வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. 45 வயது தொழிலதிபரை 25 வயது இளம்பெண்ணான மமிதா பைஜூ இப்படத்தில் காதலிக்கிறார். டியூட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனமீர்த்துள்ளார் மமிதா பைஜூ. தற்போது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள வசனம் ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது 

Continues below advertisement

சிதாரா என் டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யாவின் 45 ஆவது படமாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆகாத நிலையில் சூர்யா ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருந்து வந்தனர். இப்படியான நிலையில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் அவர்களுக்கு பெரும் ஆறுதலாக வெளியாகியுள்ளது. 

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை

சூர்யாவின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கரைப் போலவே இந்த படமும் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை குறித்த சில தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி 45 வயதான சூர்யா ஒரு பிரபல தொழிலதிபராக இருந்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகாததால் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள மமிதா பைஜூவின் உதவியை நாடுகிறார். சூர்யாவின் மேல் மமிதா பைஜூ காதல் கொள்கிறார். அவரது காதலை சூர்யா ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதே படத்தின் மையக்கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

Continues below advertisement

கவனத்தை ஈர்க்கும் மைமிதா பைஜூ

45 வயது ஆண் மீது 25 வயது பெண் காதல் கொள்வது என்பது சிக்கலான ஒரு கதை என்றாலும் வெங்கி அட்லூரி இப்படத்தை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக கையாண்டிருப்பார் என்று நம்பலாம். அதே நேரம் மமிதா பைஜூ இந்த கதாபாத்திரத்தை நடித்திருக்கும் விதமும் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. டியூட் படத்தின் டீசரில் 'தேவதாஸ் சார் நீங்க ஏன் எனக்கு இவளோ பண்றீங்க' என்று அவர் பேசிய வசனம் பெரியளவில் வைரலானது. அதேபோல் விஸ்வநாத் & சன்ஸ் பட டீசரில் ' நீ சொடக்கு போட்டா பசங்க உன் கால்ல வந்து விழுவாங்க' என்று சூர்யா சொல்ல. ' இன்னும் நாலு சொடக்கு கூட போடுறேன் நீ விழு' என்று மமிதா பேசும் வசனம் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.