Tamil Nadu Election 2026 Chennai Voting Percentage: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சென்னையில் வாக்குப்பதிவு எப்படி?

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 16 தொகுதிகளிலும் மாலை 5 மணி வரையில் எவ்வளவு வாக்கு சதவீதம் என்பதை துல்லியமாக கீழே விரிவாக காணலாம்.

1. ஆர்கேநகர் தொகுதி - 87.12 சதவீதம்

Continues below advertisement

2. பெரம்பூர் - 86.72 சதவீதம்

3. கொளத்தூர் - 83.58 சதவீதம்

4. வில்லிவாக்கம் - 83.56 சதவீதம்

5. திருவிக நகர் - 76.09 சதவீதம்

6. எழும்பூர் - 82.71 சதவீதம்

7. ராயபுரம் - 76.73 சதவீதம்

8. துறைமுகம் - 80.61 சதவீதம்

9. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 81.89 சதவீதம்

10. ஆயிரம் விளக்கு - 81 சதவீதம்

11. அண்ணா நகர் - 83.44 சதவீதம்

12. விருகம்பாக்கம் - 83.84 சதவீதம்

13. சைதாப்பேட்டை - 75.92 சதவீதம்

14.தி.நகர் - 81.82 சதவீதம்

15.மயிலாப்பூர் - 72.79 சதவீதம்

16. வேளச்சேரி - 82.16 சதவீதம்

எங்கு அதிகம்?

மாலை 5 மணி வரையில் சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. திருவிக நகரில் 76.09 சதவீதமும், சைதாப்பேட்டையில் 75.92 சதவீதமும், மயிலாப்பூரில் 72.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஆர்கே நகரில் அதிகபட்சமாக மாலை 5 மணி வரை நிலவரப்படி 87.12 சதவீதம் வா்குகள் பதிவாகியது. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 86.72 சதவீதம் வாக்குகளும் பதிவாகியது. உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 81.89 சதவீதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 83.58 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது.

6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதால் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்த பலருக்கும் டோக்கன் அளிக்கப்பட்டதால் அவர்கள் பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 

TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்