தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என்று தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்னும் 22 நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய அனைத்துக் கட்சித் தலைவர்களும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாமகவின் தர்மபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணி, முன்னாள் அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குக் கேட்டார்.

Continues below advertisement

தொடர்ந்து சௌமியா அன்புமணி பேசியதாவது:

தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். எனவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை

தர்மபுரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அடிப்படை குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்த வேண்டி உள்ளன.

தர்மபுரி மாவட்டத்திற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய தேவை உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம், சிப்காட் தொழிற்சாலைகள் ஆகியவை கொண்டு வந்து தர்மபுரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டிய தேவை உள்ளது.

அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்

இவை அனைத்தையும் நிறைவேற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கூட்டணிக் கட்சிகள் அனைவரும் மிக ஒற்றுமையாக சேர்ந்து உழைத்தால் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம்’’.

இவ்வாறு செளமியா அன்புமணி தெரிவித்தார்.