சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. இது வரையில் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த தொடர்களை தற்போது ஆண்களும் விரும்பி பார்க்க துவங்கிவிட்டனர். அதிலும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். 



அந்த வகையில் சன் டிவியில் அதிக அளவிலான ரசிகர்களையும் டி.ஆர். பி ரேடிங்கையும் பெற்று வரும் டாப் 5 தொடரில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது கயல், எதிர்நீச்சல், இனியா உள்ளிட்ட தொடர்கள். அதே போல அதிக அளவிலான ரசிகர்களை கவர்ந்த ஒரு தொடராக இருக்கிறது அன்பே வா. இந்த சீரியலின் கதாநாயகனாக விராட் நடிக்க அவரின் ஜோடியாக நடிக்கிறார் டெல்னா டேவிஸ். மேலும் இந்த தொடரில் ஸ்வாதி தாரா, குயின்சி, விஜே தனுஷேக், பூஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில் மகாலக்ஷ்மி வில்லியாக நடித்து வருகிறார். 




இந்த சீரியல் நடிகர் நடிகையருக்கு ஏராளமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர். தினசரி ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்களின் அன்றாட ஒரு விஷயமாக மாறிவிட்டது. சமீப காலமாக அன்பே வா சீரியலில் ஹீரோ விராட்டும் ஹீரோயின் டெல்னா டேவிஸும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது கல்யாணம் குறித்த நடக்க இருக்கும் சூழ்நிலையில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒன்று சேர வேண்டும் என துடிக்கிறார்கள். அதனால் இந்த இரண்டாவது திருமணம் நடந்து விடக்கூடாது என்பதால் அதற்கான  ஏற்பாடுகள் நடைபெறும் போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு கூடுகிறது. இப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த அன்பே வா சீரியல் விரைவில் இறுதி கட்டத்தை நெருங்க உள்ளது என்றும் விரைவில் முடிவடைய உள்ளது என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் அல்லது வேறு ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகர் சீரியலில் இருந்து விலகினால் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத  சூழலில் இருக்கும் போது நன்றாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை ஏன் முடிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பி அதனால் மிகுந்த  மன வருத்தத்தில் உள்ளனர் அன்பே வா சீரியல் ரசிகர்கள்.