Baakiyalakshmi Serial Promo: கைதான பாக்கியலட்சுமி... இதுவும் கோபியின் வேலைதானா? பொங்கும் ரசிகர்கள்..

ராதிகா தனது காதலன் கோபியை பாக்யாவிடம் அறிமுகம் செய்ய நினைத்து இந்தமுறையும் தோல்வி அடைகிறார்.

Continues below advertisement

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாக்யலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது. அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறார். இந்நிலையில் தான் வாழ்க்கையில் எப்படியாவது தனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு கேட்ரிங் தொழில் மேற்கொண்டு வருகிறார்.

Continues below advertisement

இன்றைய ப்ரோமோ : 

தன்னை எப்பொழுதும் இழிவாக பார்க்கும் தனது கணவர் முன்பும், வீட்டில் தனக்கென ஒரு இடத்தை அமைத்துக்கொள்ள நினைக்கும் பாக்யா சுயமாக சமைத்து வீடுகளில் விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில், அனாதை ஆசிரமத்திற்கு உணவு கொடுக்கும் நினைக்கும் ராதிகா, பாக்யாவிடம் உதவியை நாடுகிறார். அதன் அடிப்படையில், சமையல் செய்யும் வேலையை ஏற்றுக்கொள்ளும் பாக்யா அதற்கான வேலைகளில் மும்பரமாக களமிறங்குகிறார். 

அப்பொழுதுதான் ராதிகா, தனது காதலன் கோபியை பாக்யாவிடம் அறிமுகம் செய்ய நினைத்து இந்தமுறையும் தோல்வி அடைகிறார். இதற்கிடையில் அனாதை ஆசிரமத்தில் பாக்யா சமைத்த உணவுகள் வந்து இறங்க, அந்த உணவுகளை ராதிகா மற்றும் கோபி இணைந்து பரிமாறுகின்றனர். 

உணவு வேளை முடிந்ததும் இருவரும் கிளம்பிய சிறிது நேரத்தில் ராதிகாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசியவர்கள், நீங்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுகுறாங்க.. ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போய்ட்டு இருக்கோம் என்று கூறுகிறார்கள். பதறிப்போன ராதிகா மற்றும் கோபி ஆசிரமத்தில் சென்று பார்த்தபோது, குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்கள் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர். 

விஷயம் அறிந்துவந்த காவல்துறையினர் எங்கு ஆர்டர் கொடுத்தீங்க என்று கேள்வி கேட்க, கோபி ஒரு மெஸ்ல ஆர்டர் கொடுத்தோம் என்று தெரிவிக்கிறார். உடனே காவல்துறையினர் பாக்யாவின் வீட்டு அட்ரசை வாங்கிகொண்டு, பாக்யாவை இன்ஸ்பெக்டர் வர சொல்லியதாக அழைத்து செல்கின்றனர். இதோடு, பாக்கியலட்சுமி ப்ரோமோ முடிவடைகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Ilayaraja On PM Modi : அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டாரா இளையராஜா? கிளம்பிய எதிர்ப்பும், ஆதரவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola