Actress Anaswara Rajan: வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ ஷூட்டா? - கோபத்தில் நடிகை அனஸ்வரா கொடுத்த விளக்கம்..!

மலையாளத்தில் இளம் நடிகையான அனஸ்வர ராஜன் மிகக் குறுகிய காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக மாறியவர்.  

Continues below advertisement

கவர்ச்சியான உடையணிந்து வெளியாகும் போட்டோ ஷூட்கள் மீதான விமர்சனங்கள் ஒன்றும் தனக்கு புதிதல்ல என பிரபல இளம் நடிகை அனஸ்வரா தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மலையாளத்தில் இளம் நடிகையான அனஸ்வர ராஜன் மிகக் குறுகிய காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக மாறியவர்.  அவர் இதுவரை ஒருசில படத்திலேயே நடித்திருந்தாலும் அனஸ்வரா நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். சுஜாதா என்ற படத்தின் மூலம் மஞ்சுவாரியரின் மகளாக அறிமுகமான அவர், தண்ணீர்மத்தன், வாங்க், சூப்பர் சரண்யா, மைக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் த்ரிஷா நடித்த ராங்கி படத்திலும் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். 


மலையாளம், தமிழை தொடர்ந்து இந்தியிலும் அனஸ்வரா விரைவில் அறிமுகமாகவுள்ளார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனஸ்வரா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவார். இதற்கு ரசிகர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், சில நேரங்களில் சைபர் தாக்குதலையும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் "நான் ஆடை குறித்து மக்கள் கூறும் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆரம்பத்தில்தான் அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. இப்போது எனக்கு இந்த விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது என் குடும்பத்தை பாதிக்கிறது. என் அம்மாவிடம் பலரும், வாய்ப்புகாக இப்படி செய்யலாமா என கேட்கின்றனர். இதெல்லாம் பிரச்சினை இல்லை என நினைத்து முன்னேற வேண்டும்” என அனஸ்வர ராஜன் கூறியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola