Bharathi Kannamma: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடரில் இன்று என்ன நடக்க போகிறது. இன்றைய எபிசோடில் விஜய் சௌந்தர்யாவிடம் ஆபீஸ் பைல்களில் கையெழுத்து வாங்கி கொண்டு இருக்கிறான். அப்போது அங்கே வரும் ஷர்மிளா விஜயை அழைத்து கொண்டு தனியாக சென்று பாரதியின் கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் விஷயத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்தை பற்றி விஜயிடம் கூறுகிறாள். 


 



பாரதிக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன்னோட தங்கச்சி வெண்பாவோட தான் நடக்கணும். நீ இந்த வீட்டு பொண்ணு அஞ்சலியை கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். அப்போது தான் மொத்த சொத்துக்கும் நான் எஜமானியாக முடியும். அதுவரைக்கும் பாரதிக்கு கல்யாணம் நடக்காம பார்த்துக்கொள்ள வேண்டியது உன்னோட வேலை என விஜயிடம் சொல்லவும் உடனே அவன் யாருக்கோ போன் மூலம் பேசி பிளான் போடுகிறான். 


மறுபக்கம் சித்ராவை அவளின் அத்தை மாமா வீட்டிற்குள் சேர்த்து கொள்ளாததால் எங்கே போவது என தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும் பஸ்ஸில் ஏற செல்லும் போது சித்ராவின் அத்தை கிராம மக்களுடன் வந்து குழந்தைகிட்ட இருந்து திருடிய நகை எங்கே என கேட்டு அடித்து அவள் பேக்கில் இருந்த துணிகளை எல்லாம் கீழே கொட்டி நகையை தேடுகிறாள். நான் எடுக்கல என சித்ரா சொல்லியும் எதையும் காதில் வாங்காமல் அவளை நச்சரிக்கிறாள் அத்தை. அங்கு சித்ராவின் மாமா வந்து நகை கிடைத்துவிட்டது என சொல்லி மனைவியை அழைத்து செல்கிறார். கண்ணீருடன் சித்ரா நிர்கதியாக நிற்கிறார். 



கிளப் ஒன்றில் பாரதி பத்தியம் நடப்பதை பார்த்து கொண்டு இருக்கிறான். அங்கு வரும் நாலு ரவுடிகள் பாரதியை கடுமையாக தாக்குகிறார்கள் அதை ஒருவன் வீடியோ எடுக்கிறான். மறுபக்கம் பஸ் ஒன்றில் சித்ரா ஏறி அமர்ந்து இந்த பஸ் எங்கு வரை போகிறதோ அதற்கு ஒரு டிக்கெட் வாங்கி கொள்கிறாள். பஸ் புறப்பட அப்போது யாரோ ஒருவர் பஸ் ஏறுவதற்காக ஓடிவருவது போல இருக்கவே சித்ரா அந்த பெண்ணிற்கு கை கொடுத்து ஏற்றி விடுகிறார். அந்த பெண் தான் ஜீ தொலைக்காட்சி மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன். சித்ரா அவருக்கு தண்ணிர் கொடுக்கிறார். பஸ் எற உதவியதற்காகவும் தண்ணீர் கொடுத்ததற்காகவும் சித்ராவிடம் நன்றி சொல்லி தனது பெயர் கண்ணம்மா என அறிமுகம் செய்து கொள்கிறார். அன்னவாசல் தான் என்னுடைய சொந்த ஊர். பல ஆண்டுகள் கழித்து நான் இப்போது தான் ஊருக்கு செல்கிறேன் என சித்ராவிடம் சொல்கிறாள் கண்ணம்மா. உங்களுக்கு சொந்த ஊர் அன்னவாசலா என சித்ராவிடம் கண்ணம்மா கேட்க இல்லை என சொன்னதும் என்ன விஷயத்திற்காக நீங்கள் அன்னவாசல் செல்கிறீர்கள் என்று கேட்டதும் என்ன சொல்வதென தெரியாமல் தவிக்கிறாள் சித்ரா. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.






இன்றைய எபிசோட் பார்த்த ரசிகர்களுக்கு கண்ணம்மா என்ற பெயரில் ரேஷ்மாவின் என்ட்ரி சற்று குழப்பத்தை கொடுத்துள்ளது. போக போக தான் கதைகளம் பற்றி புரிய வரும்.