“உருப்படமாட்டேனு சொன்னாங்க; நல்லா நடிச்சேன்னு ரஞ்சித் எப்போதும் சொல்லமாட்டார்” - கலையரசன்

”ஒரு செமஸ்டரில் 28 பேப்பர்லாம் அரியர்ஸ் எழுதியிருக்கேன்.”

Continues below advertisement

தமிழ் சினிமாவில்  நம்பிக்கைக்குரிய நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கலையரசன் . சில படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து அசத்தி வரும் கலையரசன் . மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகுந்த பாராட்டை பெற்றார். அதன் பிறகு டார்லிங் 2, ராஜா மந்திரி உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்தார். சமீபத்தில் கலையரசன் நடிப்பில் சார்ப்பட்டா பரம்பரை படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Continues below advertisement


ஐடி துறையில் வேலை பார்த்து வந்த கலையரசன் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பதிவு செய்துள்ளார். அதில் “ ஐடியில் இருக்கும் பொழுதே சினிமாவிற்காக முயற்சித்து வந்தேன். குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பிரச்சனைக்காகத்தான் ஐடியில் வேலை செய்துக்கொண்டே சினிமாவிற்கு முயற்சி செய்தேன். ஐடியில் வேலை கிடைத்ததுமே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆகிவிட்டது. முன்னதாக நான் உருப்படவே மாட்டேன் என எல்லோரும் சொன்னார்கள். அதற்கு ஏற்ற மாதிரியாக நான் சினிமாவிற்கும் ட்ரை செய்தேன். வீட்டில் இருப்பவர்களுக்கு பயமும் கவலையும் இருந்தது. ஆனால் வேலை கிடைத்ததுமே ரொம்ப ஹாப்பி.

ஒரு செமஸ்டரில் 28 பேப்பர்லாம் அரியர்ஸ் எழுதியிருக்கேன். அதனால வீட்டுல இருக்கவங்களுக்கு பயம் . நடிக்க வந்த பிறகு  ரஞ்சித் சார் எப்போதுமே நல்லா நடிச்சேனு சொல்லவே மாட்டாரு. ஒரே ஒரு சீன் மட்டும் நல்லா பண்ணிருக்கடானு சொல்லியிருக்காரு. என்னை எப்போதுமே ஆக்டிங் கிளாஸ் போ சொல்லுவாரு. அவர் வாய்ல இருந்து நல்ல ஆக்டிங்னு பேர் வாங்கிட்டா பெரிய விஷயம். எனக்கு மிகவும் டென்ஷனான விஷயம்னா அது சிக்னல்ல ஹாரன் அடிக்கிறது. பொதுவா இப்படி சென்ஸ் இல்லாம யாரவது ஹார்ன் அடிச்சா நான் கோவப்படுவேன் . இப்போ முகம் பரீட்சியமாகிட்டதால , எனக்கு பதில் என் டிரைவர் தம்பி அஜித் போய் கேட்பான் . அது தேவையில்லாம பண்ணுவாங்க ” என தன் வாழ்க்கையின்  சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்

ALSO READ | Rasi Palan Today, Jan 9: பணம் புரளும் யோகத்தில் கும்பம்... துள்ளி விளையாடும் மீனம்... இன்றைய ராசிபலன் !

Continues below advertisement
Sponsored Links by Taboola