விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாரதி கண்ணம்மாவுடன் எப்போது சேர்வார் என ரசிர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் ஹேமாவும் தனது அப்பா பாரதிக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளார். மறுபுறம் லட்சுமியின் அப்பா பாரதி தான் என்று சொல்லிவிடுவோம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா.


அடுத்தடுத்த புதிய திருப்பங்களுடன் கதைக்களம் நகர இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியது. அதில், கண்ணம்மா வீட்டுக்கு அரசு அதிகாரி ஒருவர் வந்து உங்க வீட்டில் யார் யார் இருக்க என்ற கேள்வியை கண்ணமாவிடம் கேட்கிறார். இதற்கு பதிலளித்த கண்ணம்மா, என் பெயர் கண்ணம்மா, என் பொண்ணு பெயர் லட்சுமி என்று தெரிவிக்க, உடனே அந்த அரசு அதிகாரி ஆதார் கார்டு இருக்கா மேடம் என்று கேட்கிறார். 


கண்ணம்மாவும் ஆதார் கார்டு இருக்கு, ஒரு நிமிஷம் இருங்க எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்று எடுத்து வருகிறார். அந்த ஆதார் கார்டை பார்த்த அதிகாரி, என்னமா ஆதார் கார்டுல வேற அட்ரஸ் இருக்கு இன்னும் நீங்க இதை புதுப்பிக்கலையா என்று கேள்வி கேட்கிறார். 



உடனே கண்ணம்மா, ஆமா சார் இன்னும் நான் அப்டேட் பண்ணல என்று தெரிவிக்க, சரிங்க மேடம் சீக்கிரம் அப்டேட் பண்ணிருங்க என்று அரசு அதிகாரி சென்று விடுகிறார். அப்பொழுது, அங்கு நடந்த அனைத்தையும் கவனித்த லட்சுமிக்கு ஒரு புது ஐடியா ஓன்று தோன்றுகிறது. அதில், அம்மாவின் ஆதார் கார்டில் இருக்கும் பழைய வீட்டின் அட்ரஸுக்கு தேடி சென்று நமது அப்பா யார் என்று அறிந்து கொள்ளலாம் என்று எண்ணி, கண்ணம்மாவின் ஆதார் கார்டை எடுத்து விடுகிறார். தொடர்ந்து, அந்த வீட்டை தேடி பாதி வழியில் செல்லும்போது, இது பாரதி அங்கிள் வீட்டுக்கு செல்லும் வழியாச்சே, பாரதி அங்கிளுக்கு அதனால்தான் அப்பாவை நன்றாக தெரிந்து இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். 


இதற்கிடையில் பாரதியின் வீட்டுக்கு வந்த கண்ணம்மா, தனது மாமியாரிடம் லட்சுமி வர வர சரியில்லை. எதையோ ஒன்றை கண்டு பிடித்துவிட்டாள். ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறா. உங்க மேலயும், ஹேமா மேலயும் ரொம்ப பாசமாவும், அன்பாகவும் இருந்த அவ, இப்ப நமக்கு யாருமே வேணான்னு  சொல்லிட்டு இருக்கா. 


லட்சுமி அப்பா இல்லாத பொண்ணாவே இந்த சமூகத்துல கடைசி வர வாழனுமா..? என்று கேள்வி கேட்கும் கண்ணம்மா, இறுதியில் நான் லட்சுமிகிட்ட உண்மைய சொல்லதான் போறேன் என்று அனைவரது முன்பும் தெரிவிக்கிறார். தொடர்ந்து, பாரதியின் அம்மா சௌந்தர்யா, பாரதியிடம் 9 வருஷம் ஆச்சு இன்னும் அந்த ஒரு பொய்யத்தான் நம்பிட்டு இருக்கியாடா என்று கேள்வி கேட்க, வீட்டை கண்டுபிடித்த லட்சுமி கதவை திறந்து எதையை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார். அதோடு அந்த ப்ரோமோவும் முடிகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண