கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம். மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த இவர், தமிழில் பரத் நடித்த  ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்ட  , அதனைத்தொடர்ந்து ‘கொடைக்கானல்’, ‘வேலூர் மாவட்டம்’, ‘துரோகி’,  ‘தகறாறு’, ‘தலைவி’,  ‘100’  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக இருக்கும்  ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.


 



                                   


 


இந்த நிலையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் துபாய் தொழிதிபர் ஆஷிஃப் அலி திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்; இது தொடர்பாக பூர்ணா வெளியிட்டு இருந்த பதிவில், “ நான் இந்த உலகிலேயே அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம். ஒரு நல்ல மனைவியின் எந்த பண்புகளும் என்னிடம்  இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு போதும் என்னை குறைவாக உணரவில்லை. நான் யார் என்பதற்காக, நீங்கள் என்னை நேசித்தீர்கள். என்னை ஒருபோதும் மாற்ற முயற்சிக்கவில்லை. இது என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டு வர, என்னை மேலும் உழைக்க ஊக்குவித்தது.


இன்று நமக்கு நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு மத்தியில், நீங்களும் நானும் இந்த திருமண வாழ்கையை தொடங்குகிறோம். இது ஒற்றுமையின் அற்புதமான பயணம். இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் உன்னுடன் இன்ப துன்பங்களில் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன் உன்னை நேசிக்கிறேன்." என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்து இருக்கிறார். 


இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், “ இந்த வீடியோ எனக்கு மிகவும் ஸ்பெஷலான வீடியோ.. ஆம் நான் தாயாக மாற போகிறேன்;  என்னுடைய அப்பா, அம்மா இருவரும் மீண்டும் தாத்தா பாட்டி ஆக போகிறார்கள்;  நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்; அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்”  என்று பேசி இருக்கிறார்; 


 


                                                 


மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டியும் பூர்ணா கொண்டாடி இருக்கிறார். இந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.