விழுப்புரம் : தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,புறம்பாக செயல்படுவதாகவும் அண்ணாமலை ஒன்றிய அரசின் ஊழலை பற்றி முதலில் பேசட்டும் அவர் பாஜக புறக்கணித்த தலைவர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் வளவனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது பேசித இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையே நடைபெறுகிற தேர்தல் அல்ல தமிழகத்தில், தலைமை செயலாளர் காவல் துறை அதிகாரிகள் திடீரென மாற்றபடுகிறார்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் புறம்பாகவும் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் பாஜகவினர் புகார் கொடுத்தால் உடனடியாக மாற்றபடுகிறார்கள் தேர்தல ஆணையத்தின் தலைவர் ஒரு தலைபட்டசமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
ஐந்து மாநில தேர்தல் நடைபெறுகிற நிலையில் நாடாளுமன்றத்தை நடத்துகிறார்கள் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக நாடாளுமன்ற உறுப்பினர் புகார் அளித்தால் நிராகரிப்பதாகவும்,ஒன்றிய அரசாங்கம் ஜனநாயகம் தன்மையற்ற அரசாக செயல்படுவதாகவும், நாட்டிலையே அதிக வரி செலுத்துகிற மாநிலமாக தமிழகம் உள்ளது ஆனால் குறைந்த நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது பாஜக ஆளும் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். ஒன்றிய அரசாங்கம் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருகின்றனர். அதனை தமிழகம் ஏற்காமல் உள்ளது ஏனென்றால் பள்ளி படிப்பு பாதியிலையே நிற்க கூடாதென என்பதால் தான் என்றும் மூன்றாவதாக மொழி ஏற்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல, ஒன்றிய அரசு தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி துணை போவதாக குற்றஞ்சாட்டினார்.
நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டாமென ஒன்றிய அரசு கூறுகிறது. அவர்கள் என்ன கூறினாலும் ஊக்கதொகை மாநில அரசின் நிதியிலிருந்து தருவோம் என முதல்வர் தெரிவிக்கிறார். ஒன்றிய அரசு செய்வது நாயை வைக்கோலில் கட்டி போடுவது போல் உள்ளது நாயும் வைக்கோலை உட்கொள்ளாது வைக்கோலை உட்கொள்ள வரும் மாட்டினையும் உட்கொள்ள விடாது என்பது போல் உள்ளதாக விமர்சனம் செய்தார்.தமிழக முதல்வர் யாரும் சிந்திக்காத அற்புதமான 8 ஆயிரம் டோக்கன் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதாகவும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதால் வாக்கு கேட்பதற்கு தார்மீக உரிமை உள்ளது என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி நல்ல மனிதர் தான் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆவேன் என கனவு கான்கிறார்.
அவர் பேசும் போது நாகரீகமாக பேச வேண்டும் பால்டாயில் குடித்தபோதே உதயநிதி இறந்திருக்க வேண்டுமென எடபாடி பழனிச்சாமி தெரிவிக்கிறார் இப்படி பேசுவது அழகல்ல நாங்கள் கூறுகிறோம் எடப்பாடி பழனிச்சாமி பல ஆண்டுகள் வாழ வேண்டும் ஆனால் நீங்கள் பேசுகின்ற கொள்கை இழிவான பேச்சுக்கள் வேண்டாம் இல்லையென்றால் நாங்கள் உங்களை மாற்றுவோம்நல்லக்கன்ணு உயிரிழந்த போது மாலை அணிவித்து மரியாதை செலுத்த வராத எடப்பாடி பழனிச்சாமி ஏன் வரவில்லை என்று கேட்டபோது தனது தாயார் இறந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவில்லை அதனால் வரவில்லை என்று தெரிவிக்கிறார்.
முதல்வர், துணை முதல்வர் சாகவேண்டுமென கீழ்த்தரமான அரசியலை எடப்பாடி பழனிச்சாமி செய்து வருதாக தெரிவித்தார். அண்ணாமலை ஒன்றிய அரசின் ஊழலை பற்றி முதலில் பேசட்டும் பாஜக தனி நபர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை தனி நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதால் அதை பற்றி தெரிந்தால் அண்ணாமலை பேசட்டும் இல்லையெனில் வாயை மூடிட்டு சும்மா இருக்கட்டும், பாஜக புறக்கணித்த தலைவர் அண்ணாமலை என தெரிவித்தார்.
