பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டி பகுதியில் த.வெ.க தலைவர் விஜய் விசில் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கை அசைத்தபடி சைகையில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார் 

பொன்னேரி வேட்பாளர் ரவி மற்றும் கும்மிடிப்பூண்டி வேட்பாளர் விஜயகுமார் ஆகியோரை ஆதரித்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து வடமாநிலம் செல்லும்  பகுதியில் 2 கி.மீ.தூரம் சென்று பின்பு பஞ்செட்டி வளைவில் திரும்பி மீண்டும் சென்னையை நோக்கி 2 கி.மீ. தூரம் வரை சாலை வளம்  வந்தார்  விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்காக 800-க்கும் மேற்பட்ட காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் 

த.வெ.க  தொண்டர்கள்  ஆபத்தான முறையில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் மீது ஏறி குதித்து சென்றனர்.தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனதாம் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

 சாலை இருந்து தொண்டர்கள் அனைவரும் பாதுகாப்பு பகுதிக்கு சென்றால் மட்டுமே விஜய் உள்ளே வர முடியும் தயவு செய்து வெளியேறும்படி காவல் துறையினர் கேட்டுக் கொண்ட பிறகு கலைந்து சென்றனர்.  சிறிது நேரத்தில் விஜய் வருவதை பார்த்தவுடன் மறுபடியும் தவெகதொண்டர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர்.

 வேட்பாளர்களை ஆதரித்து கை அசைத்தபடி சைகையில்  தொண்டர்களிடையே வாக்கு கேட்டார் தொண்டர்கள் அவர்கள் வைத்திருந்த சால்வையை எடுத்து  விஜய் மீது   வீசினர். கும்மிடிப்பூண்டி வேட்பாளர் விஜயகுமார் பொன்னேரி வேட்பாளர் ரவி ஆகியோரின் கரங்களைப் பிடித்து மேலே உயர்த்தி இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டார் 

 மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலரின் செருப்புகள் சாலைகளில் சிதறி கடந்தது. கூட்டத்திற்கு ஆடியோ அமைத்து தந்தவர்களின் நான்கு மைக் காணவில்லை தயவு செய்து தரும்படி மைக்கில் கேட்டுக் கொண்டார்கள்.  கூட்டத்திற்கு வந்த இரண்டு பெண்களின் செல்போன்கள் காணாமல் போனதால் கண்ணீருடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். விஜய் பரப்புரை காரணமாக  தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது