Badava Gopi: ‛நாங்க மாலத்தீவில் இருக்கோம்...’ வெள்ள நீரில் மனைவியுடன் படவாகோபி செய்த பங்கம்!

வெள்ள நீரில் தமிழ் திரைப்பட நடிகர் படவா கோபி தனது மனைவியுடன் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

பிரபல நடிகர் படவா கோபி சென்னையை சேர்ந்தவர். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தனது மனைவி ஹரிதா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஆனால் அதை மிகவும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்ட கோபி மற்றும் ஹரிதா தம்பதி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளனர். ஆனால் உண்மையில் அது ஒரு விதமான கிரட்டிசிசம் என்பது அனைவருக்கும் புரியும்.

Continues below advertisement

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், நாம் மனபாக்கத்தில் இருக்கிறோம். நம் வீட்டிற்குள் வெள்ள நீர் வந்துவிட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட கூடாது சரியா…என படவா கோபி தனது மனைவியிடம் கூற; அதற்கு அவரது மனைவி ஹரிதா கோபி ''நாம் மாலத்தீவில் உள்ளோம். நமது விடுமுறையை கொண்டாட இங்கு வந்துள்ளோம்'' என்று குஷியுடன் கூறுகிறார். மேலும் இந்த வீடியோ பதிவில் அவர்கள் இருவரும் வெகேஷனின் போது அணியக்கூடிய உடைகளை அணிந்தும், தலையில் தொப்பி அணிந்து கொண்டும் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரில் மீன் பிடித்துக் கொண்டுள்ளனர்.

வெள்ள நீர் இன்னும் வடியவில்லை என்பதை நாசுக்காக அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் ஊசி குத்தியதைப் போல கூறியிருக்கிறார் படவா கோபி.

நடிகர் படவா கோபி- ஹரிதா தம்பதியினரின் ஐந்து வயது மகளான ஆத்யா காலமான பின்னர் aadya hug என்கிற பெயரில் டிரஸ்ட் ஒன்று நடத்தி வருகின்றனர். அந்த டிரஸ்ட் மூலமாக 260 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி, பலரும் படவா கோபி- ஹரிதாவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் இவர் நடித்திருந்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola