ஒயின் குடிப்பேன் ஆனால் ஓவரா குடிக்கமாட்டேன் என்று பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் டோலிவுட், கோலிவுட் என இரண்டு வட்டாரங்களில் சர்ச்சைகளின் நாயகி. நடித்தது கொஞ்சம் என்றாலும் சர்ச்சைகள் ஏராளம் இவரைச் சுற்றி உண்டு.


நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குநர் முருகதாஸ் எனப் பலரையும் இழுத்து தெருவில் விட்டவர் தான் இந்த ஸ்ரீரெட்டி. என்னைப் படுக்கைக்கு அழைத்தார்கள் என்று இவர் வைத்த பட்டியல் எல்லோரையும் பதறவைத்தது. அதேபோல் ஒரு பேட்டியில் இவர், தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்தார். இப்போது ஒரு யூடியூப் பேட்டியில் தனது லைஃப்ஸ்டைல் பற்றி பேசியுள்ளார். அதில் எனக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் ஒயின் குடிப்பேன். அதுவும் உடலுக்கு நல்லது சருமத்துக்கு நல்லது என்பதால் அளவாகக் குடிப்பேன். மற்றபடி ஓவராக ஹாட் ட்ரிங் குடித்துவிட்டு உளறும் அளவிற்கு எல்லாம் சென்றதில்லை என்று கூறியுள்ளார்.




எப்போதும் சர்ச்சைதானா?


சரி ஸ்ரீரெட்டி என்றாலே எப்போதுமே சர்ச்சை தானா என்றால் இல்லை இவருடைய ஓபன் டாக்கால் சில நல்ல காரியங்களும் நடந்துள்ளது என்று கூறலாம். அப்படித்தான் சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரத்தில் இவர் ஒரு தகவலைச் சொல்ல அது தேவையற்ற சர்ச்சைகளை தீர்த்துவைத்தது.


சமந்தாவுக்கும், காஸ்ட்யூம் டிஸைனர் ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பே பிரிவுக்கு காரணம் என்ற ஒரு பேச்சு இருந்தது. அதற்கு , சமந்தா, ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக பிரிவுக்கு காரணமாக இருக்க முடியாது. ப்ரீத்தம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிவித்தார் ஸ்ரீரெட்டி. ப்ரீத்தம் குறித்து ஸ்ரீரெட்டிக்கு எப்படி தெரியும் என்பதைத் தாண்டி, இந்த விளக்கத்தால் சமந்தா - ப்ரீத்தம் ஜுகல்கர் சர்ச்சை பிசுபிசுத்துப் போகச் செய்தது.


ஸ்டூடியோக்கள் பற்றி பகீர் தகவல் சொன்ன ஸ்ரீரெட்டி:


நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பற்றிச் சொன்ன ஸ்ரீரெட்டி. அவர்களில் பலரும் ஸ்டூடியோக்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டூடியோக்கள் தான் பாதுகாப்பான இடங்கள். பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஸ்டூடியோக்களை பல தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். ஸ்டூடியோக்கள் சிவப்பு விளக்கு பகுதி போன்று உள்ளன. ஸ்டூடியோக்களுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அது பாதுகாப்பான இடம். மேலும் போலீசாரும் சோதனை செய்ய மாட்டார்கள்.


அரசும் இதை கண்டுகொள்ளாது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன், என்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் சொல்லியிருந்தார் ஸ்ரீரெட்டி.