TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே என தனது உரையை தொடங்கிய விஜய், ஏப்ரல் 16ம் தேதி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிடுகிறோம் என கூறியுள்ளார்.

திருப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள அவிநாசி சந்திப்பில் மக்களை சந்தித்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர் வர தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து பெருமாநல்லூர் வந்த அவர் மிகவும் பதற்றமாகவே காணப்பட்டார். தொண்டர்கள், ரசிகர்களால் தன்னுடைய நிகழ்ச்சியால் ஏற்பட்ட தாமதம் காரணமாக பதட்டமாக இருந்ததாக சொல்லப்பட்டது.
விஜயை 100 சதவிகிதம் நம்பலாம்
இதனையடுத்து, “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே என தனது உரையை தொடங்கிய விஜய், ஏப்ரல் 16ம் தேதி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிடுகிறோம். இப்போது சில வாக்குறுதிகளை தெரிவிக்கிறேன் என சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள், சிறு குறு வணிகர்களுக்கான வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார். பின்னர் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நீங்கள் இந்த விஜயை 100 சதவிகிதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன். நன்றி கடன் செலுத்த வந்துள்ளேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். அதனால் உங்களில் ஒருவனாக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இங்கு விசில் புரட்சி தேவை. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்” என தெரிவித்தார்.
காவல்துறைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்
இந்நிகழ்வில் பேசிய விஜய், குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும். அடிப்படை காவலர்களுக்கான பணி ஊதியம் ரூ.18,200ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும் நெசவாளர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு 100 சதவிகிதம் மின் கட்டணம் விலக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் சேலம், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் அமைக்கப்படும். பெண் காவலர்கள் ஓய்வெடுக்க தனி ஓய்வறை அமைக்கப்படும். அனைத்து அரசு ஊழியர்களிடம் இடமாற்றம் வெளிப்படையாகவும், கால வரையறைக்கு உட்பட்டும் நடத்தப்படும். காவல்துறையினரின் பணி நேரங்கள் முறைபடுத்தப்படும். அதிக பணி சுமை கொண்ட காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை விடப்படுவது உறுதிச்செய்யப்படும். பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிவறை அமைக்கப்படும் என வாக்குறுதிகளை தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















