தமிழகம் முழுவதும் பங்குனிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் பங்குனி திருவிழாக்கள் களைகட்டி உள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் நடைபெற்ற கோவில் விழாவில் நேற்று இரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 



நடிகை ஆண்ட்ரியா சிறந்த பாடகி என்பதால் மல்லூர் ஆண்ட்ரியா ரசிகர்கள் அவரை சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய "உம் சொல்றியா மாமா" பாடலை ரசிகர்கள் பாட சொல்லியிருக்கின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடிகை ஆண்ட்ரியா உடனடியாக அந்தப் பாடலை பாடியுள்ளார். பாடி முடித்தவுடன் அங்கிருந்த ரசிகர்கள் அதே பாடலுக்கு நடிகை ஆண்ட்ரியாவை நடனமாட கேட்டுள்ளனர். அதனை நடிகை ஆண்ட்ரியா மறுத்துவிட்டார். 



உடனடியாக கோபமடைந்தார் ரசிகர்கள் நடிகை ஆண்ட்ரியா நடனமாடவில்லை என்றால் இங்கிருந்து அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த நடிகை ஆண்ட்ரியா அங்கிருந்த கோவில் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்பின் நீண்ட வாக்கு வாசத்திற்கு பிறகு நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஜெய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் "கோவா" திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடி பெரும் வரவேற்ப்பை பெற்ற "இதுவரை இல்லாத உணர்வு" என்ற பாடலை பாடினார். அதையும் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் கூச்சலிடத் துவங்கினார். கோபத்தில் நடிகை ஆண்ட்ரியா அங்கிருந்து கிளம்பிச் செல்ல முயன்றார். ரசிகர்கள் நடிகை ஆண்ட்ரியாவை முற்றுகையிட முயன்றனர். பின்னர் ரசிகர்களை சமாளித்து காவல்துறையினர் உதவியுடன் நடிகை ஆண்ட்ரியா புறப்பட்டுச் சென்றார். கோவில் நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா நடனமாட சொல்லி கூச்சலிட்ட சம்பவம் நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.