கண்ணாலனே எனது கண்னை நேற்றோடு காணவில்லை என்ற பாடலுக்கு தனக்கே உரிய நளினத்துடன் குழு நனடம் ஆடிய சாய் பல்லவியின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.


இளைஞர்களின் பலரின் கனவு நாயகியாகவும், மலர் டீச்சராக வலம் வந்தவர் தான் சாய் பல்லவி. கோத்தகிரியில் பிறந்த இவர் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலமாக அறிமுகமாகி நடிகையாக வெளிச்சத்திற்கு வந்தவர். கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு  தேவா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தன்னுடைய நடனத் திறமையின் மூலம் பலரது பாராட்டுகளைப்பெற்றார். இதனையடுத்து தமிழில் வெளிவந்த தாம்தூம் என்ற திரைப்படத்தில்  சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் இப்படத்தில்  சொல்லும் அளவிற்கு பிரபலம் ஆகாத நிலையில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக திரையுலகில் பிரபலமானார். மலையாளத்தில் படத்தில் மலர் என்ற பெயரில் தமிழ் டீச்சராக வலம் வந்த இவர் இளைஞர்கள் பலரின் கனவு நாயகியாக இருந்தார்.



பின்னர் மலையாளத்தில் களி என்ற படத்தில் நடித்தார். பின்னர் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் இவர்,  அவ்வப்போது சோசியல் மீடியாவிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.


சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நாயகிகளைப்போன்று சாய் பல்லவியும் இன்ஸ்டாவில் பல்வேறு ரீல்ஸ் வீடியோவையும் வெளியிட்டுவருகிறார். அந்த ரீல்ஸ் வீடியோவிலும் தன்னுடைய நடனத்திறமையை திறம்பட வெளிப்படுத்துவதோடு, தனது சகோதரியுடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவர்களது வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகிவருவது வழக்கம். இந்நிலையில் தான் இன்ஸ்டாவில் சாய் பல்லவியின் பேன்ஸ் கிளப் பக்கத்தில் சாய் பல்லவி தெலுங்கு மொழியில் வெளியான கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்ற பாடலுக்கு ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனது நடனக்குழுவினருடன் ஆடிய வீடியோ பகிரப்பட்டதோடு வைரலாகியும் வருகிறது.


 






இந்த வீடியோ இன்ஸ்டாவில் பார்த்த இவரது ரசிகர்கள், எப்பொழுதுமே நீங்கள் சூப்பர்தான் அக்கா, எத்தனையோ டான்ஸ்சர்ஸ் இருந்தாலும் உங்களுக்கு தனித்திறமை உள்ளது என்பதுபோன்ற கருத்துக்களையும் பகிர்ந்துவருகின்றனர்.