நடிகை சோனா யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் வாடகைக்கு வீடு கிடைக்காமல் எதிர்கொண்ட கஷ்டங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். சினிமாவில் கவர்ச்சிய நடிகை என்கிற அடையாளம் தனக்கு இருந்தை காரணமாக சொல்லி பலர் தனக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்ததாக சோனா தெரிவித்துள்ளார். தற்போது தனது சொந்த வீட்டில் தனியாக வாழும் அனுபவம் பற்றியும் அவர் இந்த வீடியோவில் பேசியுள்ளார்

Continues below advertisement

'பூவெல்லாம் உன் வாசம்' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை சோனா ஷாஜகான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன், கோ, ரொம்ப நல்லவன் டா நீ, ஜித்தன் 2, ஸ்ரீ சபரி அய்யப்பன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். யூடியுப் சேனல்களுக்கு பேட்டி அளிக்கையில் சோனா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக பல விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சோனா சமீபத்தில் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சென்னையில் தான் வீடு தேடி அலைந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் .

யாருமே வீடு தரல

தன் வாழ்வில் வீடு தேடுவது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்ததாக சோனா கூறியுள்ளார். "மாதம் ₹1 லட்சம் வரை வாடகை கொடுக்க நான் தயாராக இருந்தபோதிலும், ஒரு கவர்ச்சிக் நடிகை என்ற பொது பிம்பத்தின் காரணமாக பல வீட்டு உரிமையாளர்கள் எனக்கு வாடகைக்கு வீடு தர மறுத்துவிட்டார்கள். "சோனாவா? அவர் ஒரு கவர்ச்சிக் நடிகை, இல்லையா? இது ஒரு கண்ணியமான குடியிருப்புப் பகுதி அதனால் வீடு தர முடியாது என்று சிலர்  சொல்லியிருக்கிறார்கள் ."

Continues below advertisement

மேலும், தற்போது தனக்கு ஐந்து படுக்கையறைகள் கொண்ட ஒரு பெரிய இரண்டு மாடி வீடு சொந்தமாக இருப்பதாக சோனா பகிர்ந்து கொண்டார். இருப்பினும், தனது பெற்றோர் உயிருடன் இல்லாததாலும், கணவர், துணைவர் யாரும் இல்லாததாலும், தனது சகோதரி லண்டனில் வசிப்பதாலும், இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது மனதளவில் கடினமாகிவிட்டதாக அவர் கூறினார். தனிமை உணர்வுதான் வேறு வீட்டிற்கு மாறுவதைப் பற்றி அவர் யோசித்ததற்கான காரணங்களில் ஒன்று என்று விளக்கினார்."