தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். மற்ற நடிகர்கள் கமர்சியல் வெற்றிகளை நோக்கி ஓடும் நிலையில் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடித்து வருகிறார். இதனாலேயே இவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சறுக்குவதும் உண்டு. விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடிய தவறியதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Continues below advertisement

அடுத்தடுத்து இரு படங்கள் ட்ராப்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரமின் அடுத்த படம் உருவாக இருந்ததாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து 96 இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்திலும் விக்ரம் ஒரு படத்திற்கு கமிட் ஆனார். ஆனால் இந்த இரு படங்களும் அடுத்தடுத்து கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்ரமின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்து வருகிறார்கள். 

விக்ரம் நடிக்கும் 4 புதிய படங்கள் 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் தனது அடுத்த 4 படங்கள் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். " சில நேரங்களில் அமைதியாக இருப்பது என்பது தயார்படுத்திக் கொள்வது. இந்த ஆண்டு நான் என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். அந்த வகையில்  நான் பெரிதும் மதிக்கக் கூடிய இயக்குநர்களுடன் நான்கு புதிய படங்களை தொடங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். " என்று விக்ரம் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

அடுத்தபடியாக விக்ரமின் அடுத்த படத்தை போடி ராஜ்குமார் இயக்கவிருக்கிறார். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருன் விஸ்வா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். தொடர்ந்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். நயன்தாரா கவின் நடிக்கும் ஹாய் படத்தை இயக்கியுள்ளார். அடுத்தபடியாக இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதனைத் தொடர்ந்து கடைசியாக மஹான் படத்தைத் தொடர்ந்து  மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது