பாக்யலெட்சுமியை கோபி விவாகரத்து செய்ய மாட்டாரோ? ராதிகாவைத் தான் விட்டு வந்துவிடுவாரோ? என ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம், ராஜா ராணி, பாக்யலெட்சுமி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக என்ன நடக்கப்போகிறது என மக்களை ஆவலுடன் பார்க்க வைத்து வருகிறது பாக்யலெட்சுமி சீரியல். அழகான குடும்பம் அன்பாக குழந்தைகளோடு வாழும் குடும்பத்தலைவி பாக்யலெட்சுமி சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சுய தொழில் செய்கிறார். எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் பாக்யலெட்சுமிக்கு  தனது வாழ்வில் பெரும் சோதனைத் தான் தற்போது ஏற்பட்டுவருகிறது.



பாக்யலெட்சுமியின் கணவரான கோபி, தனது கல்லூரி காதலியை திருமணம் செய்துக்கொள்வதற்காக மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுகிறார். இதற்கு முன்னதாக பாக்யலெட்சுமியிடம் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்தைப் பெற்ற நிலையில் விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. இதனையடுத்து எப்படி பாக்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்போகிறோம் என்ற மனநிலையில் இருந்த நிலையில் தான், எப்படியோ நீதிமன்றத்திற்கு  அழைத்து செல்வது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியது.


 குடும்ப நல நீதிமன்றத்திற்குள் சென்றதும், பாக்யா நீதிபதியைப் பார்த்து வணக்கம் சொன்னதும் உங்களுக்குச சம்மதமா என எவ்வித தொடர்பும் இல்லாமல் கேட்கவே குழப்பத்தில் பாக்யா இருப்பது போன்ற ப்ரோமோ வெளியானது. என்ன நடக்கப்போகிறது என்று எதிர்ப்பார்த்து இருந்த நிலையில் தான் தற்போது புதிய ப்ரோமா ஒன்று வெளியானது. இதில் மற்றவர்கள் விவாகரத்து வழக்கை விசாரிப்பதை பார்க்கும் கோபி, இதைப்போலத் தான் நம்மளையும் விசாரிப்பாங்களோ என்ஞ எண்ணிக்கொண்டதோடு, இதுக்கு நாம ராதிகாவையே வேணாம் னு சொல்லி இருக்கலாம் என யோசிக்கிறான். இதனையடுத்து பாக்யா, இங்கு புழுக்கமாக இருக்கிறது வெளியில் இருப்போம் என்று சொல்லி பாக்யாவை வெளியில் அழைத்து வருகிறார்.


 



பின்னர் வெளியில் இருக்கும் வக்கீலைப்பார்த்து, சார் இங்க வந்தவங்கள எல்லாரும் விவாகரத்து வாங்கத்தான் வந்துருக்காங்களா என்று கேட்கிறார். இதற்கு வக்கீலும் குடும்ப பிரச்சனைத் தான் இப்ப பெரிய பிரச்சனை தான இருக்கிறது என கூறவே, பாக்யா ஏதாவது பேசி தீர்த்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியாதா என்று கேட்சிறார். இதனைக்கேட்டு வக்கிலும், கோபியும் அதிர்ச்சியில் இருப்பது போன்று ப்ரோமோவில் முடிகிறது. இப்பவாது நல்ல முடிவு எடுத்து இருக்கீங்களே? நிச்சயம் பாக்யாவை விவாகரத்து செய்யமாட்டாரு? ராதிகா விட்டு வாங்க சார் என ரசிகர்கள் பல்வேறு  கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துவருகின்றனர்.