68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. 


அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது.  இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


தமிழில் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு (Aparna Balamurali) வழங்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று  திரைப்படத்தில் ‘பொம்மி’ கதாப்பாத்திரத்திரத்தில் நடித்த்தற்காக அபர்ண பாலமுரளிக்கு இவ்விருந்து வழங்கப்பட்டுள்ளது.






மேலும், தமிழில் விருதுகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்களுக்கு,


சிறந்த படம் - சூரரைப்போற்று 
சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் 
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா) 






இதேபோல் tanhaji unsung warrior  என்ற இந்தி படத்திற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு கிடைத்துள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண