தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகராக உலா வருபவர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக நடிக்காமலே இருந்து வந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், இன்று அந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

Continues below advertisement

டேர்டெவில்:

அஜித்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு டேர்டெவில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை அஜித்குமாரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அஜித் கேட்ட சம்பளத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், இந்த படத்தை அஜித்தே தயாரிக்கிறார். ப்ரேவ்ஹார்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஷாலினி அஜித்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். சுப்ரீம் சுந்தர் சண்டைப்பயிற்சி மேற்கொள்கிறார். கல்யாண் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். அஜித்தின் மிகத் தீவிரமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

Continues below advertisement

ஒரு வருடத்திற்கு பிறகு அப்டேட்:

குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு மீண்டும் ஆதிக் இயக்கத்திலே அஜித்குமார் நடிப்பது உறுதியானது. அஜித்குமார் தனது நீண்ட நாள் கனவான கார் பந்தயம் மீது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். சொந்தமாக தனக்கென கார் பந்தய அணியை உருவாக்கி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த சூழலில், சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு அஜித் படத்தின் அப்டேட் வந்துள்ளது. அஜித் கார் பந்தயத்தில் தீவிரம் காட்டி வருவதாலும், அவர் சொந்தமாக அணி நடத்தி வருவதாலும் தனது சம்பளத்தை உயர்த்தினார். இந்த சூழலில், அவர் கேட்ட ஊதியத்தை எந்த தயாரிப்பாளரும் தர முன்வராத சூழலில் அஜித்தே இந்த படத்தை தயாரிக்கிறார்.

சொந்த தயாரிப்பு ஏன்?

ப்ரேவ் ஹார்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தனது மனைவி ஷாலினி அஜித்குமார் பெயரில் இந்த படத்தை தயாரிக்கிறார். 63 படங்களில் நடித்த அனுபவம் மூலமாகவும் அஜித் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை அவரே தயாரிப்பதால் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கதாநாயகி, வில்லன் ஆகியோரது ஊதியமே பெரிய செலவாக கருதப்படுகிறது. அஜித்தே இந்த படத்தை தயாரித்து நடிப்பதால் படத்தயாரிப்பின் செலவு குறையும் என்று கருதப்படுகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தின் மற்ற கலைஞர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.