ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 173 ஆவது திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார். தனது 175 ஆவது படத்தோடு ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வை அறிவிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜயைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியும் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார்.  75 வயதை எட்டியிருக்கும் ரஜினிகாந்த் அடுத்த சில ஆண்டுகள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் மாஸான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இது அவரது 174 ஆவது படமாக உருவாக இருக்கிறது

சினிமாவில் இருந்து ஓய்வு 

ரஜினி சில ஆண்டுகள் முன்பிருந்தே சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று அரசியலுக்கு வரவிருந்தார். ஆனால் பலமான எதிர்ப்பு காரணமாக அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின்வாங்கினார். ஆனால் சமீப காலத்தில் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வுப்பெற இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தலைவர் 175 ஆவது படத்திற்கு பிறகு ரஜினி முழுமையாக சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து ஓய்வுபெற இருப்பதாக அறிவித்தார். விஜய் சினிமாவில் இருந்து ஓயவுபெற்றது தமிழ் சினிமாவிற்கே பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. விஜயைத் தொடர்ந்து இந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்று அறியப்படும் ரஜினியும் ஓய்வு பெற இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.