ப்ளாஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் அர்ஜூன் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக சனாதன எதிர்ப்பு என்பது பேசப்பட்டு வரும் நிலையில் அர்ஜூனின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Continues below advertisement

அர்ஜூன் , ப்ரீத்தி முகுந்தன் , அபிராமி ஆகியோர் நடித்துள்ள ப்ளாஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரையிடலின் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜூன் விஜய் முதலமைச்சரானது குறித்து பேசினார். 

"என்னுடைய நண்பர் முதல்வராக வந்திருக்கிறார். அவர் இப்போது தான் பதவியேற்றிருக்கிறார். 100 சதவீதம்  அவர் நல்லது செய்வார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் " என்று கூறினார்

Continues below advertisement

சனாதன தர்மம் பற்றி அர்ஜூன் 

சனாதன் என்பது ஒரு வாழ்க்கை முறை. வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது சனாதனத்தில் இருக்கிறது. திருடாதீர்கள் ,இன்னொரு பொருளுக்கு ஆசைப்படாதீர்கள் , வயதான நம் பெற்றோர்களை பார்த்துக்கொள்ள சொல்லி சனாதனம் தர்மம் சொல்கிறது. சனாதனம் இருக்கக் கூடாது என்றால் நம் பெற்றோர்களை வீட்டில் இருந்து துரத்திவிட வேண்டும். அது சாத்தியமா. சனாதனம் என்பது ஒரு மதம் இல்லை அது ஒரு வாழ்க்கை முறை. சனாதன தர்மத்தை நான் அப்படிதான் புரிந்துகொண்டிருக்கிறேன். எல்லாரும் அதை புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும் " என அர்ஜூன் கூறினார் . அர்ஜூனின் இந்த கருத்து தொடர்ச்சியாக சனாதன எதிர்ப்பை பேசி வரும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளிக்கவே பேசியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.