எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருந்த தவெக வேட்பாளர் திடீரென மாயமானதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது அரசியல் கட்சியினர் தாக்கல் நேற்று நிறைவு பெற்றது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக திமுக நாம் தமிழர் கட்சி தவெக என முப்பதுக்கு மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது

இதில் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் அருண் குமார் வந்திருந்தார், அவரது வேட்புமனுவில் சில தவறுகள் இருந்ததால் அதை திருத்த தேர்தல் அதிகாரி அவகாசம் அளித்திருந்தார் அவர் திடீரென அங்கிருந்து மாயமாகிவிட்டார்

Continues below advertisement

தொடர்ந்து வெளியில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குவிந்த நிலையில் ஒருவரின் செல்போன் அழைப்பிற்கு அருண்குமார் அழைத்து நான் அங்கிருந்து சென்று விட்டதாகவும் என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி சென்று விட்டார்

இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் எங்களை உள்ளே அனுமதி இல்லை என்று கூறி காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவு வருகிறது. இந்த நிலையில் அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். 

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் காணாமல் போன நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த வேட்பாளர் அருண்குமார் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார் ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வலசையூர் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் பொறுப்பு வகித்தவர் குறுகிய காலத்தில் வேறு கட்சிக்கு தாவியா அவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்று மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார் அதனை தொடர்ந்து தான் அண்மையில் தவெக வில் இணைந்த இவருக்கு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கப்பட்டது

இவர் வேட்பாளராக அறிவித்த போது நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியாக இருந்தவர் மேலும் அடிக்கடி கட்சி மாறியும் பழக்கப்பட்டவர் என்பதால் கடைசி நேரத்தில் பல்டி அடித்து எடப்பாடி பக்கம் கவிழ்ந்து விடுவாரே என்ற கலக்கத்தில் தான் தவெகட்சி நிர்வாகிகள் இருந்தனர் இன்று அதனை நிரூபிக்கும் வகையில் தான் தற்பொழுது வேட்பாளர் மாயம் ஆகி உள்ளார்.