தமிழத்தில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்தது. 234 தொகுதிகளில் பல்வேறு கட்சி சார்பாக 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ள நிலையில், 4 கோடியே 87 லட்சத்து 99ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. தபால் ஓட்டுக்களை பொறுத்தவரை 5 லட்சத்து 80ஆயிரம் வாக்குகள் பதிவானது. இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அடுத்தாக 8.30 மணி முதல் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது.
கொளத்தூரில் ஸ்டாலின் முன்னிலை
இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் அதிமுக சார்பாக சந்தான கிருஷ்ணனும், தவெக சார்பாக விஎஸ் பாபுவும் போட்டியிட்டனர். இதில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு முதல் இடத்தை பிடித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இரண்டாம் இடத்திலும். அதிமுக வேட்பாளர் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உதயநிதி முன்னிலை
இதே போல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் செல்வம் முன்னிலையில் உள்ளார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், நாதக சார்பில் ஆயிஷா பேகம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
