பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தொழிலதிபரான கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்துக் கொண்டார். இன்று நடைபெற்ற நிகழ்வு ஆமிர்கானின் 3வது திருமணமாகும். 

Continues below advertisement

இந்த திருமண நிகழ்வானது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் திருமணம்பாந்த்ராவில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இவர்கள் கடந்த 2025ம் ஆண்டு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு வாங்கினார். கடலை பார்த்தவாறு இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் ஆகியோரின் உறவு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது. ஆனால் 2024ம் ஆண்டு உறவினரான நுழத் கான் மூலமாக மீண்டும் ஆமிரின் வாழ்க்கையில் கௌரி ஸ்ப்ராட் நுழைந்துள்ளார். இவர்களின் நட்பு மீண்டும் துளிர்விட நாளடைவில் காதலாக மாறியது. கிட்டதட்ட இந்த ஜோடி ஒருவருடம் காதலித்தது. ஆமிர் கான் மும்பையிலும், கௌரி பெங்களூருவிலும் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் 2025ம் ஆண்டு தனது 60வது பிறந்தநாளை ஆமிர்கான் கொண்டாடும்போது கௌரி ஸ்ப்ராட்டை தனது துணை என வெளிப்படையாக அறிவித்தார். 

Continues below advertisement

வராத இரண்டாம் மனைவி

இதனிடையே ஆமிர் கானின் திருமணத்தில் ராஜ் தாக்கரே, இரா கான், எல்லி அவ்ராம், இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆமிரின் முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரீனா தத்தா மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கிரண் ராவ் வராதது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேசமயம் இந்த நிகழ்வில் ஆமிர் கான் - ரீனா தத்தா என இருகுடும்ப உறவுகளும் ஒன்று சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது வைரலானது. 

Also Read: நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

ஆமிர்கானின் முந்தைய திருமணங்கள் 

ஆமிர் கானின் முதல் திருமணம் 1986 ஏப்ரல் 18 அன்று ரீனா தத்தாவுடன் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு ஜுனைத் கான் மற்றும் இரா கான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பின்னர் இயக்குநரான கிரண் ராவை 2005ம் ஆண்டு ஆமிர் கான் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ள நிலையில்  இந்த திருமண வாழ்க்கை 16 ஆண்டுகள் நீடித்தது. என்னதான் விவாகரத்து பெற்றாலும் ஆமிர், ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகிய இருவருடனும் ஒரு சுமூகமான உறவைத் தொடர்ந்து வருகிறார். அடிக்கடி இவர்கள் சந்தித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.