<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>bigg-boss-tamil</title><atom:link href="https://tamil.abplive.com/bigg-boss-tamil/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 03:22:23 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/woman-murdered-by-paramour-with-spade-near-udumalaipettai-balappampatti-crime-news-tnn-270862</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/woman-murdered-by-paramour-with-spade-near-udumalaipettai-balappampatti-crime-news-tnn-270862#respond</comments><pubDate>Wed, 12 Aug 2026 02:45:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/woman-murdered-by-paramour-with-spade-near-udumalaipettai-balappampatti-crime-news-tnn-270862</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; விபத்தில் உருவான கள்ளத் தொடர்பு &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டியை சேர்ந்தவர் பானுமதி ( வயது 45 ) இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து விட்டனர். அதைத் தொடர்ந்து தனது மகள் பிரியங்காவுடன் தனியாக வசித்து வந்தார் பானுமதி.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இந்த நிலையில் பானுமதி இந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். பானுமதி ஒரு நாள் வேலை முடிந்து பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்த போது ஒரு விபத்தில் ஆனைமலையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் காயம் அடைந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அங்கு அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அதிலிருந்து இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. பானுமதியும் அவ்வப்போது பிரபாகரனிடம் கை செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;கள்ளக் காதல் கை விட எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பானுமதி தனது மகள் பிரியங்காவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பானுமதிக்கும் பிரபாகரனுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதை பார்த்த பானுமதியின் மருமகன் அவருடனான கள்ளத் தொடர்பை துண்டிக்குமாறு எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அதை தவிர்த்து வந்துள்ளார் பானுமதி.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் பிரபாகரன் விடாது அவரை தொலைபேசியில் அழைத்து பேசுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் பானுமதி உடுமலை போலீசில் பிரபாகரன் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் பிரபாகரன் பானுமதியை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதி இல்லத்திற்கு வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அவர் மீது பானுமதி போட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறும் பானுமதி பேரில் அவருக்கு சிம் கார்டு வாங்கி தருமாறும் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதை பார்த்த அருகில் இருந்த பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்த மயில்சாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரையும் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து, அங்கு பானுமதியை கொலை செய்துவிட்டு அமர்ந்திருந்த பிரபாகரனை கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் தொடர்ச்சியாக காயம் அடைந்த மயில்சாமியை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பானுமதியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு, இது குறித்து மயில்சாமி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாலப்பம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/12/a767d883423b169453c3d81e9eafda4d17864828761231310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-government-school-student-dinesh-ranks-first-in-neet-2026-tamilnadu-tnn-270859</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-government-school-student-dinesh-ranks-first-in-neet-2026-tamilnadu-tnn-270859#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 22:50:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-government-school-student-dinesh-ranks-first-in-neet-2026-tamilnadu-tnn-270859</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நீட் (NEET 2026) தேர்வில் தமிழ்நாட்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மு.தினேஷிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமை தாங்கி, மாணவரைப் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கிப் பாராட்டினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவனின் இமாலய சாதனை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகையன் மற்றும் உமாராணி ஆகியோரின் மகனான மு.தினேஷ், நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் 2026 தேர்வில் பங்கேற்றார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.இச்சாதனையைக் கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.08.2026) சிறப்புப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தோல்வியைக் கண்டு தளராத அர்ப்பணிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர் தினேஷின் கல்விப் பயணத்தைக் குறிப்பிட்டுப் பேசிய மாவட்ட ஆட்சியர், அவரது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் வெகுவாகப் பாராட்டினார்.&lt;br /&gt;மாணவர் தினேஷ், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பெரியகுத்தகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளை தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளை நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியிலும் பயின்றுள்ளார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 475 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 554 மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஆண்டு எழுதிய நீட் (NEET 2025) தேர்வில் 379 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கைநழுவியது. இருப்பினும், அந்தத் தோல்வியைக் கண்டு மனம் தளராத தினேஷ், ஒரு ஆண்டு இடைவெளி (Repeat Year) எடுத்து, முழு அர்ப்பணிப்புடன் மீண்டும் தீவிரமாகப் பயின்றார். அதன் பலனாக, நீட் 2026 தேர்வில் தன் மதிப்பெண்ணை 220 மதிப்பெண்கள் உயர்த்தி, 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி உரை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவில் மாணவரைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் பேசியதாவது: &quot;நாகப்பட்டினம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேளாங்கன்னி தேவாலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் மற்றும் சுவையான இறால் வடை தான். ஆனால், இனி நாகப்பட்டினம் என்று சொன்னாலே வேதாரண்யம் தாலுக்கா, பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்து மாணவன் தினேஷின் பெயர் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். நேற்றைய தினம் நான் ஆய்வுக் கூட்டத்தில் இருந்த போது, மாணவர் தினேஷ் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்ற நற்செய்தி கிடைத்தது. அதைக்கேட்டவுடன் எனது சொந்தச் சகோதரருக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் கருதி மகிழ்ச்சியடைந்தேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நமது மாவட்ட மாதிரிப் பள்ளி, ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் என்பதைக் தினேஷ் தனது சாதிப்பின் மூலம் நிரூபித்துள்ளார். இப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 8 பேரும், 2023-24 இல் 3 பேரும், 2024-25 இல் ஒருவரும் என இதுவரை 12 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது தினேஷின் இந்த வெற்றி மற்ற மாணவர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கத்தையும் முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இனிப்பான வெற்றியைத் தந்த தினேஷிற்கும், அவரது பெற்றோருக்கும், மாதிரிப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்&quot; என்று பேசினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்திரா, &amp;nbsp;மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் &amp;nbsp;நா.உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சாதனை மாணவரை வாழ்த்தினர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/e5d72d863a8e82333c05d5790ade9be91786468750694186_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:53:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஆடித்திருவிழாவை முன்னிட்டு குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, கப்பல் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்துள்ள நல்லவாடு மீனவர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முகுந்தாவதி, ஒரு மகள் மற்றும் மகனுடன் வசசித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;நேற்று நல்லவாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற குட்டியாண்டவர் கோயிலில் ஆடிமாதத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக முகுந்தாவதி தனது பிள்ளைகள் மற்றும் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த உறவினர்களுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிர்ச்சி தந்த காட்சி:&lt;/h2&gt;
&lt;p&gt;திருவிழா நிகழ்வுகள் முடிந்து இரவில் குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே இருந்த 2 பீரோக்களின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு முகுந்தாவதி கடும் அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;உள்ளே சென்று சோதித்துப் பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்குச் சென்றதை நைஸாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீஸார் விசாரணை தீவிரப்படுத்தல்:&lt;/h2&gt;
&lt;p&gt;இச்சம்பவம் குறித்து முகுந்தாவதி உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தார். புகாரின் பேரில் தவளக்குப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களைச் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;பொதுமக்கள் அச்சம்:&lt;/h2&gt;
