தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்
தவெகவில் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட இருந்த நிலையில் இந்த அறிவிப்பை தள்ளிவைத்துள்ளார்

திருச்சி கிழக்கில் தவெக சார்பாக ராகவா லாரன்ஸ் போட்டியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பை ராகவா லாரன்ஸ் நாளை ஜூன் 11 ஆம் தேதி வெளியிட இருந்தார். இன்று இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதால் தனது அறிவிப்பை ஒத்திவைத்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்
தனது எக்ஸ் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் "அனைவருக்கும் வணக்கம், 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்றதொரு தனிப்பட்ட துயரமாக எனக்குத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன். அதற்குப் பதிலாக, 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன்." என அவர் தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















