ஹாலிவுட்டின் பிரமாண்ட படைப்பான அவதார் 2 படத்தின் இந்தியாவில் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதனைப் படைத்தது. 






அவதார் படம் 5 பாகங்களாக  2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய இப்படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர்  படம் டிசம்பர் 16 ஆம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 


இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. கடலில் வாழும் உயிரினங்களையும், கனிம வளங்களையும், பாதுகாக்கும் நவி இன மக்கள் குறித்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. பலரும் படத்தை பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கும் நிலையில் அவதார் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 


அதேசமயம் இந்தியாவில் அவதார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய நகரங்களில் 4dx தொழில்நுட்பம் கொண்ட தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைந்தப்பட்சம் ரூ.600 முதல் அதிகப்பட்சம் ரூ.1440 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






மேலும் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் 24 மணிநேரமும் திரையிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஷோக்கள் காலை 12 மணியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல் பாகத்தின் வசூலை அவதார் 2 படம் முறியடித்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.