நடிகர் ரேகா நாயர் ‘வம்சம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’,’ஆண்டாள் அழகர்’,’பகல் நிலவு’ உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர். இதுதவிர நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படத்திலும் அவர் நடித்திருக்கிறார். அண்மையில் அவர் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஓபன் டாக்காகப் பேசினார். அவர் பேசியதில் இருந்து..



“அண்மையில் ஒரு பெண் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும் அதில் நடிக்கலாமா எனவும் கேட்டார். அவர் இத்தனைக்கும் நல்ல சம்பளம் வாங்கும் நர்ஸ். நான் வெளிப்படையாக அவரிடம் சில காரணங்களைக் கூறினேன். வார்த்தைகளால், பணத்தால், மனதளவில் என பல்வேறு வகையில் நாம் பாதிக்கப்பட நேரிடும். அவர்கள் படுக்க அழைப்பார்கள். இதற்கெல்லாம் தயார் என்றால் நீ போ எனக் கூறினேன்.மேக்கப் போட்டு ஐந்து நிமிடம் லேட்டா வந்தாலும் நம்மைத் ****** எனத் திட்டுவார்கள்.


 






இதைப் பற்றி நான் புரொடியூசரிடம் சொல்லியதும் ஆறு மாதம் கழித்து அதே டைரக்டர் ஒரு மேடையில் நான் அந்த சினிமாவில் நடித்தது பற்றிப் புகழ்ந்து தள்ளினார்.அவருக்கு அவ்வளவுதான் மரியாதை என அவரை அழைத்து சொன்னேன். நடிகர் பிரியா பவானி சங்கர் சீரியலில் நடிக்கும்போது இயக்குநர் அவரிடம், “ஏன் ராத்திரி வேற எங்கையாவது போனியா எனக் கேட்டார்கள். நான் இருந்த செட்டில் என் கண் முன்னவே இது நடந்தது. இதையெல்லாம் நாம் சகித்துக் கொண்டு போக வேண்டும் என்கிற அவசியமே இல்லை” என்றார்.