&lt;p&gt;அண்மையில்தான் இதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்தச் சம்பவத்தின் வடு மாறுவதற்குள்ளேயே, தற்போது மீண்டும் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது நல்லவாடு கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/269b1122cc179b284062e9a88e8f72c21786465265317194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:31:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; மாணவிக்கு பாலியல் தொல்லை &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் செயல் பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 24 வயதான ஆங்கில ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 2 - ம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு செல்ல விடாமல் அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் ( வயது 24 ) என்பவர் பாலியல் தொல்லை அளித்தக்கதாக கூறப்படுகிறது&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&quot; பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பொது மக்கள் சிலர் ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து , இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் குற்றச் சாட்டப்பட்ட ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் , பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் அகஸ்டீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/790add92dcb89b2a1cf12d5b418a5a4817864640581611310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852</link><comments>https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:27:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ - பக்தர்களுக்கு அனுமதி ரத்து -&amp;nbsp; விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மலை, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அதிகளவு மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட மக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், காட்டுத்தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிடம் இருந்து தகவல் வரப்பெற்றதை அடுத்து, நாளை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு என மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்நிலையில், இன்று இரவு சுமார் 7.00 மணியளவில் சதுரகிரி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ மீண்டும் பரவியுள்ளதாக மதுரை மாவட்ட வன கண்காணிப்பாளரிடம் இருந்து தகவல் வரப்பெற்றுள்ளது. தற்போது காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, நாளை சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலை திரும்பும் வரை, நாளை&amp;nbsp; சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரான பிறகு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கான அனுமதி குறித்து மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/9ec30b1492ce7d4de1699690b731e82b1702882279346184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[போதை இல்லா தலைமுறைக்காக பூதலூர் பள்ளியின் போராட்டம்: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/budalur-school-s-campaign-for-a-drug-free-generation-achieves-second-place-at-the-state-level-tnn-270845</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/budalur-school-s-campaign-for-a-drug-free-generation-achieves-second-place-at-the-state-level-tnn-270845#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 20:24:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/budalur-school-s-campaign-for-a-drug-free-generation-achieves-second-place-at-the-state-level-tnn-270845</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போதைப்பொருள் விழிப்புணர்வில் மீண்டும் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் இன்று நடைபெற்ற பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விருது வழங்கும் விழாவில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாநில அளவில் 2-ம் இடம் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையுடன் வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கி பாராட்டினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாதனை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போதைப்பொருள் விழிப்புணர்வு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மாநில அளவில் முதல் பரிசை வென்றிருந்த இந்த பள்ளி, இந்த ஆண்டும் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்து தனது சாதனையை தொடர்ந்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, சமூக பொறுப்பு குறித்த புரிதலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பள்ளி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போதைப்பொருளின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகள், மாணவர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தங்களையும் தங்களது நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஒரு பழக்கம்... எதிர்காலத்தையே மாற்றிவிடும்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போதைப்பொருட்கள் ஒருவரின் உடல்நலத்தை மட்டுமின்றி, அவரின் கல்வி, குடும்பம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் கொண்டவை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், நண்பர்கள் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்களில் கிடைக்கும் தவறான தொடர்புகள் மூலமாகவோ சிலர் போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போதைப்பொருளை