மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணைப்பு மொழி என்று கூறினார். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் உள்பட தமிழ்நாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்திதான் இணைப்பு மொழி என்று கூறியுள்ளது பற்றி கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு மொழி என்று கூறிவிட்டு தனது காரில் ஏறிச்சென்றார்.





ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில ஆண்டுகளாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழியின் புகழைப் பரப்பும் விதமாக பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் மூப்பில்லா தமிழ் என்று தமிழின் பெருமை பறைசாற்றும் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். மேலும், புகழ்பெற்ற ஆஸ்கர் விருதை வென்றபோது கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழிலே பேசி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண