சட்டமன்ற தேர்தல் நாளில் நடிகர் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பியுள்ளார். சூர்ய அஸ்தமனத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு What a Beautiful Sunset என அவர் பதிவிட்டார். இந்த ஸ்டோரி வைரலான நிலையில் இன்று காலை சூர்ய உதயத்தை பதிவிட்டு Good Morning என பதிவிட்டுள்ளார்
தமிழகத்தில் நேற்று ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் சினிமாத் துறையில் பலர் வெளிப்படையாக விஜய்க்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தவெக ஆதரவாளர்கள் பலர் விஜயைப் போலவே வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து வந்து வாக்களித்தனர். நடிகர்கள் சிபி சத்யராஜ் , காலிதாஸ் ஜெயராம் , ஜெய் , சிம்பு , தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இதே டிரஸ் கோட் அணிந்து வந்து வாக்களித்தனர்.
நடிகர் ஜெய் தவெகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார். தேர்தல் நாளன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெய் அந்த வீடியோவில் 'ஓட்டுக்கு சத்தியம் வாங்கி காசு கொடுப்பதை விமர்சித்து பேசியிருந்தார். மாற்றம் வேண்டும் என்றால் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த கையோடு அவர் தனத் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்று பதிவிட்டார். அதில் சூர்ய அஸ்தமனத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு What a Beautiful Sunset என கேப்ஷன் வைத்திருந்தார்.
முன்னதாக பிரச்சாரத்தில் விஜய் திமுகவின் தோல்வியை அக்னி நட்சத்திரத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெய் தனது இன்ஸ்டாகிராம் இந்த மறைமுகமான பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. உடனே ஜெய் தனது இன்ஸ்டாகிராமில் இன்று காலை சூர்ய உதயத்தை பதிவிட்டு Good Morning என பதிவிட்டுள்ளது. இவர் என்னடா ஒவர்நைட்டில் சரண்டர் ஆயிட்டார் என நெட்டிசன்கள் ஜெய்யை கலாய்த்து வருகிறார்கள்.
