை தவிர்த்து வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது, இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல கடந்த வாரம் காதலி நளினியுடன் மாதேஸ்வரன் என்கிற மலைக்கு சென்ற ராஜசேகர் அவரை கொலை செய்து உடலை காட்டு பகுதியில் எரித்து விட்டு வீட்டிற்கு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பௌகாவி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 20 முதல் 25 வயது உடைய பெண் கொலை செய்யப்பட்டு உடல் எரிந்த நிலையில் இருப்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;ஆதாரங்களை சேகரித்த காவல் துறையினர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலில் கருகிய நிலையில் நகைகள், வாட்சு உள்ளிட்டவற்றை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதில் ராஜசேகர் கார் அப்பகுதியில் உள்ள டேல்கேட்டிற்கு சென்று வந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதை வைத்து விசாரித்த போது இறந்து பெண் பெங்களூரை ஆடுகோடி பகுதியில் தங்கி உள்ள நளினி என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விடுதியில் உடன் தங்கியுள்ள நளினியின் தோழிகளிடம் விசாரித்ததில் ராஜசேகர் நளினியை காதலித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;எனவே கார் எண்ணை வைத்து முகவரியை கண்டறிந்து கர்நாடக போலீசார் , ராஜேசுக்கு போன் செய்து &quot;உங்கள் கார் மண்டியா மாவட்டம் டோல்கேட் பகுதியில் சென்றுள்ளது அங்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது அது குறித்து உங்களுக்கு தெரியுமா ? என விசாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதில் பதட்டமடைந்த ராஜசேகர் கொலை வழக்கில் சிக்கிக் கொள்வோம் என பதட்டம் அடைந்து நிலப் பிரச்சனையில் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;காதலியை கொலை செய்து விட்டு கொலையை திசை திருப்ப தாயுடன் சேர்ந்து வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/31/3645ce692183b692dc05975e22e543de1730397097913211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-double-murder-case-accused-gets-double-life-imprisonment-tnn-265792</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-double-murder-case-accused-gets-double-life-imprisonment-tnn-265792#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 22:55:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-double-murder-case-accused-gets-double-life-imprisonment-tnn-265792</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;கடந்த 2022 - ம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நாளன்று இரவு சுமார் 11 மணியளவில் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியது.&amp;nbsp; அடவிநயினார் கோவில் அணைக்கு செல்லும் சாலையில் உள்ள வீட்டில் அப்துல்கனியின் மனைவி , 70 வயதான சைத்தான் பீவி தனியாக உறங்கிக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது குடிபோதையில் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த முகம்மது காசிம் ( வயது 19 ) என்ற நபர்&amp;nbsp;மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலின் போது சைத்தான் பீவி உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;யார் அது ? சத்தம் போட்ட பேரன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மூதாட்டி உயிரிழந்த பிறகு, அவரது உடலை நிர்வாண நிலையில் வீட்டிலிருந்து வெளியே தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த அவரது பேரன் காஜீர் அலி , இருட்டில் என்ன நடக்கிறது என்று புரியாமல் &quot;யார் அது ? &quot; என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குற்றவாளி, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து காஜீர் அலியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் , அச்சன்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று , இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மேக்கரை கிராமம் வண்ணாத்திப்பாறை சாலை பகுதியைச் சேர்ந்த முகம்மதுகனியின் மகன் முகம்மது காசிம் ( வயது 19 ) என்பவரே இந்த இரட்டை கொலை வழக்கின் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;இரட்டை ஆயுள் தண்டனை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அவரை கைது செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்து சாட்சிகள், மருத்துவ ஆதாரங்கள் மற்றும் புலனாய்வு ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், முகம்மது காசிம் மீதான குற்றச் சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டதாக கூறி தீர்ப்பளித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்கும், அவரது பேரன் காஜீர் அலியை கொலை செய்ததற்கும் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு உத்தர விட்டார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/13/dd43c44d3231a9cfb2922f19d34fc59d1728797798277651_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/thanuja-refugee-palk-strait-sea-swimming-permission-central-government-tnn-265795</link><comments>https://tamil.abplive.com/news/trichy/thanuja-refugee-palk-strait-sea-swimming-permission-central-government-tnn-265795#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 22:53:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/thanuja-refugee-palk-strait-sea-swimming-permission-central-government-tnn-265795</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின்&amp;nbsp; தனுஷ்கோடியிலிருந்து&amp;nbsp; தலைமன்னார் வரை பாக் ஜலசந்தியைக் கடந்து மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்திற்கு அனுமதி கோரிய&amp;nbsp; மனு மீதான விசாரணையில், மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ள அனுமதி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திருச்சியை சேர்ந்த தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில்...,&quot; இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட முகாமற்ற இலங்கை அகதியாக வசித்து வருகிறேன். நான் நீச்சல் வீராங்கனை. இலங்கை