J-K Election Phase 2: ஜம்மு & காஷ்மீர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வேட்பாளர்களாக உள்ளனர்.


ஜம்மு & காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்:


ஜம்மு&காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரேதசங்களாக பிரிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கு முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த 18ம் தேத்ஜி வாக்குப்பதிவு நடைபெற்றது. அததொடர்ந்து, இன்று இரண்டாம் கட்டமாக  26 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,502 வாக்குச் சாவடிகளில் 13,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பாதுகாப்பான வாக்களிக்கும் சூழலை உறுதி செய்வதற்காக காவல் துறை, ஆயுதமேந்திய போலீஸார் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.


வாக்குச்சாவடி விவரங்கள்:


காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்று மற்றும் ஜம்மு பிரிவில் மூன்று உட்பட ஆறு மாவட்டங்களில் உள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளுக்கு போட்டியிடும் 239 வேட்பாளர்களின் தலைவிதியை 25 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். வாக்காளர்கள் பங்கேற்பை அதிகரிக்க, இந்த கட்டத்தில் 157 சிறப்பு வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன, இதில் பெண்களால் நிர்வகிக்கப்படும் 26 'பிங்க் வாக்குச் சாவடிகள்' மற்றும் 31 எல்லை வாக்குச்சாவடிகள் அடங்கும். முதற்கட்ட வாக்குப்பதிவில் 61.38% வாக்குகள் பதிவாகின. 


அதிகபட்சமாக ஸ்ரீநகர் மாவட்டத்தில் 93 வேட்பாளர்களும், புட்காமில் 46 பேரும், ரஜோரியில் 34 பேரும், பூஞ்சில் 25 பேரும், கந்தர்பாலில் 21 பேரும், ரியாசியில் 20 பேரும் போட்டியிடுகின்றனர். 


நட்சத்திர வேட்பாளர்கள்:


இத்தேர்தலில் கந்தர்பால் மற்றும் புட்காமில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் மத்திய ஷால்டெங்கில் போட்டியிடும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக திகழ்கின்றனர். பாஜகவின் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ரவீந்தர் ரெய்னா, 2014 சட்டமன்றத் தேர்தலில் வென்ற ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனது நவ்ஷேரா தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.


பொறியாளர் ரஷீத்தின் முந்தைய மக்களவைத் தேர்தல் வெற்றியை அப்துல்லாவுக்கு எதிராகப் பிரதிபலிக்கும் நம்பிக்கையில், பீர்வா மற்றும் கந்தர்பல் பிரிவுகளில் போட்டியிடும் பர்காதி என்றழைக்கப்படும் பிரிவினைவாதத் தலைவரான சர்ஜன் அகமது வாகே சிறையில் இருப்பதன் காரணமாகவும் இரண்டாம் கட்ட தேர்தல் கவனத்தை ஈர்க்கிறது. மற்ற குறிப்பிடத்தக்க வேட்பாளர்களில் அப்னி கட்சியின் தலைவர் அல்தாஃப் புகாரி (சன்னபோரா) மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அலி முகமது சாகர் (கன்யார்), அப்துல் ரஹீம் ராதர் (ச்ரார்-இ-ஷரீப்), மற்றும் சவுத்ரி சுல்பிகர் அலி (புதால்) ஆகியோர் அடங்குவர்.