தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிளாமர் நடிகையாக பிரபலமானவர் நடிகை ஷகீலா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற பூகம்பம் டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற பூகம்பமான தருணம் குறித்து பகிர்ந்து இருந்தனர். 


விசித்திராவுக்கு பாராட்டு : 


அந்த வகையில் பிக் பாஸ் 7 போட்டியாளர்களில் ஒருவரான நடிகை விசித்திரா தனது வாழ்க்கையில் நடைபெற்ற மோசமான அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்த போது டாப் ஹீரோ ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக குறிப்பிட்டு இருந்தார். விசித்திராவின் இந்த பேச்சு திரையுலகில் உள்ள அனைவரையும்  உலுக்கி எடுத்தது. யார் அந்த நடிகர் என்ற பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் ஒரு நேஷனல் தொலைக்காட்சியில் பகிரங்கமாக போட்டு உடைத்த விசித்திராவின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.



மக்களின் கருத்து :


சினிமா உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை விசித்திரா கூறிய இந்த சம்பவம் மீண்டும் வெளிக்காட்டியுள்ளது. என்றுதான் இந்த அவல நிலை முடிவுக்கு வரும் என தெரியவில்லை. விசித்திரா அந்த நடிகரின் பெயரை குறிப்பிட்டு காட்டி இருக்கலாம் என பலரும் கமெண்ட் தெரிவித்துள்ளனர். 


விசித்திராவின் துணிச்சலான இந்த பேச்சை தொடர்ந்து தற்போது சக நடிகையான ஷகீலாவும் மனம் திறந்து பேசியுள்ளார். நானும் விசித்திராவும் தோழிகள்தான். நாங்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளோம். அதே போன்ற ஒரு கசப்பான அனுபவத்தை நானும் எதிர்கொண்டுள்ளேன். 


ஷகீலாவின் தைரியம் :


ஒரு முறை இயக்குநர் சத்தியநாராயணா ராவ் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி அழைத்தார். அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என சொல்லி தான் என்னை கூப்பிட்டார். இந்த படத்தில் நான் நடிக்க சம்பளம் வாங்கிவிட்டேன். அடுத்த பட சான்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம். அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை என கூறிவிட்டேன். நடிகர் அல்லரி நரேஷின் தந்தை தான் அந்த இயக்குநர். இப்போது அவர் உயிருடன் இல்லை. தெலுங்கு திரையுலமே திரண்டு வந்து என்னை கேட்டாலும் நான் தைரியமாக இந்த உண்மையை சொல்வேன். இன்றும் நான் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். 



எதற்கு இந்த ரீ என்ட்ரி?


இது போன்ற ஒரு கசப்பான அனுபவத்தால் தான் விசித்திரா சினிமாவை விட்டு விலகியதாக கூறிய நிலையில் திரும்பவும் எதற்காக மீண்டும் மீடியாவுக்குள் வந்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் இன்டஸ்ட்ரிக்குள் வருவதற்கு இதன் மூலம் விளம்பரம் செய்கிறாரா என தெரியவில்லை. 


படுக்கைக்கு அழைத்த நடிகரின் பெயரை வெளிப்படையாக சொல்லிவிட்டால் தெலுங்கு திரையுலகில் இனி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என பெயரை வெளிப்படையாக சொல்லவில்லையோ என யோசிக்கிறேன். இருந்தாலும் விசித்திராவின் இந்த தைரியம் பாராட்டிற்குரியது. 


விசித்திராவை தொடர்ந்து நடிகை ஷகீலாவும் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்த விவகாரத்தை வெளிப்படையாக கொண்டு வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.