நடிகர் அல்லு அர்ஜூன் 10 கோடி விளம்பரபடம் ஒன்றை நிராகரித்து உள்ளார்.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜூன். பல்வேறு விளம்பர படங்களில் நடித்துவரும் இவர் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்தநிலையில் அவரை குட்கா மற்றும் மதுபான நிறுவனம் அணுகி 10 கோடி கொடுப்பதாக கூறி, தங்களது விளம்பரத்தில் நடிக்குமாறு கூறியுள்ளது. ஆனால் இதனை அல்லு அர்ஜூன் புறக்கணித்துள்ளார். முன்னதாக, பான் மசாலா நிறுவனம் ஒன்றை இதே போன்று அணுகியபோதும் அதனை அல்லு அர்ஜூன் நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜூன் ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பதற்கு 7.5 கோடி வசூலித்துவருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லு அர்ஜூனின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஊ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது.அதே போல அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றது. பேன் இந்தியா திரைப்படம், பிரம்மாண்ட கதையம்சம், ஊ சொல்றியா பாடல் என பல எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா வெளியானது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவுக்கு படம் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையே படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டது படக்குழு. முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால், இரண்டாம் பாகத்தை வெறித்தனமாக எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது.
முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடித்த வள்ளி கதாபாத்திரம் முடிவுக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தத் தகவலை தயாரிப்பாளர் மறுத்தார். மேலும், நடிகர் விஜய்சேதுபதியிடம் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.