நடிகர் அஜித்குமாரின் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் பிரபல நடிகர் ஒருவரின் மகன் நடித்துள்ள செய்தி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார் அஜித்குமார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் அவருக்கு கார் பந்தயத்தில் அளவு கடந்த ஆர்வம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கார், பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட ஆண்டுகளாக களத்தில் இறங்காத அஜித் மீண்டும் முழு வீச்சில் செயல்பட்டு பல்வேறு பந்தயங்களில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். 

கார் பந்தயத்திற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் டீம் என்ற அணியை வழிநடத்தி வருகிறார். அந்த அணியானது ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கேம்பா குளிர்பானத்தோடு கைகோர்த்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. சினிமாவின் தொடக்கத்தில் விளம்பரங்களில் தலை காட்டிய அஜித் அதன்பின்னர் விளம்பரம், பட நிகழ்வு என எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். 

Continues below advertisement

ஆனால் திடீரென அவர் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் தோன்றியது ஆச்சரியத்தையும், அதேசமயம் பெரும் எதிர்ப்பையும் பெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேம்பா குளிர்பான விளம்பரம் வெளியானது. அதில் அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் காட்சிகளும், துணிந்தவர்களுக்கு தடையே கிடையாது, லட்சியங்களை நோக்கி முன்னேறு  என வசனம் சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த விளம்பரத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். 

அஜித் விளம்பரத்தில் பிரபல நடிகரின் மகன்

இந்த நிலையில் இந்த விளம்பரத்தில் பிரபல நடிகரின் மகனும் நடித்துள்ளார். அது வேறு யாருமல்ல.. ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாம்ஸின் மகன் தான். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “அஜித் குமார் சார் நடித்த Campa கூல்டிரிங்ஸ் விளம்பரத்தில் என் மகன் யோஹனும் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.வாய்ப்பளித்த இயக்குனர் சிறுத்தை சிவா சார் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்” என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி கேரக்டர் மூலம் தனக்கென தனியிடம் பிடித்த நடிகர் சாம்ஸ், அவர் நடித்த அறை எண் 305ல் கடவுள் படத்தின் இடம்பெற்ற தன் கேரக்டர் பெயரை தன்னுடைய பெயராக “ஜாவா சுந்தரேசன்” என மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.