அகதி. தமிழ்நாட்டின்&amp;nbsp; தனுஷ்கோடியிலிருந்து&amp;nbsp; தலைமன்னார் வரை பாக் ஜலசந்தியைக் கடந்து மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை&amp;nbsp;மேற்கொள்ள உள்ளேன். இதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தேன்.. கடவுச்சீட்டு இல்லாததால்&amp;nbsp; வழங்க வில்லை. எனவே இதற்கு தேவையான அனுமதி வழங்க&amp;nbsp; உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இந்த மனு&amp;nbsp; நீதிபதி சரவணன் விசாரணைக்கு வந்தது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அப்போது மனுதாரரின் மனு குறித்து, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/a31ffc2c13ddaddc40f5f62aba977dbb_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cunning-thief-linked-to-40-cases-arrested-in-a-swift-operation-in-thanjavur-tnn-265794</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cunning-thief-linked-to-40-cases-arrested-in-a-swift-operation-in-thanjavur-tnn-265794#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 22:50:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cunning-thief-linked-to-40-cases-arrested-in-a-swift-operation-in-thanjavur-tnn-265794</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூரில் காவலர் என்று பொய் கூறி, இளம்பெண்ணை ஏமாற்றி மூன்றரை பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற காரியக்கார திருடனை காவல் துறையினர் தீவிர விசாரணையில் தட்டி தூக்கி உள்ளனர். பிடிபட்ட நபர் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நெடுஞ்சாலையில் நடந்த நாடகம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நாகை நெடுஞ்சாலை பகுதியில், அண்மையில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அவர்கள் அருகே வண்டியை நிறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகார தோரணையில் பேசிய அந்த நபர், தான் ஒரு காவலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். &quot;பொது இடத்தில் இப்படி தனியாக நின்று பேசக் கூடாது; உங்களை விசாரிக்க வேண்டும்&quot; என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். மேலும், விசாரிக்க வேண்டும் என்று கூறி, அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை மட்டும் சற்று தொலைவில் அழைத்துச் சென்று தனியாக நிற்க வைத்துள்ளார். &quot;இங்கு இன்னும் சற்று நேரத்தில் உயர் அதிகாரிகள் வருவார்கள், அவர்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்&quot; எனக்கூறி அவர்களை பதற்றமடையச் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிகார மிரட்டலும்... நகை பறிப்பும்...&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆண் நண்பர் தள்ளி நின்ற இடைவெளியைப் பயன்படுத்திய அந்த நபர், தனியாக நின்ற பெண்ணிடம் மீண்டும் வந்து தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். &quot;இப்போது இந்த இடத்திற்கு ஆய்வாளர் (Inspector) அல்லது உதவி ஆய்வாளர் (SI) வரப் போகிறார்கள். அவர்கள் வந்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிடுவார்கள். மேலும், நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்திருந்தால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும்&quot; என்று பயமுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;எனவே, உங்கள் கழுத்தில் இருக்கும் நகைகளைக் கழற்றி தற்காலிகமாக என்னிடம் கொடுங்கள். அதிகாரிகள் சென்றுவிட்ட பிறகு, நான் உங்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து விடுகிறேன்&quot; என்று அந்தப் பெண்ணிடம் நயவஞ்சகமாகப் பேசியுள்ளார். போலி போலீஸ் என்று கூறிய அந்த மர்மநபரின் மிரட்டலுக்குப் பயந்த அந்தப் பெண்ணும், அவர் நிஜமான காவலர் தான் என நம்பி, தான் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளைக் கழற்றி அவரிடம் கொடுத்துள்ளார். நகையைக் கையில் வாங்கிய அடுத்த நொடியே, அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அலறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வலைவீசிய போலீஸ்: சிசிடிவியில் சிக்கிய க்ளூ!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து உடனடியாக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல் துறையினர், குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளைக் காவல் துறையினர் அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் &quot;போலீஸ்&quot; (Police) என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததும், அதில் வந்த நபர் தான் இந்தத் துணிகர நகைப்பறிப்பில் ஈடுபட்டார் என்பதும் தெரியவந்தது. அந்த வாகன எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போது போலீசாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;40 வழக்குகளில் தேடப்பட்ட 'கில்லாடி' சிவராமன்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையினரின் அதிரடி விசாரணையில், அந்தப் பறிப்பில் ஈடுபட்ட நபர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள சின்ன காப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சி. சிவராமன் (46) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவர் சாதாரண ஆள் அல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதேபோல 'போலீஸ்' என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒரு 'கில்லாடி' குற்றவாளி என்பது அம்பலமானது. மேலும், இவர் தனது அடையாளத்தை மறைக்கவும், போலீசாரிடம் சிக்காமல் இருக்கவும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கிடையில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது சிவராமன் ஒரு பைக்கில் வந்துள்ளார். அப்புறம் என்ன? தனிப்படை போலீசார் சட்டென்று பிடித்து &amp;nbsp;அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலி போலீஸ் வேடமிட்டு உலா வந்த பழைய குற்றவாளி தஞ்சாவூரில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழி நிரூபணம் ஆகியுள்ளது. பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய நபர் தஞ்சையில் சிக்கிய உள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/410c30857d4f84d74289ba7528e2e2ac1782926364932733_original.jpg" width="220"/></item></channel></rss>