தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை நடிகர் அப்பாஸ் தனியார் சேனகுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


‘சாக்லேட் பாய்’ அப்பாஸ் 


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகர் அப்பாஸ் பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அவர், இன்று குடும்பத்துடன் வெளிநாட்டில் வாழ்க்கையைக் கழித்து வருகிறார். நடிகர் அப்பாஸ் நடித்த காதல் தேசம், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், மின்னலே, ஆனந்தம், பூச்சூடவா, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 


இப்படியான நிலையில் அப்பாஸ் மீண்டும் தமிழ்நாட்டும்கு கம்பேக் கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் ஊடகங்களிலும் அவர் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஒரு  நேர்காணலில் அப்பாஸிடம், “உங்கள் வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான முத்தம் என எதை சொல்வீர்கள்” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


வித்தியாசமான முத்தம் 


அதற்கு “எனக்கு நிறைய பெண் தோழிகள் இருந்தார்கள். அவர்களுக்கு நான் வித்தியாசமான முத்தங்கள் கொடுத்தேன். ஆனால் வாழ்க்கை ஒருவருடன் தான் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதாவது காதல் என்று வரும்போது அதில் நான் உறுதியாக இருப்பேன். அது பிரேக் அப் ஆகும்போது தான் ஒரு மாதிரி பெண் தோழிகள் கூட சுத்திகிட்டு இருப்பேன்.  என்னோட ஸ்கூல் டைம்ல ஒரு காதல் இருந்துச்சு. அந்தப் பொண்ணும் ஆல்ரெடி காதல் தோல்வியில் இருந்துச்சு. நாங்க ஒரு பாயிண்ட்ல மீட் பண்ணோம். அந்தப் பொண்ணுக்கு நான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் முத்தம் கொடுத்தேன்’ என்றார்.


சினிமாவில் முதல் முத்தம் 


தொடர்ந்து, ‘சினிமாவில் உங்களுடைய முதல் முத்தம் எது?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அப்பாஸ், “சினிமாவுல கிஸ் சீன் இருக்கும். ஆனால் அதை நேரடியா எடுக்காம அதற்கேற்ற மாதிரி மாத்தி எடுப்பாங்க. உண்மையாவே ஒரு இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போது தான் நான் முதல் முத்தக் காட்சியில் நடித்தேன். அந்தக் காட்சியை பற்றி முன்னாடியே சொல்லவில்லை. அந்நேரம் நான் சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் புகை பிடிக்கவும் செய்திருந்தேன்.


உடனே நான் படக்குழுவினரிடம் “முதலிலேயே சொல்லமாட்டிங்களா” என கடிந்து கொண்டு, அதன்பிறகு ரெடி ஆனேன். கிட்டதட்ட 4 கோணங்களில் காட்சியை படமாக்கினார்கள். ஆனால் கடைசியில் எனக்கும், அந்த ஹீரோயினுக்கும் அந்த முத்தக் காட்சி போர் அடித்து விட்டது. மேலும் என்னோட கல்யாண விஷயம் ஊடகத்தில் வெளியானது.


அப்போது என் மேனேஜர் “கல்யாணம் பண்ணினா உங்க மார்க்கெட் போயிடும்” என சொன்னார். அதேசமயம் கல்யாண மண்டபம் வெளியில சில பெண்கள், நீங்க கல்யாணம் பண்ணாதீங்க என கடிதம் எழுதி அனுப்பினார்கள். ஆனால் எனக்கு என்ன தோன்றியதோ அதை செய்தேன். இதற்காக என் வீட்டையே மாற்றினேன்” என அப்பாஸ் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Web Movie Review: சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை சுவாரஸ்யம் கூட்டியதா... நட்டியின் ‘வெப்’ திரைப்படம் எப்படி இருக்கு?