தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. கோலிவுட்டின் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். தற்போது மீனாவின் மகளும் குழந்தை நட்சத்திரமாக களமிறங்கியுள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியுள்ள மீனா நேர்காணல் ஒன்றில் , அஜித் மற்றும் விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 


 






"விஜய் கூட எனக்கு நடிக்க முடியலை. பாடலில் மட்டுமே நடித்திருக்கிறேன். அந்த பாடல் ஷூட்டிங் சமயத்தில் எங்கள் இருவருக்குமே போட்டிதான். முதலில் யார் டான்ஸ் மூவ்மெண்ட்ஸை கற்றுக்கொள்கிறார்கள் என போட்டி நடக்கும்.வெளியில தெரியாது.  எங்கள் உணர்வுகள் மூலம் நல்லாவே தெரியும் . சில நேரங்களில் நான் செய்யும் பாவனைகளை எல்லாம் பார்த்து. நைஸ்..நைஸ் ..ரொம்ப நல்லாயிருக்கு அப்படினு பாராட்டுவாரு.ரசிப்பாரு. அவர் கூட நடிக்க நிறைய படங்கள் வந்துச்சு. இரண்டு மூன்று படங்களில் அவருடன் நடித்திருக்க வேண்டியது. அந்த சமயத்தில் நானும் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. தெறி சயமத்தில், உங்க கூட நடிக்க ஒரு கால் ஷீட் கிடைக்கல, அவ்வளவு பிஸியாக இருந்தீங்க.. இப்போ என்னடான்னா ஜாலியா இருக்கீங்க.  என சொன்னாரு.  விஜய் எப்போதுமே என்னை கலாயத்துக்கொண்டிருப்பார்.  உங்களுக்கு என்னை பிடிக்கலைல , அஜித்தான உங்களுக்கு பிடிக்கும். அதனாலதானே என்கூட நீங்க நடிக்கல. என சொல்லிக்கொண்டிருப்பார்.





 அஜித் உங்களுக்கெல்லாம் தல ஆகுறதுக்கு முன்னாலையே எனக்கு தெரியும் அவரை, அவர் எப்போதுமே பைக் மற்றும் அந்த போட்டிகள் குறித்து நிறைய பேசுவார். அவர் படங்கள் பண்ணும் பொழுது  , அந்த கதாபாத்திரங்களுக்குள்ளாக அப்படியே ஒன்றிவிடுவார். தன்னை நிரூபிக்க முயற்சிகள் எடுப்பாரு. அஜித் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது அவருக்கு . அதுதான் இன்றைக்கு இங்கு கொண்டு வந்திருக்கிறது “