பயன்படுத்தத் தொடங்கும் ஒருவருக்கு ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண பழக்கமாகத் தோன்றினாலும், நாளடைவில் அது அடிமைத்தனமாக மாறக்கூடும். இதனால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், மனநிலை மாற்றங்கள், கவனச்சிதறல், கல்வியில் ஆர்வமின்மை, குடும்பத்தினருடன் மோதல், சமூகத்தில் இருந்து விலகுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், போதைப்பொருள் பழக்கம் ஒரு தனிநபரின் பிரச்சினையாக மட்டும் இல்லாமல், குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது. இளம் வயதிலேயே போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் பாதிக்கப்படலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனை கருத்தில் கொண்டு பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருளின் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;lsquo;போதை இல்லாத மாணவர் சமுதாயம், போதை இல்லாத குடும்பம், போதை இல்லாத எதிர்காலம்&amp;rsquo; என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் பள்ளியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விருது பெற்ற பள்ளிக்கு பாராட்டு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேகன் மற்றும் மாணவர்கள் கோபிகிருஷ்ணன், சந்தோஷ், அரவிந்த், எல்க்கானா, புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிக்கான விருதை பெற்றுக்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாநில அளவில் 2-ம் இடத்துக்கான ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும், வெற்றிக்கோப்பையும் பெற்றது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஆண்டு மாநில அளவில் முதல் பரிசை வென்ற நிலையில், இந்த ஆண்டும் தொடர்ந்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிருப்பது பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு என்பது ஒரு நாள் நிகழ்ச்சியாக இல்லாமல், மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டிய சமூகப் பொறுப்பு. அந்த வகையில், கல்வியுடன் சமூக அக்கறையையும் மாணவர்களிடம் வளர்த்து வரும் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போதை இல்லாத எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான முயற்சியில் தொடர்ந்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் இந்த சாதனை, பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/3f9d5a41fd2cb46d1a62602e42633f161786459957635733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-ymca-school-rewards-class-10-students-with-free-flight-trip-tnn-270843</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-ymca-school-rewards-class-10-students-with-free-flight-trip-tnn-270843#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 20:01:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-ymca-school-rewards-class-10-students-with-free-flight-trip-tnn-270843</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை கோட்டை பகுதியில் இயங்கி வரும் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) சிறார் நகர் உயர்நிலைப்பள்ளி, சமுதாயத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இலவசக் கல்வியை வழங்கி வருகிறது. கூலித் தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், பூ விற்பனையாளர்கள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் இங்கு பயின்று வருகின்றனர். கடந்த 1947-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி திரு. லாரன்ஸ் சி. பர் என்பவரால் வீடற்றவர்களுக்கான இரவுப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி, தற்போது 79 ஆண்டுகளாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கல்விப் பணியாற்றி வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நவீனக் கல்வியும் இலவச வசதிகளும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கட்டணம் எதுவுமின்றி ஸ்மார்ட் போர்டு (Smart Board) வசதியுடன் கூடிய நவீனத் தொழில்நுட்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இலவச சீருடை, இலவசக் காலணி, இலவச உணவு, அடையாள அட்டை மற்றும் இலவசப் புத்தகப் பை போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளும் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;100% தேர்ச்சியும் பறந்த சர்ப்ரைஸும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பள்ளியின் தாளாளரும் பொதுச் செயலாளருமான (C.E.O) ஆசீர் பாண்டியன், 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சியை எட்டினால், அனைவரையும் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை ஊக்கமாகக் கொண்டு உழைத்த மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று 100% தேர்ச்சியைச் சாதனை படைத்தனர். மாணவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், தாளாளர் ஆசீர் பாண்டியன் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, எட்ட முடியாத கனவாக இருந்த விமானப் பயணத்தை சாத்தியமாக்கினார். 100% தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று அசத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர்களின் பரவசம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விமானத்தில் பயணித்த மாணவர்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், &quot;ஒரு காலகட்டத்தில் தங்களுக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் விமானத்தை கீழிருந்து தான் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று அதே விமானத்தில் நேரடியாகப் பயணித்தது வாழ்நாளில் மறக்க முடியாத, மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியளித்த அனுபவமாக அமைந்தது&quot; எனப் பரவசத்துடன் கூறினர். ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் செய்த இந்த அசத்தலான செயல் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/6a4a497629e80055cd2daa60772e3f5b17864586959011319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-goverment-school-part-time-teachers-demand-permanent-jobs-rule-110-cm-vijay-tnn-270842</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-goverment-school-part-time-teachers-demand-permanent-jobs-rule-110-cm-vijay-tnn-270842#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 19:58:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-goverment-school-part-time-teachers-demand-permanent-jobs-rule-110-cm-vijay-tnn-270842</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை: &lt;/strong&gt;தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரத்தை, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அறிவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய எட்டு சிறப்புப் பாடங்களில் கடந்த 16 கல்வி ஆண்டுகளாக 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாகச் சேவையாற்றி வருகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொகுப்பூதியத்தால் எழும் வாழ்வாதாரச் சிக்கல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 15,000 தொகுப்பூதியத்தைக் கொண்டு, இன்றைய கடுமையான விலைவாசி உயர்வில் குடும்பத்தை நடத்துவது மிகக் கடினமாக உள்ளது. வீட்டு வாடகை, அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், சாப்பாட்டுச் செலவு, மருத்துவச் செலவுகள், மின்கட்டணம் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவு போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கிச் செலவு செய்யும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமூகப் பாதுகாப்பு வசதிகள் இன்மை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பகுதிநேர ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு வசதிகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பணி பாதுகாப்பு இன்மை:&lt;/strong&gt; பணியின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு எவ்வித அரசு நிவாரண உதவித்தொகையும் வழங்கப்படுவதில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஓய்வூதியப் பலன்கள் இன்மை:&lt;/strong&gt; பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் குடும்ப நல நிவாரணம் அல்லது ஓய்வூதியப் பலன்கள் கிடையாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அடிப்படை உரிமைகள் மறுப்பு:&lt;/strong&gt; தற்போது பணியில் உள்ளவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (EPF), குடும்ப நல நிதி, போனஸ், மற்றும் பண்டிகைக் காலக் கடன்கள் போன்ற எந்தவொரு சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாகப் பகுதிநேர ஆசிரியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் &amp;nbsp;பொருளாதார நெருக்கடியிலும் மன உளைச்சலிலும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 16 கல்வி ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் நிலையை உணர்ந்து, அரசு இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆசிரியர்கள் பணிபுரியும் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட 8 சிறப்புப் பாடங்களிலேயே அவர்களைக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவ்வாறு பணி நிரந்தரம் செய்யும்போது, ஊதிய நிலை 10-ன் படி (Pay Band Level 10) அடிப்படைச் சம்பளமாக ரூ.20,600 நிர்ணயித்து, அதனுடன் அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி மற்றும் மருத்துவப்படியுடன் கூடிய முழுமையான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். இதற்காக அரசு இந்த பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் போதுமானது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுக்குத் தொடர் மனுக்கள் அளிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்கோரிக்கையை வலியுறுத்தி, பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம், பள்ளிக்கல்வி அமைச்சர் நடத்திய ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ஆகியவற்றில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், முதலமைச்சரின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், இதர அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தொடர்ச்சியாக மனுக்கள் அளித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, தமிழக முதலமைச்சர் &amp;nbsp;11,773 பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட்டு, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/0031fb18ef043b8122b736807b407aac1786458465305186_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/thanjavur-s-agricultural-heritage-organic-farming-that-safeguards-the-soil-food-and-health-tnn-270841</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/thanjavur-s-agricultural-heritage-organic-farming-that-safeguards-the-soil-food-and-health-tnn-270841#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 19:48:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/thanjavur-s-agricultural-heritage-organic-farming-that-safeguards-the-soil-food-and-health-tnn-270841</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் பாரம்பரியச் சொற்பொழிவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் &amp;ldquo;தஞ்சாவூரும் வேளாண்மையும்&amp;rdquo; என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவரும், இயற்கை விவசாய நிபுணருமான கோ. சித்தர் சிறப்புரையாற்றினார். கடந்த 1994-ம் ஆண்டு முதல் மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து, இயற்கை முறையில் பயிரிட்டு வரும் கோ. சித்தர், மூலிகைகள் மற்றும் இயற்கை மருத்துவப் பொருட்கள் தொடர்பான பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனது நீண்டகால அனுபவங்களின் அடிப்படையில் தஞ்சாவூரின் வேளாண்மை மற்றும் அதன் பாரம்பரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் தமிழகத்தின் &amp;ldquo;நெற்களஞ்சியம்&amp;rdquo; எனப் போற்றப்படுவதற்கு வளமான மண், காவிரி நீர்வளம் மற்றும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் வேளாண் பாரம்பரியம் முக்கிய காரணங்களாகும் என்று கோ. சித்தர் குறிப்பிட்டார். சோழர் காலம் முதல் சோழமண்டலப் பகுதிகள் வேளாண்மையை மையமாகக் கொண்ட வாழ்வியலை பேணி வந்துள்ளன. இன்றளவும் தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் முக்கிய வேளாண் மண்டலமாக விளங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மன்னர் ஆட்சிக் காலங்களில் நீர்நிலைகளுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதையும், நீர் ஆதாரங்களையும் வேளாண் மண்டலங்களையும் பாதுகாப்பதற்கு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விதைகளை மட்டுமல்ல... வாழ்வியலை காப்போம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பது என்பது விதைகளை மட்டும் பாதுகாப்பதல்ல. அது நமது மண், நீர், உணவு, உடல்நலம், பண்பாடு மற்றும் தலைமுறைகளின் வாழ்வியலை பாதுகாப்பதாகும் என்று கோ. சித்தர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இயற்கை விவசாயம் மண் வளத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சமநிலை, உயிரினப் பன்மை மற்றும் மனித உடல்நலத்தையும் பாதுகாக்கிறது. வேளாண் நிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், கால்நடைகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய இயற்கைச் சூழல் அமைப்பின் அங்கங்களாக உள்ளன. எனவே, விவசாயத்தை தனித்துறையாக பார்க்காமல், இயற்கைச் சூழலின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மண் வளம்... உணவின் தரம்... உடல்நலம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாம் உண்ணும் உணவின் தரம் நமது உடல்நலத்தை நிர்ணயிக்கிறது. எனவே, &amp;ldquo;மண் வளத்தைப் பாதுகாப்பது &amp;ndash; உணவின் தரத்தைப் பாதுகாப்பது &amp;ndash; மனித உடல்நலத்தைப் பாதுகாப்பது&amp;rdquo; என்ற தொடர் புரிதல் இன்றைய தலைமுறையினரிடம் உருவாக வேண்டும் என்று கோ. சித்தர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போதைய தலைமுறையினர் பாரம்பரிய வேளாண்மையின் மதிப்பையும் விவசாயிகளின் பங்களிப்பையும் உணர வேண்டும். உள்ளூர் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கும் பாரம்பரிய நெல் ரகங்களின் பாதுகாப்பிற்கும் குரல் கொடுக்கும் தலைமுறையாக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழர் வாழ்வின் அடித்தளம் வேளாண்மை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேளாண்மை என்பது உணவு உற்பத்தி செய்யும் தொழில் மட்டுமல்ல. அது தமிழர் பண்பாடு, பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வின் அடித்தளம் என்றும் கோ. சித்தர் குறிப்பிட்டார். வேளாண் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. விவசாயத்தை பாதுகாப்பது என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டும் பாதுகாப்பது அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிகழ்ச்சியில் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் கோபிநாத், கட்டிடப் பொறியாளர் ராஜேந்திரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ்.