தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ரோஜா. இவர் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர். தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். 

Continues below advertisement

நம்ப மறுத்த விஜய்:

இந்த நிலையில், ரோஜா விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

பாடிகார்ட் (காவலன் படத்தின் முதற்பதிப்பின் பெயர்) படத்துல அசினோட அம்மாவாக நடிச்சுருப்பேன். விஜய் தயாரிப்பாளர்கிட்ட யார் சார் அசினோட அம்மா?னு கேட்டாங்களாம். ரோஜா மேடம் நடிக்குறாங்க. நாளைக்கு வர்றாங்க. ரோஜா மேடமா? சான்சே இல்ல. அவங்க நடிக்கமாட்டாங்க. அவங்க என் கூட ஹீரோயினா நடிச்சவங்க. அவங்க எப்படி நடிப்பாங்க அம்மா கதாபாத்திரத்துல?னு சொல்லிருக்காரு.

Continues below advertisement

தப்பு பண்ணிட்டோமா?

நான் அடுத்த நாள் காலையில கார்ல போயி இறங்குவேன். மேடம் இப்படி வாங்க என்று விஜய் என் பக்கத்துல வந்து உட்கார வச்சாரு. என்ன மேடம்? நீங்க சொன்னதை நான் நம்பவே இல்லை. நீங்க அம்மாவா? எப்படி மேடம்?னு சொன்னாரு.

தப்பு பண்ணிட்டோமோ? இவரே இப்படி சொன்னாருனா? ரசிகர்கள் எப்படி நினைப்பாங்க?னு எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதே நேரத்தில் நான் தெலுங்கில் கூட பண்ணியுள்ளேன். இரண்டு படம் சூப்பர் டூப்பர் ஹிட். கோலிமார் அந்த படத்துல பிரியாமணிவோட அம்மாவா நடிச்சுருப்பேன்.

இவ்வாறு அவர் கூறியிருப்பார்.

மிகப்பெரிய கதாநாயகி:

1992ம் ஆண்டு செம்பருத்தி படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. பிரசாந்த், பிரபுதேவா என அப்போதைய இளம் கதாநாயகர்களுக்கும், மறு பக்கம் ரஜினிகாந்த், விஜயகாந்த், மம்மூட்டி, சத்யராஜ், கார்த்திக் என பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

விஜய்க்கு அவர் நேரடியாக கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் நெஞ்சினிலே படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். அந்த பாடல் தற்போது வரை பிரபலம் ஆகும். பின்னர், காவலன் படத்தில் அசின் அம்மாவாக நடித்திருப்பார். அதேபோல, அஜித்துடன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ரோஜா அங்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மலையாள பாடிகார்ட் படத்தின் ரீமேக்கான காவலன் படத்தை சித்திக் இயக்கியிருப்பார். விஜய், அசின் ஆகியோருடன் ராஜ்கிரண், ரோஜா, எம்எஸ் பாஸ்கர், வடிவேலு, மித்ரா குரியன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். வித்யாசாகர் இசையமைத்திருப்பார். சறுக்கலில் இருந்த விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.