Just In





ஜவான் படத்தில் கைகொடுத்த அட்லீயின் செண்டிமெண்ட்... அல்லு அர்ஜுன் படத்திலும் தொடர்கிறதா?
தெறி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா மீண்டும் அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்படங்களில் கம்பேக் கொடுக்கிறார். அதற்கு முன்னதாக வெப் சீரிஸ்களில் நடித்து வந்த சமந்தா தற்போது நடித்து வரும் Maa Inti Bangaram என்ற படம் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்களுக்கு பிறகு இப்போது இந்தப் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் அட்லீ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லீ இயக்கத்தில் புதிய படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தான் அவருக்கு ஜோடியாக சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார். அட்லீ மற்றும் அல்லு அர்ஜூன் படம் என்பதால் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தில் முதலில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில்... மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதால், இப்படத்தில் நடிக்க முடியாது என கூறியதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து, அட்லீ தன்னுடைய செண்டிமெண்ட் படி, நடிகை சமந்தாவை தான் அல்லு அர்ஜுனுக்கு ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் சமந்தா நடித்து வெளியான திரைப்படம் தான் 'தெறி' விஜய்க்கு ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் சம்மு தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்போது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அட்லீ இயக்கத்தில் சமந்தா நடிக்கிறார். இது சமந்தா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அட்லீ பாலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான 'ஜவான்' படத்தில், முதலில் சமந்தாவை தான் நயன்தாரா ரோலில் நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்த நிலையில், மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக சமந்தா நடிக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர் செண்டிமெண்ட் பார்த்து, தன்னுடைய முதல் படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவை நடிக்க வைத்தார். இதே செண்டிமெண்ட் படி தனது ஹிட் படத்தில் நடித்த சமந்தாவை தான் அட்லீ அல்லு அர்ஜுன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.