முத்துக்குமார், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்புரையை கேட்டறிந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை விவசாயம் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/9c889514805b14f2e797e3b04e50980a1786457873549733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இங்காவது உணவு கிடைக்குமா? நீர் நிலைகள் வற்றுவதால் தஞ்சை பகுதி வயல்வெளிகளுக்கு படையெடுக்கும் பறவைகள்Will food be found here? Birds flock to the paddy fields of the Thanjavur region as water bodies dry up. (TNN]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/will-food-be-found-here-birds-flock-to-the-paddy-fields-of-the-thanjavur-region-as-water-bodies-dry-up-tnn-270840</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/will-food-be-found-here-birds-flock-to-the-paddy-fields-of-the-thanjavur-region-as-water-bodies-dry-up-tnn-270840#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 19:42:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/will-food-be-found-here-birds-flock-to-the-paddy-fields-of-the-thanjavur-region-as-water-bodies-dry-up-tnn-270840</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து, அங்கு கிடைத்து வந்த இயற்கை உணவுகளும் இல்லாத நிலையால், உணவு தேடி பறவைகள் வயல்வெளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. பசுமை போர்த்திய வயல்களில் கூட்டமாக சுற்றித்திரியும் பறவைகள், வயல்வெளியின் அழகை அதிகரிப்பதுடன், நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தும் இயற்கைக் காட்சியாக அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி டெல்டா உள்ளிட்ட விவசாய பகுதிகளில் வயல்வெளிகளும், நீர்நிலைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த இயற்கைச் சூழலை கொண்டுள்ளன. ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் காலங்களில் பல்வேறு வகையான பறவைகள் அப்பகுதிகளை வாழ்விடமாகவும், உணவு தேடும் இடமாகவும் பயன்படுத்துவது வழக்கம். வெளிநாட்டு பறவைகளும் அதிகம் வந்து குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக நீர்நிலைகளைச் சுற்றியுள்ள ஈரமான நிலப்பரப்புகளில் சிறு உயிரினங்கள், பூச்சிகள் உள்ளிட்ட உணவுகள் கிடைப்பதால் பறவைகளுக்கு அவை முக்கியமான பகுதிகளாக விளங்குகின்றன. ஆனால் பருவநிலை மாற்றங்கள், மழைப்பொழிவு குறைவு, நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைதல் போன்ற காரணங்களால் சில காலங்களில் பறவைகளுக்கு வழக்கமாக கிடைக்கும் உணவு வளம் குறைந்து விடுகிறது. இதனால் அவை தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக வேறு பகுதிகளை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அந்த வகையில் ஆற்றில் தண்ணீர் வராதது, மழைப்பொழிவு குறைவு, வெப்பம் அதிகரிப்பு போன்றவற்றால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் கிடுகிடுவன்று வறண்டு வருகிறது. ஒரு பக்கம் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்தாலும், பம்ப்செட் வாயிலாக சாகுபடி பணிகளை பலபகுதிகளிலும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். அதனால் தற்போது பசுமையாக காட்சியளிக்கும் வயல்வெளிகளில் பறவைகள் கூட்டமாக இறங்கி உணவு தேடுவது இயற்கையின் இயல்பான மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயலில் மெதுவாக நடந்து சென்று, தங்களது நீண்ட அலகுகளால் மண்ணையும் புல்வெளியையும் கிளறி உணவு தேடும் காட்சி பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. வயல்வெளிகளை சுற்றி பயிர்கள் வளர்ந்து நிற்கும் காலங்களில் அவற்றைச் சுற்றியுள்ள சூழலில் பல்வேறு சிறு உயிரினங்கள் காணப்படுகின்றன. வயல்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் உயிரியல் சூழலும் பறவைகளுக்கு உணவு தேடும் வாய்ப்பை வழங்குகின்றன. இதனால் நீர்நிலைகளில் உணவு கிடைப்பது குறையும் நேரங்களில் பறவைகளுக்கு விவசாய நிலங்கள் அவற்றுக்கு மாற்று உணவுத் தேடும் பகுதிகளாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பறவைகள் வயல்வெளிகளில் கூட்டமாக வந்து உணவு தேடும் காட்சி விவசாயிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒருபுறம் பசுமையான பயிர்கள், மறுபுறம் அவற்றுக்கு நடுவே வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் பறவைகள் என வயல்வெளி முழுவதும் இயற்கையின் ஓவியம் போல் காட்சியளிக்கிறது. பறவைகளின் இந்த வருகையை வெறும் அழகான இயற்கைக் காட்சியாக மட்டும் பார்க்க முடியாது என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். நீர்நிலைகளில் தண்ணீர் மற்றும் உணவு வளம் குறையும்போது, அங்கு வாழும் அல்லது உணவு தேடும் பறவைகள் மாற்று இடங்களை நாடுவது சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு அறிகுறியாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;ldquo;நீர்நிலைகள் வறண்டாலும் பறவைகளின் பசி வறண்டு போவதில்லை. உணவு இருக்கும் இடத்தை நோக்கி அவற்றின் சிறகுகள் தொடர்ந்து பயணிக்கும்&amp;rdquo; என்ற இயற்கையின் உண்மையை இந்தக் காட்சி உணர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீர்நிலைகளை பாதுகாப்பது மனிதர்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமல்லாமல், பறவைகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் அவசியமானதாகும். குளங்கள், ஏரிகள் மற்றும் பாரம்பரிய நீர்நிலைகளை முறையாக பராமரித்து, அவற்றில் தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பறவைகளுக்கும் இயற்கைச் சூழலுக்கும் அது பெரும் பாதுகாப்பாக அமையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பசுமை வயலில் உணவு தேடி நிற்கும் இந்தப் பறவைக் கூட்டம், இயற்கையின் அழகை ரசிக்க வைக்கும் அதே நேரத்தில், &amp;ldquo;நீர்நிலைகளை காப்போம்; உயிர்களின் வாழ்விடங்களை பாதுகாப்போம்&amp;rdquo; என்ற மௌனச் செய்தியையும் மனிதர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/ca402fc4bd34e8a0cd0b6e4b9952f4471786457485462733_original.jpg" width="220"/></item></channel></rss>