என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் தன்மீது பரப்பிய அவதூறுகள் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தனது குழந்தை தவறியதாக ஜூலீ தெரிவித்துள்ளார்

பெண் ஒருவரிடம் கிட்னி தருவதாக கூறி அவரிடம் 15 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பிக்பாஸ் ஜூலி மீது சமீபத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்று ஜூலி மற்றும் அவரது கணவர் முகமது இக்ரீம் இணைந்து சென்னை காவல் ஆணையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஜூலி. ஜூலி கிட்னி தேவைப்படுபவர்களிடம் பணம் பெற்று அவர்களை மோசடி செய்ததாக கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சர் நெல்சன் மற்றும் சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் புகாரளித்திருந்தனர். ஜூலி அண்மையில் விஜய் மற்றும் தவெகவை விமர்சித்து தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு வந்தார் . இதனால் தவெகவினர் ஜூலி மற்றும் கணவரை கிட்னி திருடர்கள் என விமர்சித்து சமூக வலைதளத்தில் தாக்கி வந்தார்கள். தன் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போடுமாறு ஜூலி இன்று சென்னை காவல் ஆனையத்தில் புகாரளித்தார். ஆனால் அவரது மனுவை காவல் துறை பரிசீலிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஜூலி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
என் குழந்தை இறந்தது விஜயால் தான்
ஜூலி கூறுகையில் “கிட்னிக்காக நான் எந்த விதத்திலும் யாருக்கும் நான் உதவியதில்லை. குழந்தைகளுக்காக லிவர் ஆபரேஷனுக்காக நீதி திரட்டுவதற்காக நான் வீடியோ போட்டிருக்கிறேன். அதற்கான எல்லா ஆவனங்களும் என்னிடம் இருக்கின்றன. என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள ராதிகாவுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. நான் செவிலியராக வேலை பார்த்த ஒரே காரணத்திற்காக நான் கிட்னி திருடி என்பது அர்த்தமா ? இது தொடர்பாக நான் கடந்த மார்ச் மாதம் புகாரளிக்க வந்தபோது என் குழந்தையை இழந்திருந்தேன். எனக்கு இப்போது தான் திருமணம் ஆகியிருக்கிறது என்னுடைய முதல் குழந்தையை நாங்கள் இழந்திருக்கிறேன். என் குழந்தையை கொன்றது விஜய் அண்ணாதான். தவெகவுக்கு எதிராக பேசுன ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணின் கேரக்டரை அசிங்கபடுத்துறீங்க. சமூக வலைதளத்தில் என்னை அடித்து அடித்து அதனால் ஏற்பட்ட மல உளைச்சலால் தான் என் குழந்தை இறந்தது. விஜய் அண்ணா தனது கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது இன்ஸ்டாகிராமில் தாக்குதல் நடத்துவதை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணலாம்." என ஜூலி தெரிவித்துள்ளார்
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















