மக்களால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துகள் என சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Continues below advertisement

திமுக தோல்வி அடையும் நிலையில், இன்னும் பேரதிர்ச்சியாக கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். ஆனால், மற்றொரு நல்ல விஷயமாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். 9,763 வாக்கு வித்தியாசத்தில் அவர் பெற்றார். திமுக சட்டமன்றத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதி

திமுக உதயநிதி - 58,059

Continues below advertisement

தவெக செல்வம் - 48,296

அதிமுக ராஜாராம் - 14,067

நாதக ஆயிஷா பேகம் - 2,440

இந்த நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேனியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கான சான்றிதழை பெற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் விஜயின் பெயரை குறிப்பிடாமல் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

வெற்றி, தோல்வியை பார்த்திருக்கிறோம் என்றும் எந்த கஷ்டம் வந்தாலும் மக்களுடன் நிற்போம் என்றும் தன்னை தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். வெற்றி பெற்ற தவெக குறித்து கேள்வி எழுப்பியபோது, “மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள் தேர்வு செய்துள்ளனர். புதிதாக அமையயுள்ள அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லையா என்று கேட்டதற்கு, அவரின் பெயரை குறிப்பிடாமல், மக்களால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.