நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் அடுத்த ஸ்டார் நட்சத்திரமாக உருவாகி வருகிறார். ஆன்ஸ்கிரீனில் மட்டுமில்லாமல் திரைத்துறையிலும் சக நடிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் பிரேம் குமார் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த உதவி குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

Continues below advertisement

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தபடியாக சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் எஸ்.கே . தாய்கிழவி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்த சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்குகிறார். அமரன் படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அமரன் படத்தைப் போலவே சேயோன் திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது. 

சிவகார்த்திகேயன் செய்த உதவி - பிரேம்குமார் பேட்டி 

ஆன்ஸ்கிரீனில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கி இன்று ஒரு பெரிய ஸ்டாராக வளந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.ஆனால் இவரது வளர்ச்சி பிடிக்காதவர்கள் பலர் தொடர்ச்சியாக எஸ்.கேவை பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை தொடர்ச்சியாக பரப்பி வருகிறார்கள். ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளைப் பற்றி கவலைப்படாமல் சினிமாத் துறையில் தனக்கென ஒரு நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் எஸ்.கே. திறமையான இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது , சக நடிகர்களுக்கு உதவுவது என மறைமுகமாக பல உதவிகளையும் செய்து வருகிறார். அப்படி அவர் தனக்கு செய்த உதவி குறித்து நடிகர் பிரேம்குமார் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசியுள்ளார்

Continues below advertisement

" எனது மகனுக்கு நெதர்லாந்தில் படிக்க சீட் கிடைத்தது. ஆனால் அதற்கு 50 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்னிடம் சொத்து என்று என் வீடு மட்டும்தான் இருந்தது. அதுவும் EMI இருப்பதால் வங்கியில் கடன் தரவில்லை. என்னுடைய நிலைமையை சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது எதுவும் கேட்காமல் 50 லட்சம் பணம் கொடுத்து உதவினார். இன்று என் மகன் மாதம் 4-5 லட்சம் சம்பாதிக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிவாதான். சிவகார்த்திகேயன் எனக்கு உதவி செய்யவில்லை வாழ்க்கை கொடுத்திருக்கிறார்" என்று இந்த பேட்டியில் நடிகர் பிரேம்குமார் கூறியுள்ளார்