234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ளார். சென்னை, கிண்டியில் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதன்படி ’’நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள் அமைக்கப்படும்.

திருச்சி நிர்வாகத் தலைநகராகவும் கோவை வணிகத் தலைநகராகவும் இருக்கும். கன்னியாகுமரி மெய்யியல் தலைநகராக உருவாக்கப்படும். 

Continues below advertisement

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு என தனித் தொகுதிகள் போராடிப் பெறப்படும். 

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது உறுதி செய்யப்படும். 

தமிழ்நாட்டுக்கு உள்ளே, ரயில்வே நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.

நீர்வளம் பெருக்கப்படும், 

இலவச குடிநீர் 

அடிப்படைத் தேவையான குடிநீர் விற்பனை முறை ஒழிக்கப்பட்டு, தூய குடிநீர் இலவசமாக வழங்கப்படும்,

 இயற்கை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சித்த மருத்துவ அமைச்சகம் உருவாக்கப்படும். 

மது, புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் ஒழிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் அளிக்கப்பட்டுள்ளன’’

என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நாம் தமிழர் கட்சி சார்பில் அளிக்கப்பட்டு உள்ளன.  

கூட்டணிகளோடு களமிறங்கும் பெரிய கட்சிகள்

தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியோடு களத்தில் இறங்குகிறன. திமுகவில் 21 கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அதிமுகவில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 

அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் தனித்துக் களமிறங்குகின்றன. கட்சி ஆரம்பித்த நாள் முதலாகவே நாதக, தனித்தே களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முழு வாக்குறுதிகளையும் கீழே விரிவாகக் காணலாம்.