சூர்யாவின் நடிப்பில் இறுதியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப்படத்தை பாண்டிராஜ் இயக்கினார். இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பாலா உடன் அவர் கைகோர்த்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.






இதனிடையே வெற்றிமாறன் இயக்கும்  ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகளிலும் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட்டானது அண்மையில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற்றது.






இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்தப்படங்களுக்கு அடுத்தபடியாக  ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே இவரது தயாரிப்பில் உருவாகும் படங்களையும் அவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா மகனான தேவ் நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




அதற்கு காரணம், ஒரு போட்டோ. ஆம், அந்தப் போட்டோவில், சூர்யாவின் மகனான தேவ், கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுடன் ஏதோ படப்பிடிப்பில் இருக்கிறார். இதன் மூலம் அவர் நடிக்க வருகிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.