வெண்பாவை அப்பப்போது வந்து டார்ச்சர் செய்யும் துர்காவையே மிஞ்சி வெண்பாவை வெறுப்பேற்றுகிறார் வில்லன் மாயாண்டி. இந்த எபிசோட்டைப் பார்த்த ரசிர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.


விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாரதி கண்ணம்மாவுடன் எப்போது சேர்வார் என ரசிர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் ஹேமாவும் தனது அப்பா பாரதிக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளார். மறுபுறம் லட்சுமியின் அப்பா பாரதி தான் என்று சொல்லிவிடுவோம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா.



இப்படி கதைக்களம் ஒரு புறம் நகர்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், பாரதியும், கண்ணம்மாவும் இவ்வளவு பிரச்சனையை சந்திப்பதற்குக் காரணமாக வெண்பாவை டார்ச்சர் செய்வதற்கு துர்காவிற்கு அடுத்தப்படியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார் வில்லன் மாயாண்டி. முன்னதாக கண்ணம்மாவை பாதுகாக்க வெண்பாவிற்கு தாலி கட்டுவேன் என்று அடிக்கடி டார்ச்சர் செய்பவர் துர்கா. முழுமையாக இந்த சீரியலில் தொடரவில்லை என்றால் அவ்வப்போது வந்து வெண்பாவிற்கு தொல்லைக் கொடுத்துவருவார். ஆனால் சில மாதங்களாக அவரை ஆளவே காணவில்லை. இந்நிலையில் தான் அவரின் இடத்தைப்பூர்த்தி செய்யும் விதமாக வில்லன் மாயாண்டி என்ட்ரி கொடுத்துள்ளார்.


தொடக்கத்தில் வெண்பாவிற்கு ஆதரவான செயலில் ஈடுபட்டு வந்த மாயாண்டி தற்போது வெண்பா குறித்த வீடியோவை வைத்துக்கொண்டு அவளை மிரட்டி வைத்துவருகிறார். இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வெண்பா திக்குமுக்காடி நிற்கும் நிலையில், என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்றைய எபிசோட்டில் தனக்கு 50 ஆயிரம் பணம் வேண்டும் என மாயாண்டி வெண்பாவிடம் கேட்கவே, அவள் தரமுடியாது என்று சொல்கிறான். இதன் பின்னர் வீடியோவைப் பார்த்து பணம் கொடுக்க சம்மதிக்கிறார்.



இருந்தபோதும் இப்படியே தொடரக்கூடாது என்பதற்காக வெண்பாவும், அவள் வீட்டு வேலைக்காரியும் மாயாண்டி சாப்பிடும் சாப்பிட்டில் மயக்க மருந்து கொடுத்துவிடுகிறார். ஆனால் சாப்பாட்டில் என்னவோ கலந்திருக்கிறது என்பதை அறிந்த மாயாண்டி அதனை வெண்பாவின் அசிஸ்டென்ட்க்கு ஊட்டிவிடுகிறார். இதனால் அவர் மயக்கமடைந்துவிடுகிறார்.


பின்னர் அவளை பார்த்து நீ கேடி என்று என்று மாயாண்டி சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது. இதனையடுத்து பாரதியை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வெண்பாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்க மாயாண்டி முயற்சிக்கிறார். என்ன இருந்தாலும் வெண்பாவிற்கு யார் டார்ச்சர் கொடுத்தாலும் சற்று ஆறுதல் என்ற மனநிலையில் தான் ரசிகர்கள் உள்ளனர். மற்றொரு புறம் சட்டுபுட்டுன்னு சீரியலுக்கு என்ட் கார்டு போடுங்கள் என்றும் ரசிகர்கள் கருத்துக்களைப்பகிர்ந்து வருகின்றனர்.